செய்திகள் :

`Trump, வெனிசுலாவின் தற்காலிக அதிபர்' - ட்ரம்ப்-ன் சமூக வலைதளப் பதிவால் எழுந்த சர்ச்சை!

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் தன்னை "வெனிசுலாவின் தற்காலிக அதிபர்" எனப் பதிவிட்டிருக்கும் செய்தி, உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த மாத தொடக்கத்தில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு ஆதரவளிப்பதாகக் குற்றம்சாட்டிய அதிபர் ட்ரம்ப் நிர்வாகம், வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. நிக்கோலஸ் மதுரோவையும், அவரின் மனைவி சிலியா ஃபுளோரஸையும் ஜனவரி 3-ம் தேதி கைதுசெய்து, அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றது. அதிபர் ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் சர்ச்சையானது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இதற்கிடையில், கைதுசெய்யப்பட்ட நிக்கோலஸ் மதுரோவும், அவரின் மனைவியும் அமெரிக்காவின் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா உட்பட பல நாடுகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கின்றன.

இந்த விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ``சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும்" எனக் குறிப்பிட்டு கவலை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், நேற்று ட்ரூத் சோஷியலில் ட்ரம்ப், ``கியூபா வெனிசுலாவிலிருந்து கிடைத்த பெரும் அளவிலான எண்ணெய் மற்றும் பணத்தைக் கொண்டு வாழ்ந்து வந்தது. அதற்குப் பதிலாக, கியூபா இரண்டு வெனிசுலா சர்வாதிகாரிகளுக்கும் பாதுகாப்பு சேவைகளை வழங்கியது. ஆனால் இனிமேல் அது நடக்காது.

டெல்சி ரோட்ரிக்ஸ் | Delcy Rodriguez
டெல்சி ரோட்ரிக்ஸ் | Delcy Rodriguez

கியூபாவிற்கு இனி எண்ணெய், பொருளாதாரம் என எதுவும் செல்லாது. காலம் கடந்துபோவதற்குள், கியூபா ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும்" என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, அவரின் பதிவில் விக்கிப்பீடியா சுயவிவரப் பக்கத்தின் எடிட் செய்யப்பட்டப் படத்தைப் பகிர்ந்திருந்தார். அதில், `` 'வெனிசுலா நாட்டின் தற்காலிக அதிபர்' - பதவிக்காலம் ஜனவரி 2026" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், வெனிசுலாவின் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அதிகாரபூர்வமாக தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

TVK Vijay: 7 மணி நேர விசாரணை: சிபிஐ-யிடம் விஜய் கொடுத்த வாக்குமூலம் என்ன?

செப்டம்பர் 27, 2025 அன்று கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) முன் ஆஜரானார். காலை 10.30 ... மேலும் பார்க்க

அதிமுக மீதான அதிருப்தி; திமுக கூட்டணியில் ராமதாஸா? - சூரியக் கட்சிக்கு ப்ளஸா... மைனஸ்ஸா?!

தனக்கு முன்பாக மகன் அன்புமணியை அழைத்துக் கூட்டணியை இறுதி செய்ததில் என்.டி.ஏ-வின் மீதும் எடப்பாடியின் மீதும் பெரும் அதிருப்தியில் இருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.அதிருப்தியில் ராமதாஸ்பாமக நிறுவனர் ரா... மேலும் பார்க்க

ADMK: ``ராஜபாளையம் தொகுதியில் நான் போட்டியிட்டால் 100% வெற்றி" - நடிகை கௌதமி ஓப்பன் டாக்!

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் ... மேலும் பார்க்க

வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained

ஓர் இரவு அனைத்தையும் மாற்றுமா? ஈரானில் மாற்றியிருக்கிறது... மாறியிருக்கிறது. கடந்த டிசம்பர் 28-ம் தேதி காலையில் இருந்து ஈரானில் பெரும் போராட்டம் வெடித்திருக்கிறது. இதற்கு காரணம், முந்தைய நாள் உறங்கும்... மேலும் பார்க்க

கீழ்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் ரௌடி வெட்டிக் கொலை; ஆளும் அரசைச் சாடும் எதிர்க்கட்சிகள்!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில், பிரசவ வார்டின் எதிரே உறங்கிக்கொண்டிருந்த பிரபல ரௌடி ஆதி (20) இன்று அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்ப... மேலும் பார்க்க

`இரட்டை இலை' பானை; நயினார் செயலால் அண்ணாமலை ஷாக் - கோவை பாஜக பொங்கல் விழா ஹைலைட்ஸ்!

பாஜக அகில இந்திய செயல் தலைவர் நிதின் நபின் 2 நாள்கள் பயணமாக நேற்று முன் தினம் கோவை வந்தார். சனிக்கிழமை மாலை தனியார் கல்லூரியில் ஒரு நிகழ்ச்சி, பாஜக சக்தி கேந்திர நிர்வாகிகள் கூட்டம், பாஜக மாநில மையக்க... மேலும் பார்க்க