செய்திகள் :

Vijay: "கஜானாவைத் துடைத்து வைத்திருக்கிறார்கள்" - விஜய் சொன்ன 'வெள்ளை அறிக்கை' என்றால் என்ன?

post image

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கையோடு, அதே மேடையில் முதல் மூன்று கையெழுத்துகளைப் போட்டார் தவெக தலைவர் விஜய். அடுத்து, மக்களுக்கு சின்ன 'ஸ்பீச்'சும் கொடுத்தார். இது இரண்டுமே தமிழ்நாடு அரசியலில் புதுகாட்சிகள்.

அந்தப் பேச்சில் விஜய் குறிப்பிட்ட முக்கியமான ஒன்று, "ரூ.10 லட்சம் கோடிக்கும் மேல் கடன் வாங்கி வைத்திருக்கிறார்கள். கஜானாவைத் துடைத்து வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் இந்த அரசு நம் கைகளுக்கு வந்திருக்கிறது.

எது எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என விரும்புகிறேன்" என்பதுதான்.

தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தப் பேச்சில் வெள்ளை அறிக்கை என்றால் என்ன என்கிற கேள்வி பலருக்கு எட்டி பார்த்திருக்கும். அந்தக் கேள்விக்கான பதில்தான் இதோ...

குறிப்பிட்ட ஒரு விவகாரத்தைப் பற்றி முழுவதுமாக ஆய்வு செய்து, அதன் வெளிப்படையான அறிக்கை அரசாங்கம் வெளியிடுவதே 'வெள்ளை அறிக்கை'.

இந்தியாவில் நடந்த 200 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சியால், இன்னும் பல பிரிட்டிஷ் நடைமுறைகள் இந்தியாவில் இருந்து வருகின்றன. அதில் ஒன்று தான் இதுவும்.

பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறைப்படி, முக்கியமான பிரச்னைகளுக்கு வெள்ளை அறிக்கை தயார் செய்வது வழக்கம்.

நெருக்கடி நிலையை மக்களுக்கும், பிற கட்சிகளுக்கும் எடுத்துக்காட்ட பொதுவாக வெள்ளை அறிக்கை பயன்படுத்தப்படும்.

விஜய் வெளியிடும் வெள்ளை அறிக்கை என்பது 'நிதி அடிப்படையிலானது' என்று புரிந்துகொள்ளப்படுகிறது.

கடன்
கடன்

அதனால், அந்த அறிக்கையில் தமிழ்நாட்டில் நிதி நிலைமை எப்படி இருக்கிறது, எவ்வளவு கடன் இருக்கிறது, இன்னும் எத்தனை கடன் வாங்க முடியும், வருமானத்தை எப்படி பெருக்கலாம் போன்றவை இடம்பெற்றிருக்கும்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு, திமுக ஆட்சியமைத்த போதும், அப்போதைய தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்தார் குறிப்பிடத்தக்கது.

இபிஎஸ் vs சி.வி.சண்முகம்: சட்டசபையில் வெளிச்சத்திற்கு வந்த அதிமுக பூசல்; யாருக்கு எத்தனை MLA ஆதரவு?

2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும் சவாலாக அமைந்துவிடவில்லை. இந்த முடிவால் அதிமுகவும் சத்தமில்லாமல் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதிமுக தொடங்கிய கால... மேலும் பார்க்க

"எனக்கு மட்டும் மகள் இருந்தா..." - MGR-ஐ கவர்ந்த ஜே.சி.டி பிரபாகர்! புது சபாநாயகரின் அரசியல் பயணம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமர்ந்துள்ளது. விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார். பதினேழாவது சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று காலை ப... மேலும் பார்க்க

நாளை மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு: தவெகவிற்கு அடுத்த டெஸ்ட்; 'முதல்வர்' விஜய்க்கு இன்னும் ஒரு செக்

பெரும்பான்மைக்காக பிற கட்சிகளிடம் கூட்டணி பேச்சுவார்த்தை... ஆளுநருடன் சந்திப்பு... ஆட்சி அமைக்க உரிமைக் கோருதல்... ரிப்பீட்டு - இதுதான் தவெக தலைவர் விஜய்யின் கடந்த வார ரோட்டீனாக இருந்தன. இவை அத்தனையைய... மேலும் பார்க்க

'தங்கம் மற்றும் பெட்ரோல் பயன்பாட்டைக் குறையுங்கள்' - பிரதமர் மோடியின் கோரிக்கையை வலியுறுத்திய ஆளுநர்

மத்தியக் கிழக்கு போர் பதற்றத்தால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்குமாறு நாட்ட... மேலும் பார்க்க

ஈரான் சிறையில் நேர்ந்த கொடுமைகள்; `அமைதி’ நோபல் பரிசு வென்ற நர்கீஸ் முகமதி ஜாமீனில் விடுதலை!

ஈரானின் எவின் (Evin) சிறைச்சாலை உலகின் மிகக் கொடூரமான சிறைகளில் ஒன்று. அந்த இருண்ட சுவர்களுக்குள் இருந்து ஒரு பெண்ணின் குரல் உலகம் முழுவதும் ஒலிக்கிறது என்றால், அது நர்கீஸ் முகமதி என்ற மனித உரிமைப் போ... மேலும் பார்க்க

"உயிரைப் பணயம் வைத்து வேலை செய்கிறோம்... காப்பீடு வசதி கூட இல்லை" - டெலிவரி பணியாளர்கள் வேதனை

இன்றைய நம் நவீன வாழ்வில் 'விரைவு டெலிவரி' என்ற வசதி சாதரணமான முன்னேற்றமாகத் தோன்றினாலும், அதன் பின்னால் இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கூடிய மக்களின் உழைப்பு சாதரணமானது அல்ல. குடும்பச் சூழலினால் இளம் வயதிலே... மேலும் பார்க்க