செய்திகள் :

பொள்ளாச்சி: கார் மீது லாரி மோதி கோர விபத்து; 4 பேர் உயிரிழந்த சோகம்

post image

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனபால் (37). இவர் தனது மனைவி மேனகா (35), மகள் கனிஷ்கா (17), மகன் சுர்ஷித் (12) மற்றும் உறவினர் சினேகா (23) ஆகியோர் உடன் ஒரு காரில் பொள்ளாச்சி பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

அப்போது பொள்ளாச்சி – பல்லடம் சாலையில் உள்ள நெகமம் பகுதியில் கார் வந்து கொண்டிருந்தபோது, அதிவேகமாக எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்தக் கோர விபத்தில் தனபால், மேனகா, சினேகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

car accident
car accident

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட கனிஷ்கா, சுர்ஜித் ஆகியோர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் கனிஷ்காவும் உயிரிழந்தார். சுர்ஜித்க்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற நெகமம் போலீசார் சடலங்களை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அதிவேகமாக லாரியை இயக்கி விபத்தை ஏற்படுத்திய கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் (39) என்ற லாரி ஓட்டுரை போலீசார், கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா: ரீல்ஸ் மோகம்... குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உட்பட 4 மைனர் சிறார்கள் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் உள்ள கோலாப்புரி பகுதியை சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் வாலிபர்கள் அருகில் இருக்கும் தத்கேதா பகுதியில் இருக்கும் குளத்திற்கு சென்றனர். அவர்கள் விடுமுறையை மகிழ்ச்சி... மேலும் பார்க்க

மும்பை-புனே நெடுஞ்சாலையில் கார் விபத்து; சரத்பவார் மகள் சுப்ரியாவைக் காப்பாற்றிய சீட்பெல்ட்

முன்னாள் மத்திய அமைச்சர் மகளும், பாராமதி தொகுதி எம்.பி.யுமான சுப்ரியா சுலே புனேயில் இருந்து மும்பைக்கு காரில் வந்து கொண்டிருந்தார். புனே-மும்பை நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது அதே வழித்தடத்த... மேலும் பார்க்க

டெல்லி: 4 மாடி குடியிருப்பில் தீ விபத்து; 9 பேர் பலி; 5 பேரைக் காணவில்லை; ஏ.சி வெடித்ததுதான் காரணமா?

டெல்லியில் மக்கள் நெருக்கடி அதிகமுள்ள விவேக் விகார் பகுதியில், இன்று அதிகாலை 4 மணிக்கு நான்கு மாடிகள் கொண்ட குடியிருப்புக் கட்டிடத்தில் திடீரெனத் தீப்பிடித்துக்கொண்டது. கட்டிடத்தின் 2வது மாடியில் பற்ற... மேலும் பார்க்க

ஆரஞ்சு அலர்ட் மீறல்; 'நோ' ஜாக்கெட் - மத்திய பிரதேச க்ரூஸ் விபத்து காரணங்கள்; 5 தமிழர்கள் உயிரிழப்பு

நேற்று முன்தினம் (ஏப்ரல் 30), மத்திய பிரதேசம் பர்கி அணையில் க்ரூஸ் விபத்து ஒன்று நடந்தது. அது இரவு 6 - 6.30 மணியளவில் நடந்துள்ளது. இந்த விபத்திற்கு காரணம் என்ன? க்ரூஸ் விபத்து கமாரியா தீவிற்கு அருகே ந... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேச படகு விபத்து: தாய்-மகன் ஒரே Life Jacket அணிந்து தப்பிக்க முயன்று உயிரிழந்த பரிதாபம்

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகில் நர்மதா ஆற்றில் சொகுசு படகில் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப்பார்க்கச் சென்றனர். படகு ஆற்றின் நடுவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பலத்த புயல் காற்று வீசியது. இதன... மேலும் பார்க்க

டெல்லியிலிருந்து கிளம்பிய ஸ்விட்சர்லாந்து விமானம்; இன்ஜினில் தீ பிடித்து விபத்து: 6 பயணிகள் காயம்!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சூரிச் நகருக்கு Flight No. LX147 என்ற விமானம் புறப்படத்தயாராக இருந்தது. விமானத்தில் 223 பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலை விமானம் புறப்பட்டபோது அதன் ஒரு ... மேலும் பார்க்க