செய்திகள் :

அதிமுக: "இபிஎஸ்-ஐ ஆஹா ஓஹோவென புகழ்ந்தவர்தானே செங்கோட்டையன்" - செல்லூர் ராஜு சாடல்!

post image

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

சமீபத்தில் கட்சியில் இருந்து விலகி நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ள செங்கோட்டையன் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 'இதே எடப்பாடி பழனிசாமியை ஆஹா ஓஹோ வெனப் புகழ்ந்தவர்தானே அவர்' எனச் சாடியுள்ளார் ராஜு.

விஜய்யின் தவெக கட்சியில் இணைந்த செங்கோட்டையன்
விஜய்யின் தவெக கட்சியில் இணைந்த செங்கோட்டையன்

செங்கோட்டையன் பற்றி செல்லூர் ராஜு, "ஆலமரத்திலிருந்து உதிரும் இலை போலத்தான் செங்கோட்டையன். பழுத்த இலை விழுந்தால் ஆலமரம் கருகியதாக அர்த்தமாகிவிடுமா?

விஜய் போல ஆயிரம்பேர் சொல்லியிருக்கிறார்கள். புதிதாக வருபவர்கள் நாங்கள் பத்தோடு பதினொன்றாக இருப்போம் என்றா சொல்வார்கள். ஆட்சிக்கு வருவோம் என்றுதான் சொல்வார்கள்.

எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து கட்சியில் இருப்பதாகச் சொன்னால் மட்டும்போதுமா? எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சி, சின்னம், அலுவலகம் எல்லாம் இங்கு இருக்கிறது.

விஜய், செங்கோட்டையன்

ஒன்பது தடவை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார், பலமுறை அமைச்சராக இருந்திருக்கிறார். அதைக் கொடுத்தது யார்? செங்கோட்டையனுக்காகவா ஓட்டு போட்டார்கள். இரட்டை இலை சின்னத்தைப் பார்த்து மக்கள் வாக்களித்தார்கள்.

இதே எடப்பாடியாரை ஆஹா ஓஹோ வெனப் புகழ்ந்தவர் தானே செங்கோட்டையன். இன்றைக்கு ஏதோ ஒரு கோபத்தில் போகலாமா. எந்தக் கட்சியும் வேண்டாம், எந்தப் பதவியும் வேண்டாமென எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியில் இருப்பவர்தான் ரோஷமானவர். அப்படி இருப்பவன்தான் உண்மையான அண்ணா திமுக-காரன்." எனப் பேசினார்.

``எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?" - நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றும் விவகாரம் மிகப்பெரிய பிரச்னையாக மாறி இருக்கிறது.தமிழ்நாடு தொடங்கி நாடாளுமன்றம் வரை இந்த விவகாரம் விவாதப் பொருளாகியிருக்கிறது.`தமிழகத்தை அயோத்தியாக மாற்றுவதற்கு ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "உள்நோக்கம் கொண்ட தீர்ப்பு; மதக் கலவர முயற்சி" - முத்தரசன் காட்டம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதியளித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பு, பெரும் விவாதங்களுக்கு வித்திட்டது. இந்துத்துவ அமைப்புகள் மற்றும் பாஜகவை... மேலும் பார்க்க

கூட்டணி `டீல்’ - ராகுல் காந்தியை சந்தித்த சபரீசன்! திடீர் விசிட்டின் பின்னணி என்ன?

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் தொடங்கிவிட்ட... மேலும் பார்க்க

எம்.ஜி.ஆர் சாதனையை சமன் செய்த ஒரே முதல்வர் - மக்கள் மன்றத்தில் ஜெ.ஜெயலலிதா!

ஜெயலலிதாவை ஏன் பிடித்தது தமிழ்நாட்டு மக்களுக்கு?‘யாருக்குங்க பிடிச்சது, அவங்க நீதிமன்றத்தால் ஏ 1 குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர்’ என்று சொல்லாம் சிலர்.அவர் எடுத்த நடவடிக்கைகள் விமர்சனங்களுக்கு ஆளாகி இர... மேலும் பார்க்க

முறையான பராமரிப்பின்றி இருக்கும் கும்பகோணம் புதிய பேருந்து நிலையம்... அவதியுறும் பொதுமக்கள்!

கும்பகோணம் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் போதுமான வசதிகள் இல்லையென்று மக்கள் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர். இதுகுறித்து அங்கிருந்த பயணிகளிடம் கேட்கும் போது," கும்பகோணம் பேருந்து நிலையம் மிக ... மேலும் பார்க்க