செய்திகள் :

`அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது, எதிரிகளும் கிடையாது’– திமுக கூட்டணி குறித்து வானதி விளக்கம்

post image

பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் நடத்தி வரும் மக்கள் சேவை மையம் சார்பில் கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டிகள் கோவை தனியார் கல்லூரியில் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வானதி சீனிவாசன், “நீட் தேர்வை பா.ஜ.க கொண்டு வரவில்லை, அது உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் வந்தது. தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றால்,  மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும். நீட் தேர்வில் உள்ள பிரச்னைகளை மத்திய அரசு தீர்த்து வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் நீட் தேர்வு வந்த பின்னரே மருத்துவப் படிப்பிற்கு உள்ளே செல்கின்றனர். இதற்கு முன்னர் பணம் படைத்தவர்கள் மட்டும் செல்லும் நிலை இருந்தது. நீட் தேர்வை மாணவர்களும், பெற்றோர்களும் ஏற்றுக் கொண்டனர். அரசியலுக்காக என்ன வேண்டுமானாலும் தீர்மானம் நிறைவேற்றிக் கொள்ளலாம்.

த.வெ.க அரசு பெண்களுக்கு, விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றவில்லை. கடந்த மூன்று மாத காலத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் எங்கும் குறையவில்லை. சட்டம், ஒழுங்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. சேரில் உட்கார்ந்து இருப்பவர்கள்தான் மாறி இருக்கிறார்களே தவிர, வேறு எந்த நிலையும் மாறவில்லை. கிறிஸ்துவ மத நம்பிக்கையை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சபாநாயகர் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். நிதியமைச்சர் பேசும்போதுகூட தமிழ் மொழியை விட, தன்னுடைய கிறிஸ்துவம் உயர்ந்தது எனப் பேசுகின்றார். கிறிஸ்துவ மத பிடிப்பாளர்கள் ஆதிக்கம் செலுத்துகின்ற நிலைமை இருக்கின்றதா என்ற சந்தேகம் இருக்கின்றது. முதல்வர் இதற்கு ஆதரவு கொடுக்கின்றார் என்றால், இது மற்றவர்கள் மத்தியில் ஸ்ட்ராங்கான சந்தேகத்தை ஏற்படுத்தும்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு போன முறை ஏன் நிராகரித்தார்கள்? இந்த முறை ஏன் நிராகரித்திருக்கிறார்கள் ? எனப் பார்க்க வேண்டும். டி.பி.ஆர்-ஐ சரி செய்து மெட்ரோ வருவதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டுமே தவிர, ஒரே மாதிரியான டி.பி.ஆர்-ஐ அனுப்பினால், ஒரே மாதிரியான பதில்தான் வரும். புது அரசு தனி கமிட்டியை போட்டு மதுரை, கோயம்புத்தூர் பகுதிகளுக்கு தகுதியான அறிக்கையைக் கொடுத்தால் சரியாக இருக்கும்” என்றார்.

தி.மு.க பா.ஜ.க-வை நெருங்கி வருவதால், கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கின்றதா என்ற கேள்விக்கு, “உருவாகும் போது சொல்வார்கள். அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது... நிரந்தர எதிரிகளும் கிடையாது. கூட்டணி உருவாவதற்கு முன்னால், நீங்களே உருவாக்கி விடுவீர்கள் போல? அதற்கான சூழல் வரும்போது பார்க்கலாம்” என பதிலளித்தார்.

`தமிழ்தாய் வாழ்த்து, வந்தே மாதரம், ஜன கண மன என மொத்தம் 12 நிமிடங்கள் நிற்கணுமா?' - சசி தரூர் கேள்வி

கடந்த ஜூலை 29-ம் தேதி மாநிலங்களவையிலும், ஜூலை 30-ம் தேதி மக்களவையிலும் 'வந்தே மாதரம் திருத்த மசோதா' தாக்கல் செய்யப்பட்டது. இன்று இந்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார், குடியரசுத் தலைவர் திரௌபதி முர... மேலும் பார்க்க

கோவை: பொறியியல் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை – அதிர்ச்சி பின்னணி!

கள்ளக்குறிச்சியை சேர்ந்த அமுதன் (19) என்பவர், கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்து அமுதன் படித்து வந்த ... மேலும் பார்க்க

விருட்டென கிளம்பிய சி.வி; கவிதை பாடிய கனிமொழி; 'பாசமலர்' பிரேமலதா - சட்டமன்ற ஹைலைட்ஸ்!

சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் ஐந்தாம் நாள் கூட்டம் இன்று நடந்திருந்தது. கோபப்பட்டு விருட்டென கிளம்பிய சி.வி.சண்முகம், பாசமலராக மாறிய பிரேமலதா என அவையில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்கள் இங்கே... மேலும் பார்க்க

திருக்குறள், பன்னிரு திருமுறைகள் ஆய்வாளர்களுக்கு ரூ.1 லட்சம் விருது: தமிழ்நாடு அறக்கட்டளை அறிவிப்பு!

'திருக்குறள் / பன்னிருதிருமுறைகள்' தொடர்பான ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அறக்கட்டளையின் சார்பில் 'திருவாளர்கள் கந்தசாமி மாணிக்கம் மற்றும் பத்மாவதி மாணிக்கம்' கல்வித் திட்டத்தின் கீழ்... மேலும் பார்க்க

``வேளாண் நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்த்த நிறைய விஷயங்கள் இல்லை"- சௌமியா அன்புமணி

சட்டமன்றத்தில் பாமக உறுப்பினர் சௌமியா அன்புமணி பேசுகின்ற விஷயங்களும் அதை வெளிப்படுத்துகின்ற முறையும், அனைவராலும் கவனிக்கப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது.சௌமியா அன்புமணிசமீபத்தில் மேகதாது அணை விவகாரம் ச... மேலும் பார்க்க