செய்திகள் :

`தமிழ்தாய் வாழ்த்து, வந்தே மாதரம், ஜன கண மன என மொத்தம் 12 நிமிடங்கள் நிற்கணுமா?' - சசி தரூர் கேள்வி

post image

கடந்த ஜூலை 29-ம் தேதி மாநிலங்களவையிலும், ஜூலை 30-ம் தேதி மக்களவையிலும் 'வந்தே மாதரம் திருத்த மசோதா' தாக்கல் செய்யப்பட்டது.

இன்று இந்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

ஆனால், இந்தத் திருத்த மசோதா விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது என்று சாடி, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மக்களவை உறுப்பினர் சசி தரூர்.

"நாடாளுமன்றத்தில் எந்தவித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்ட வந்தே மாதரம் சட்டத்திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

வந்தே மாதரம்
வந்தே மாதரம்

இதன்படி, எந்தவொரு அரசு விழாவின் தொடக்கத்திலும் முடிவிலும், தேசிய கீதத்துடன் சேர்த்து தேசியப் பாடலையும் முழுமையாகப் பாட வேண்டும்.

இரண்டு பாடல்களையுமே பெரிதும் மதிக்கும் ஒருவனாகவும், தேசிய கீதம் முழுமையோடும் தேசியப் பாடலின் முதல் இரண்டு சரணங்களைப் பாடத் தெரிந்தவனாகவும் (இதுவரை தேவைப்படாததால் மற்ற நான்கு சரணங்கள் எனக்குத் தெரியாது) இருந்துகொண்டு, நமது தீவிரப் பற்றாளர்கள் கவனிக்கத் தவறிய ஒரே ஒரு நடைமுறைச் சிக்கலை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அது மனித இயல்பு.

"ஜன கண மன" தேசிய கீதம் இசைக்கப்படும் போது, மக்கள் நியாயமான 52 வினாடிகள் மட்டுமே மரியாதையுடன் எழுந்து நின்று கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

ஆனால், தேசியப் பாடல் முழுமையாகப் பாடப்பட 3 நிமிடங்களும் 10 வினாடிகளும் ஆகிறது.

இப்போது தமிழ்நாடோ, இந்த இரண்டுக்கும் முன்பாக மேலும் 2 நிமிடங்களுக்குத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என முடிவெடுத்துள்ளது.

புதிய நாடாளுமன்றம்
புதிய நாடாளுமன்றம்

ஒவ்வொரு விழாவின் தொடக்கத்திலும் முடிவிலும், மக்கள் மொத்தம் 6 நிமிடங்கள்—அதாவது கூடுதலாக 12 நிமிடங்கள்—ஒரே இடத்தில் மரியாதையுடன் அமைதியாக எழுந்து நிற்பார்கள் என்று உண்மையிலேயே நாம் எதிர்பார்க்கிறோமா?

மரியாதையையும் பொறுமையையும் சட்டத்தின் மூலம் திணித்துவிட முடியுமா?

தேசியப் பாடலுக்கு கூடுதல் மரியாதையை உருவாக்க வேண்டும் என்ற இந்த மசோதாவின் நோக்கம் நிறைவேறாது, மாறாக அதற்கு நேர்மாறான விளைவே ஏற்படும் என நான் அஞ்சுகிறேன்".

கோவை: பொறியியல் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை – அதிர்ச்சி பின்னணி!

கள்ளக்குறிச்சியை சேர்ந்த அமுதன் (19) என்பவர், கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்து அமுதன் படித்து வந்த ... மேலும் பார்க்க

`அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது, எதிரிகளும் கிடையாது’– திமுக கூட்டணி குறித்து வானதி விளக்கம்

பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் நடத்தி வரும் மக்கள் சேவை மையம் சார்பில் கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டிகள் கோவை தனியார் கல்லூரியில் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்... மேலும் பார்க்க

விருட்டென கிளம்பிய சி.வி; கவிதை பாடிய கனிமொழி; 'பாசமலர்' பிரேமலதா - சட்டமன்ற ஹைலைட்ஸ்!

சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் ஐந்தாம் நாள் கூட்டம் இன்று நடந்திருந்தது. கோபப்பட்டு விருட்டென கிளம்பிய சி.வி.சண்முகம், பாசமலராக மாறிய பிரேமலதா என அவையில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்கள் இங்கே... மேலும் பார்க்க

திருக்குறள், பன்னிரு திருமுறைகள் ஆய்வாளர்களுக்கு ரூ.1 லட்சம் விருது: தமிழ்நாடு அறக்கட்டளை அறிவிப்பு!

'திருக்குறள் / பன்னிருதிருமுறைகள்' தொடர்பான ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அறக்கட்டளையின் சார்பில் 'திருவாளர்கள் கந்தசாமி மாணிக்கம் மற்றும் பத்மாவதி மாணிக்கம்' கல்வித் திட்டத்தின் கீழ்... மேலும் பார்க்க

``வேளாண் நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்த்த நிறைய விஷயங்கள் இல்லை"- சௌமியா அன்புமணி

சட்டமன்றத்தில் பாமக உறுப்பினர் சௌமியா அன்புமணி பேசுகின்ற விஷயங்களும் அதை வெளிப்படுத்துகின்ற முறையும், அனைவராலும் கவனிக்கப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது.சௌமியா அன்புமணிசமீபத்தில் மேகதாது அணை விவகாரம் ச... மேலும் பார்க்க