செய்திகள் :

"அரசு ஊழியர்களை கிரிமினல் போல நடத்துவதா?" - ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்

post image

கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாரத் மாதா கி ஜெ என்றால் பாரத அன்னையை வணங்குவோம் என்று அர்த்தம். இதில் மதவெறி இல்லை. பாரத் மாதா கி ஜெ என நாட்டிற்காகப் போராடிய லட்சக்கணக்கான தொண்டர்களை அமைச்சர் சேகர்பாபு கொச்சைப்படுத்துகிறார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

நாட்டை தாயாக வணங்குவது நமது நாட்டின் பாரம்பர்யம். பாரத் மாதா கி ஜெ பாஜக, ஆர்எஸ்எஸ் கோஷமல்ல‌. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் கோஷமும் அதுதான். இதற்காக காங்கிரஸ் கட்சியை திமுக கண்டிக்குமா? சேகர் பாபுவின் குறுகிய எண்ணமும், பிரிவினைவாத நோக்கமும் வார்த்தையாக வெளிப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் தன் பொறுப்பை மத்திய அரசு மற்றும் பெற்றோர்கள் மீது போட்டுத் தப்பிக்கப் பார்க்கிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. இளைஞர்கள் மிக மோசமான பாதைக்குச் செல்வதற்கு அரசும் ஒரு காரணம். தன் தோல்வி வெளியே தெரிந்துவிடும் என்பதால் முதலமைச்சர் மத்திய அரசு மீது பழி போடுகிறார்.

முதலமைச்சர்
முதலமைச்சர்

இதற்கு அரசின் தோல்விதான் காரணம். இதற்காக முதலமைச்சர் முழுப் பொறுப்பேற்க வேண்டும். டாஸ்மாக் போதை எல்லாம் போதை இல்லையா? டாஸ்மாக்கில் டார்கெட் வைத்து விற்பனை செய்வது போதையை ஊக்குவிப்பது இல்லையா?

தமிழ்நாடு தொடர்ச்சியாகப் போராட்டக் களமாக மாறி வருகிறது. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதி என்ன ஆனது என்று கேட்டு அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். தமிழ்நாடு அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசு ஊழியர்களை கிரிமினல் குற்றவாளிகளைப் போல கையாள்கிறார்கள்.

அரசு ஊழியர்கள் போராட்டம்
அரசு ஊழியர்கள் போராட்டம்

சாதாரண மக்கள், அரசு மீது கோபத்தில் உள்ளார்கள். அரசு ஊழியர்களுக்கு அதைவிட அதிக கோபம் உள்ளது. கோவை செம்மொழிப் பூங்காவை இன்னும் பார்க்கவில்லை. அதில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்" என்றார்.

திருச்சி: "தமிழ்நாட்டிற்கு ஆயிரம் அமித் ஷாக்கள் வந்தாலும் எந்த மாற்றமும் இருக்காது" - சீமான் காட்டம்

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேசிய அவர்,"திராவிடம் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானது எனக் கற்பித்தவர் திருமாவளவன்தான். தம... மேலும் பார்க்க

"அமித்ஷா எப்பொழுது வந்தாலும் மாற்றத்தை உண்டு பண்ணிவிட்டுத்தான் செல்வார்" - நயினார் நாகேந்திரன்

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், "தி.மு.க அரசின் ஆயுட்காலம் முடிவடையக் கூடிய சூழலில் ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது ஏன்? செவிலியர்கள், துப்புரவுப் பண... மேலும் பார்க்க

"கண்டா வரச்சொல்லுங்க" - அமைச்சர் கே.என். நேருவைத் தேடும் தூய்மைப் பணியாளர்கள்; பின்னணி என்ன?

அரசு ஊழியர்களின் கோரிக்கையையும் போராட்டத்தையும் ஏற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தின் அம்சங்களோடு கூடிய டேப்ஸ் என்ற ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்திருக்கிறார் முதல்வர்.செவிலியர்களின் போராட்டத்துக்குச் செவி ... மேலும் பார்க்க

'வெற்றிகரமான தாக்குதல்; அதிபரை வெளியேற்றிவிட்டோம்' - வெனிசுலாவை குறிவைத்த ட்ரம்ப்

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நிக்கோலஸ் மதுரோ அதிபராக பதவியேற்றதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், இன்று வெனிசுலா மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது அமெரிக்க... மேலும் பார்க்க

OP Sindoor: "நான்தான் நிறுத்தினேன்" - ட்ரம்ப்புடன் மோதும் சீனா; பாகிஸ்தானுக்கு ப்ளஸ்; இந்தியாவுக்கு?

இவ்வளவு நாள், 'நான்தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திரும்பத் திரு.....ம்ம்ம்ம்...பபப கூறிக்கொண்டிருந்தார். இப்போது இந்தப் போட்டியில் சீனாவும் களமிறங்கியுள்ளத... மேலும் பார்க்க

TAPS: `கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்' - ஸ்டாலின் அதிரடி | முழு தகவல்

'பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும்' - இது அரசு ஊழியர்களிடம் இருந்து தொடர்ந்து எழுந்துவரும் கோரிக்கை. இந்தக் கோரிக்கைக்கு சற்று நிறைவேற்றும் விதமாக, கொஞ்சம் மாறுதல்களோடு இன்று 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட... மேலும் பார்க்க