செய்திகள் :

'வெற்றிகரமான தாக்குதல்; அதிபரை வெளியேற்றிவிட்டோம்' - வெனிசுலாவை குறிவைத்த ட்ரம்ப்

post image

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நிக்கோலஸ் மதுரோ அதிபராக பதவியேற்றதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று வெனிசுலா மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது அமெரிக்கா. இதையடுத்து வெனிசுலாவில் 'தேசிய அவசரநிலை' அமல்படுத்தப்பட்டது.

தற்போது நிக்கோலஸ் மதுரோ நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து தனது ட்ரூத் பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்டிருப்பதாவது...

"வெனிசுலா மீது அமெரிக்கா வெற்றிகரமாக தாக்குதலை நடத்தி முடித்துள்ளது.

வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல்
வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல்

வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி பிடிக்கப்பட்டு, நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத்துடன் இணைந்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல்கள் இன்று காலை (அமெரிக்க நேரப்படி) 11 மணிக்கு நடக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் தரப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை பல நாடுகளில் அமைதியை நிலைநாட்டினேன் என்று கூறி வந்த ட்ரம்ப், தற்போது வெனிசுலா மீது அவரே தாக்குதலை நடத்தி உள்ளார்.

வெனிசுவேலா மீது அமெரிக்காவின் தாக்குதல் — இலக்கு போதைப்பொருள் கடத்தலா, எண்ணெய் வளமா? | In-depth

முன்னாள் ஆசிரியர், பிபிசி உலகசேவை, லண்டன்மணிவண்ணன் திருமலை(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்... மேலும் பார்க்க

வெனிசுலா: 'டார்கெட் எண்ணெய் வளம்?' - அதிபர் மதுரோவைச் சிறைப்பிடித்த அமெரிக்கா; கமலா ஹாரிஸ் எதிர்ப்பு

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவை நேற்று கைப்பற்றியது அமெரிக்காவின் ட்ரம்ப் அரசு.அந்த நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிறைப்பிடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். அந்தப் புகைப்ப... மேலும் பார்க்க

சுசீந்திரம் தேர்த்திருவிழா: "அமைச்சர் காலதாமதமாக வந்ததுதான் பிரச்னைக்குக் காரணம்" - தளவாய் சுந்தரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற தேர்த்திருவிழாவில் பக்தர்கள் தரப்பில் சில கோஷங்கள் எழுப்பப்பட்டன.அப்போது தேர்வடம் இழுக்கச் சென்ற இந்த... மேலும் பார்க்க

திருச்சி: "தமிழ்நாட்டிற்கு ஆயிரம் அமித் ஷாக்கள் வந்தாலும் எந்த மாற்றமும் இருக்காது" - சீமான் காட்டம்

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேசிய அவர்,"திராவிடம் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானது எனக் கற்பித்தவர் திருமாவளவன்தான். தம... மேலும் பார்க்க