செய்திகள் :

"அவர்கள் அப்படித்தான் பிறக்கிறார்கள்; அவர்களுக்கும் வாழும் உரிமை உண்டு"- LGBTQ+ குறித்து மோகன் பகவத்

post image

ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், நேற்று (ஜூலை 26)ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் LGBTQ+ சமுதாயத்தினர் குறித்து பேசியிருக்கிறார்.

அவர் பேசியதாவது...

"இங்கே சமுதாயத்தில் LGBTQ+ இருக்கிறது தான். சமூகத்தில் எல்லா இடங்களிலும் இத்தகைய போக்குகள் காணப்படுகின்றன.

இதில் சில இயற்கையிலேயே அமைந்தவை. இதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் அவர்கள் அப்படித்தான் பிறக்கிறார்கள்.

ஆனால், சில விஷயங்கள் பிற்காலத்தில் மனநிலை மாற்றங்களாலோ அல்லது உடல் ரீதியான ஈர்ப்புகளாலோ உருவாகின்றன.

LGBTQ+
LGBTQ+

அவர்களுக்கும் வாழும் உரிமை உண்டு

இது உலகம் முழுவதும் இருக்கிறது எனும் போது, நம் நாட்டில் மட்டும் இல்லை என்று நாம் சொல்ல முடியாது. நாமும் மனிதர்கள் தான். எனவே இங்கும் இவை இருந்தன.

ஆனால் நம் கலாச்சாரத்தில் இவர்களுக்கென்று ஒரு தனித்துவமான வழிமுறை சத்தமில்லாமல் உருவாக்கப்பட்டது. சில விஷயங்களை குணப்படுத்த முடியும் என்றும், அவ்வாறு முடியாதவர்களும் மனிதர்கள் தான் என்றும், 'அவர்களுக்கும் வாழும் உரிமை உண்டு' என்றும் நமக்கு சொல்லப்பட்டுள்ளது.

சிகண்டி...

அவர்களை சமூகத்திலிருந்து நாம் ஒதுக்கி வைப்பதில்லை. சமூக வாழ்வின் ஒரு பெரிய அங்கமாக அவர்களுக்கும் ஒரு இடம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களைத் தாழ்வாகப் பார்க்காதீர்கள். உதாரணமாக, 'சிகண்டி' ஒரு அரசனாக மற்ற வீரர்களுக்கு இணையாகப் போரிட்டார். இதற்கான ஒரு ஏற்பாடு நம்மிடம் பழங்காலத்திலிருந்தே இருந்தது.

இன்றும் கூட அவர்களுக்கென்று தனித்தெய்வங்கள், கோவில்கள் மற்றும் 'மஹா மண்டலேஷ்வர்' பட்டங்கள் இருப்பதை நாம் காண்கிறோம்.

மோகன் பகவத்
மோகன் பகவத்

நம் சமூகத்தின் ஒரு அங்கம்

அவர்கள் கும்பமேளாவிற்கும் வருகிறார்கள். எனவே இதைப் பற்றி வீணாக ஆரவாரம் செய்யாமல், சமூகத்தின் அனுதாபமும் அக்கறையும் குறையாமல் இருக்கவும், அவர்கள் 'நம் சமூகத்தின் ஒரு அங்கம்' என்பதை உறுதிப்படுத்தவும் மிக அமைதியாகச் சரியான ஏற்பாடுகளை நாம் செய்திருக்கிறோம்.

தற்போதைய காலத்தில் புதிய கேள்விகள் எழுகின்றன, அவற்றுக்கு நேரடி விடைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நம்முடைய 'ஒருங்கிணைந்த பார்வையின்' அடிப்படையில் சிந்தித்தால், எல்லாவற்றிற்கும் தீர்வு கிடைக்கும்" என்றிருக்கிறார்.

'சொந்த நாட்டு மாணவர்களுடனேயே ஆரோக்கியமாக விவாதிக்க முடியாத ஒரு கட்சியிடம்.!' - மாணிக்கம் தாகூர்

"டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் நடத்தியது. இதுவே அமெரிக்காவாக இருந்தால், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கும்" என்று தெலங்கானாவைச் சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கொண்டா விஸ... மேலும் பார்க்க

"சின்ன வயதில் பெற்றோர் சொன்னால் கேட்டுக்கொள்வோம்; ஆனால், இன்று.!" - Gen Z குறித்து மோகன் பகவத்

'மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா' - டெல்லி ஜந்தர் மந்தரில் ஜென் Z தலைமுறையினர் வெற்றிகரமாக போராட்டத்தை நடத்தி முடித்துள்ளனர். இந்த நேரத்தில் டெல்லி அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 'தற்க... மேலும் பார்க்க

`மேற்கு தொடர்ச்சி மலை படம் போல எங்களுடைய நிலத்தை விட்டு அகற்ற போகிறார்கள்' - நடிகர் ஆண்டனி வேதனை

திண்டுக்கல் மாவட்டம் மரியநாதபுரம் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமம் புறம்போக்கு நிலத்தில் இருப்பதாகவும், அதனால் இங்கிருப்பர்கள் வெளியேற வேண்டும் என அரசு... மேலும் பார்க்க

அமெரிக்கா, ஈரான் தாக்குதல் திடீர் நிறுத்தம் ஏன்? ட்ரம்ப் - ஜே.டி.வான்ஸ் சந்திப்பு முக்கிய காரணம்?

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக மாறி மாறி கடும் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த அமெரிக்கா, ஈரான் தற்போது மோதலுக்கு சின்ன இடைவேளை கொடுத்துள்ளது. என்ன நடக்கிறது? கடந்த இரண்டு வாரங்களாக, கப்பல்கள் மீது தாக்க... மேலும் பார்க்க

பாஜக: 10 ஆண்டுகளில் 5-வது அமைச்சர்; கல்வித் துறை கண்ட மாற்றங்களும் திருப்பங்களும்! | ஓர் பார்வை

கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவின் கல்வித் துறை மிகப்பெரிய மாற்றங்களைச் சந்தித்து வந்துள்ளது. ஆரம்பத்தில் 'மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்' (MHRD) என்ற பெயரிலேயே இயங்கி வந்தது. பின்னர், ஜூலை 29, 2020 அ... மேலும் பார்க்க