செய்திகள் :

இந்தியாவில் குறைந்த ஊழல்; ஆனால், ஒரு கவலைக்குரிய விஷயம்! - ஜெர்மனி நிறுவனத்தின் அறிக்கை சொல்வதென்ன?

post image

சமீபத்தில், ஜெர்மனி பெர்லினைச் சேர்ந்த 'Transparency International' என்ற அரசு சாரா அமைப்பு ஊழல் அடிப்படையில் உலக நாடுகளின் ரேங்கிங் பட்டியலை வெளியிட்டது.

இந்தப் பட்டியல் அரசின் நிதியுதவி, செயல்திறன், நிர்வாக வெளிப்படைத்தன்மை, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்ற தரவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.

இது ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் 182 நாடுகள் இடம்பெறுகின்றன.

2025-ம் ஆண்டு வெளியான, 2024-ம் ஆண்டிற்கான பட்டியலில் இந்தியா 38 புள்ளிகளைப் பெற்று 96-வது இடத்தைப் பிடித்திருந்தது.

இந்த ஆண்டு 39 புள்ளிகளைப் பெற்று 91-வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.

ஊழல்
ஊழல்

இந்தியாவின் மார்க் என்ன?

இந்த ரேங்கிங்கும் பள்ளித் தேர்வுகளைப்போல 100 மதிப்பெண்களுக்கானது தான். அதிக புள்ளிகள் பெறும் நாடு, ஊழலற்ற நாடு என்கிற அடிப்படையில் டாப் இடங்களைப் பெறும்.

இந்தப் பட்டியலில், உலக நாடுகளின் சராசரி மதிப்பெண் 42 புள்ளிகள்.

இந்தியா 39 புள்ளிகள்தான் பெற்றிருந்தாலும், இது நல்ல முன்னேற்றமே.

இந்தியாவில் அதிகரித்துள்ள டிஜிட்டல் பொது கட்டமைப்பே ஊழலற்ற பட்டியலில் இந்தியா சற்று முன்னேறியதற்கான காரணமாகப் பார்க்கப்படுகிறது.

ஊழலற்ற டாப் நாடுகள் எது?

இந்தப் பட்டியலில் டென்மார்க் 89 புள்ளிகள் பெற்று டாப் இடத்தைப் பெற்றுள்ளது. அடுத்தடுத்த இடங்களை ஃபின்லாந்து மற்றும் சிங்கப்பூர் பெற்றுள்ளன.

உலகிலேயே அதிக ஊழல் மலிந்த நாடுகளாக சோமாலியா, தெற்கு சூடான் ஆகிய நாடுகள் 9 புள்ளிகளுடன் பின்தங்கியுள்ளன.

அமெரிக்கா 64 புள்ளிகளுடன் 29-வது இடத்திலும், சீனா 43 புள்ளிகளுடன் 76-வது இடத்திலும், ரஷ்யா 22 புள்ளிகளுடன் 157-வது இடத்திலும், பாகிஸ்தான் 28 புள்ளிகளுடன் 136-ஆவது இடத்திலும் உள்ளன.

கொலை
கொலை

கவலைக்குரிய விஷயம்...

இன்னொரு பக்கம், ஊழல் குறித்த செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தல் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றிருப்பது கவலைக்குரிய விஷயம்.

குறிப்பாக, இந்தப் பட்டியலில் 50-க்கும் குறைவான புள்ளிகளைக் கொண்டுள்ள இந்தியா, பிரேசில், மெக்சிகோ, பாகிஸ்தான், இராக் நாடுகளில் உலக அளவில் பத்திரிகையாளருக்கு நடந்த 90 சதவிகிதக் கொலை நடந்திருக்கிறது.

"அந்தத் தொகுதிகள்தாம் வேண்டும்" - அமைச்சர்களின் தொகுதிகளைக் கேட்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் தீர்மானம்?

தமிழக அமைச்சரவையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும், தி.மு.க-வில் முதன்மைச் செயலாளராகவும் இருப்பவர் கே.என்.நேரு.அதேபோல், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகவும், தி.மு.க-வின் திருச்சி தெற்கு மாவட்டச்... மேலும் பார்க்க

ஒரே இரவில் 'ஓகே' ஆன கூட்டணி; கச்சிதமாக முடித்த மூவர் அணி! - திமுக முகாமில் தேமுதிக இணைந்தது எப்படி?

தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தை ஆரம்பித்த விஜயகாந்த், அ.தி.மு.கவுடன் ஒருமுறை கூட்டணி அமைத்தார். அதன் பிறகு அந்தக் கட்சியின் தலைமையில் மக்கள் நலக் கூட்டணி 2016-ம் ஆண்டு தேர்தலைச் சந்தித்து. பின்னர் ... மேலும் பார்க்க

சீமான் எடுத்த முடிவு; 21-ம் தேதியை எதிர்நோக்கும் நாதக-வினர்; பரபரக்கும் மாநாட்டு ஏற்பாடுகள்!

திருச்சியில் வரும் பிப்ரவரி 21-ம் தேதி மக்கள் மாநாட்டை நடத்துகிறது, நாம் தமிழர் கட்சி. 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் கட்சி மாநாடு என்பதால் மேடையில் யார் இருப்பார்கள், யாரெல்லாம் பேசுவார்கள் என்ற எத... மேலும் பார்க்க

திமுக-வின் ஆஃபர்; எடப்பாடியின் ஓரவஞ்சனை - பிரேமலதாவின் அறிவாலய விசிட் பின்னணி!

அறிவாலயம் பக்கமாக வண்டியை திருப்பியிருக்கிறார் தேமுதிக-வின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். கூட்டணிக்குள் வரவேற்று 'அன்புச் சகோதரி' என பாசமழை பொழிந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தேமுதிக என்.டி.ஏ... மேலும் பார்க்க

தேர்தல் நெருக்கடியில் தொடரும் போராட்டங்கள்: `சதியா... உரிமையா?' - பரபரக்கும் தமிழ்நாட்டின் களம்!

போராட்டமும் - விவாதமும்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசு ஊழியர்கள் தொடங்கி, அங்கன்வாடி ஊழியர்கள் வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் சிலப் போராட்டங்கள் தற்காலிகமாக முடிவுக்... மேலும் பார்க்க