செய்திகள் :

"இஸ்ரேல் இருந்திருக்காது; மத்திய கிழக்கே அழிந்திருக்கும்" - ஈரான் போருக்கு ட்ரம்ப் சொல்லும் காரணம்

post image

பிப்ரவரி மாதக் கடைசியில் தொடங்கிய ஈரான் போர் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்போ ஈரான் போர் விரைவில் முடிந்துவிடும்... இப்போது முடிந்துவிடும்... அப்போது முடிந்துவிடும் என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார்.

நீளும் ஈரான் போர்

வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவின் மிட் டேர்ம் தேர்தல் வர உள்ளது. இது அந்த நாட்டின் காங்கிரஸின் (நாடாளுமன்றம்) தேர்தல் ஆகும்.

அதற்குள்ளாவது இந்தப் போர் முடிந்துவிடும் என்று நினைத்தால், ‘தேர்தலை முன்னிட்டெல்லாம் போர் சீக்கிரம் முடிக்கப்படாது’ என்று கூறிவிட்டார் ட்ரம்ப்.

இதனால், அமெரிக்கா தாக்க... ஈரான் பதிலுக்குத் தாக்க அல்லது ஈரான் முதலில் தாக்க... அமெரிக்கா பதிலுக்குத் தாக்க என்கிற காட்சிகள் தொடர்கதையாகிக்கொண்டே இருக்கின்றன.

ஈரான் போர்
ஈரான் போர்

ட்ரம்ப் விளக்கம்

நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார் ட்ரம்ப். அப்போது இந்தப் போர் இத்தனை நாட்கள் நீள்வது குறித்து விளக்கமளித்துள்ளார்.

“இந்தப் போரின் முதன்மையான நோக்கமே தெஹ்ரான் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்வதைத் தடுப்பதுதான். இப்போது ஐந்து மாதங்கள் ஆகின்றன.

இந்த ஐந்து மாதங்களில் என்ன சாதித்தோம் தெரியுமா? அவர்கள் இனி அணு ஆயுதத்தைப் பெறவே முடியாது. அதைத்தான் செய்திருக்கிறோம். ஈரான் கைக்கு அணு ஆயுதம் கிடைக்கவே கிடைக்காது.

இஸ்ரேலும், மத்திய கிழக்கும்

அமெரிக்க ராணுவத்தின் தலையீடுதான் ஒரு பெரிய பிராந்தியப் போரைத் தடுத்து நிறுத்தியுள்ளது.

அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுக்காமல் இருந்திருந்தால், இஸ்ரேலும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கும் மிக மோசமான அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கும்.

அமெரிக்கா மட்டும் உள்ளே இறங்காமல் இருந்திருந்தால், இப்போது இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருந்திருக்காது. மத்திய கிழக்கே அழிந்திருக்கும்.

அதற்கு அடுத்து அவர்கள் ஐரோப்பிய நகரங்களையும், நமது நகரங்களையும் கூடத் தாக்கியிருப்பார்கள்.

ஆனால், இந்த ஐந்து மாதங்களிலேயே அவர்கள் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுத்து நிறுத்திவிட்டோம்” என்று பேசியிருக்கிறார்.

"வரலாற்றை திருத்துவது சரியில்லை; நானும் சபையை வழிநடத்தியிருக்கிறேன்"- சிபிஎம் முன்னாள் பெண் எம்எல்ஏ

தமிழக சட்டசபையில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அலுவல் பணிக்காக தனது அறைக்குச் சென்றபோது, துணை சபாநாயகரும் அவையில் இல்லை. இதனால் மாற்று அவைத் தலைவராக த.வெ.க எம்.எல்.ஏ சத்யபாமா அவையை வழி நடத்தினார். இதைய... மேலும் பார்க்க

'அதிகாரிகள் செய்தது தவறு; வருந்துகிறோம்' - தவெக அமைச்சர்கள் சந்திப்பு குறித்து பெ.சண்முகம்

கடந்த மாதம், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக இரண்டு சம்பவங்கள் நடந்தன.ஒன்று, குஜிலியம்பாறை வட்டாட்சியர் அந்தச் சுற்றுவட்டாரத்தில் உள்ள கம்யூனிஸ்டுகளின் பெயரைச் சேகரிக்கச் சொல்லியிருந்தார்.இ... மேலும் பார்க்க

"பாபநாச அணை திறக்க போராடிய விவசாயிகளை அராஜக கைது செய்த தவெக அரசு" - கனிமொழி கண்டனம்

தூத்துக்குடி விவசாயிகள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி."பாபநாசம் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி, நியாயமான உரிமைக்காக... மேலும் பார்க்க

'வழக்குகள் வாபஸ்; உணவுப்படி 50 ரூபாய்...' - தூய்மைப் பணியாளர்களுக்கு அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதி!

பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு குறித்து நீண்ட நாட்களாக போராடி வரும் தூய்மைப் பணியாளர்களுடன் தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இந்தப் ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் போரட்டம்: "உறுதியாக முதல்வர் சந்திப்பார்; பணி நிரந்தரம்.?" - ராஜ்மோகன்

கடந்த 16 நாட்களாக, சென்னை ரிப்பன் பில்டிங்கில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.இன்று காலை அவர்களைச் சந்தித்து அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் பேச்சுவா... மேலும் பார்க்க

'பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு வந்தோம்!'- கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்கு தவெக அமைச்சர்களின் திடீர் விசிட்!

தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் திடீரென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்துக்கு சென்று அக்கட்சியின் தலைவர்களோடு ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். பெ.சண்முகம் - அ... மேலும் பார்க்க