செய்திகள் :

"ஈரான் போர் முடிய 3 Optionsதான் இருக்கு; அவற்றில் ஒன்றை ட்ரம்ப் செய்யமாட்டார்" - அமெரிக்க அதிகாரி

post image

ஈரான் போர் முடிவு இல்லாமல் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடக்கவிருக்கும் மிட் டேர்ம் தேர்தலுக்காக எல்லாம் போரைச் சீக்கிரம் முடிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிவிட்டார்.

போர் எப்போது தான் முடியும் என்கிற கேள்வி உலக நாடுகளிடம் எழுந்துள்ளது. இந்தப் போர் காரணமாக உலக நாடுகளின் எரிசக்தி போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்தான், இந்தக் கேள்வி இந்தப் போர் தொடங்கியதில் இருந்து வலுவாக ஒலித்துகொண்டு இருக்கிறது.

அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் லியோன் பனேட்டா
அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் லியோன் பனேட்டா
இதற்கான விடையை 'The Guardian' செய்தி நிறுவனத்திற்குத் தந்திருக்கிறார் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் லியோன் பனேட்டா.

"ஈரான் போர் இன்னும் ஆறு மாதங்களுக்குக்கூட தொடரலாம். இன்னொரு பக்கம், இது மத்தியக் கிழக்கில் நடக்கும் தொடர்ச்சியான போராகக் கூட மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதற்கு காரணம், இந்தப் போர் முடிவுக்கான தெளிவான பாதை இன்னும் தெரியவில்லை.

மூன்று ஆப்ஷன்ஸ்

இப்படி நடக்காமல் இருக்க வேண்டுமானால், மூன்று ஆப்ஷன்கள் மட்டுமே உள்ளன.

ஒன்று, அமெரிக்கா இந்தப் போரில் இருந்து பின்வாங்கி, இது தோல்விகரமான போர் என்று ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த ரூட்டை ட்ரம்ப் எடுப்பது மிக மிக கடினம்.

இரண்டாவது, தாக்குதலுக்கு அவ்வப்போது பழிக்குப் பழி என எதிர் தாக்குதல்கள் நடத்திகொள்வது. அதுதான் தற்போது நடந்துகொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் இரு நாடுகளுமே பேச்சுவார்த்தைக்கும் முயலாது... ஆபத்தான போரை நோக்கியும் நகராது.

மூன்றாவது, ஹார்முஸ் நீர்ச்சந்தியை முழுவதுமான அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவது. இதன் மூலம், ஈரான் அந்த நீர்ச்சந்தியைக் கட்டுப்படுத்துவதை முழுவதுமாகத் தடுக்க முடியும்" என்று பேசியிருக்கிறார் லியோன் பனேட்டா.

சென்னையில் ஒரே நாளில் இரு கொலைகள்: "இது இந்திய அளவில் தலைகுனிவை.!" - நயினார் நாகேந்திரன் காட்டம்

சென்னையில் நேற்று (செப்டம்பர் 6) ஒரே நாளில் நடந்த கொலைச் சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.நயினார் நாகேந்திரன் தனது ... மேலும் பார்க்க

50 ஆண்டுகால அவதி... சுமார் 1 கிலோ மீட்டர் சாலைக்காக அலையும் எம்.செட்டிப்பட்டி மக்கள் !

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டத்துக்குட்பட்ட எம்.செட்டிப்பட்டி கிராமத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகிலேயே அமைந்திருந்தாலும், இந்த வீடுகளுக்குச் செல்... மேலும் பார்க்க

எஸ்.எஸ்.சிவசங்கர் : `மோசடி புகாரால் சட்டமன்றத்துக்கு ஆப்சென்டா?' - பின்னணி என்ன?

திமுக-வின் முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர். இவர் தற்போது குன்னம் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும், அரியலூர் மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார். நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் சில தினங்கள் மட்டுமே கலந்து க... மேலும் பார்க்க

IUML: ``கோடி கோடியாய் கொண்டு வந்து கொடுத்தார்கள்" - எம்.எல்.ஏ பேச்சும் - பொதுச் செயலாளர் விளக்கமும்!

திருவண்ணாமலையில் நடந்த கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஐ.யூ.எம்.எல் எம்.எல்.ஏ சையத் பாரூக் பாஷா, ``என்னையும், அமைச்சர் ஷாஜகானையும் தேடி கோடி, கோடியாக பணம் கொண்டு வந்து, ஆதரவு கொடுங்கள்... கையெழுத்து... மேலும் பார்க்க

தவெக நிர்வாகி கொலை: `ஆளுங்கட்சியினருக்கே பாதுகாப்பில்லாத அவல ஆட்சி!' - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

சென்னை அடையாறு சாஸ்திரி நகர் வண்ணாந்துறைப் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். அ.தி.மு.க-வில் 174வது தெற்கு வட்டக் செயலாளராக இருந்த கண்ணன், சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி த.வெ.க-வில் சேர்ந்து பணியாற்றி ... மேலும் பார்க்க