செய்திகள் :

உமர் காலித்: ``பதவியில் இருப்பவர்களுக்கு இது அழகல்ல" - மம்தானிக்கு அதிருப்தி தெரிவித்த இந்தியா!

post image

டெல்லியில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக மாணவச் செயற்பாட்டாளரான உமர் காலித்தைச் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967-ன் கீழ் கைது செய்து சிறையிலடைத்தது அரசு. ஐந்து ஆண்டுகள் கழிந்தும், இன்னும் ஜாமீன் மறுக்கப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, நியூயார்க் மேயரான ஜோஹ்ரான் மம்தானி கடந்த மாதம் அமெரிக்காவில் உமர் காலித்தின் பெற்றோரைச் சந்தித்தார். அப்போது, உமர் காலித்துக்கு கையால் எழுதப்பட்ட ஒரு கடிதத்தை அவர்களிடம் வழங்கினார்.

ரந்தீர் ஜெய்ஸ்வால்
ரந்தீர் ஜெய்ஸ்வால்

அந்தக் கடிதத்தை உமர் காலித்தின் இணையர் பனோஜ்யோத்ஸ்னா லஹிரி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அதில், "அன்புள்ள உமர், கசப்புணர்வு ஒரு மனிதனை அழித்துவிடாமல் தடுப்பது முக்கியம் என்று நீங்கள் கூறிய வார்த்தைகளை நான் அடிக்கடி நினைத்து பார்ப்பேன். உங்களுடைய பெற்றோரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நாங்கள் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், ஜோஹ்ரான் மம்தானி உமர் காலித்துக்கு எழுதிய கடிதம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை தன் அதிருப்தியை தெரிவித்திருக்கிறது.

நேற்று வாராந்திர செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது உமர் காலித்துக்கு நியூயார்க் மேயர் எழுதிய கடிதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரந்தீர் ஜெய்ஸ்வால், ``மற்ற ஜனநாயக நாடுகளில் நீதித்துறையின் சுதந்திரத்தை மக்கள் பிரதிநிதிகள் மதிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துவது பதவியில் இருப்பவர்களுக்கு அழகல்ல. இதுபோன்ற கருத்துக்களுக்குப் பதிலாக, அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளில் கவனம் செலுத்துவது நல்லது." எனக் குறிப்பிட்டார்.

RBI: அமெரிக்காவை நம்பாத இந்தியா; தங்கம் பக்கம் ரூட்டை மாற்றுவது ஏன்?

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவிகித வரி... அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வீழ்ச்சி... தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு... என நம்மை சுற்றி பல பொருளாதார விஷயங்களும், மாற்றங்களும் நடந... மேலும் பார்க்க

``உங்கள் கனவை சொல்லுங்கள்' என்கிறார் ஸ்டாலின்; திமுக ஆட்சியை அகற்றுவதே மக்களின் கனவு' - அண்ணாமலை

திருப்பூரில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசுகையில், "ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பில் பின்னலாடை ஏற்... மேலும் பார்க்க

`தேசியவாத காங்கிரஸின் இரு அணிகளும் ஒன்று சேர்கிறதா?' - இணைப்புக்கு அஜித் பவார் ஆர்வம்!

மகாராஷ்டிராவில் முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் கடந்த 2023-ம் இரண்டாக உடைந்தது. இதனால் கட்சி எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோர் துணை முதல்வர் அஜித் பவார் பக்கம் சென்றனர்.... மேலும் பார்க்க

திண்டுக்கல்: 'ரூ.1,595 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள்' - தொடங்கி வைத்த முதல்வர் | Photo Album

திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின்திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின்திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின்திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின்திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின்திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின்திண்டுக்கலில் ... மேலும் பார்க்க

`இது பாதிக்கிணறு தாண்டிய கதை மாதிரிதான்!' - உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டமும் பின்னணியும்!

23 ஆண்டுகாலப் போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் என வந்தவர்கள் எல்லாம் கொடுத்த வாக்குறுதிதான். ஆனால் ஆட்சிக்கட்டிலில் ஏறியவுடன் அமைதியாகி விடுவார்கள். இப்போது காலம் கனிந்த... மேலும் பார்க்க

`மாதக்கணக்கில் குப்பை அள்ளவில்லை; எல்லாம் ஓரளவுக்குத்தான்!' - போராட்டக் களத்தில் ஆளுங்கட்சி எம்எல்ஏ

திருப்பூர் மாநகராட்சியில் குப்பை பிரச்னை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. மாநகரையொட்டிய, முதலிபாளையம் கிராமத்தில் கைவிடப்பட்ட கல்குவாரியில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. அதற்கு அந்த கிராம ம... மேலும் பார்க்க