செய்திகள் :

உள்நோக்கத்துடன் நடவடிக்கை?– லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளருக்கு விதிக்கப்பட்ட சஸ்பென்ஷனுக்கு இடைக்கால தடை

post image

லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றி வந்த ஆய்வாளர் விமலா, ஒரு அரசு அதிகாரி மீதான ஆரம்பகட்ட கண்காணிப்பு விசாரணையை மேற்கொண்டபோது, அவரிடம் லஞ்சம் கேட்டதாக உள்துறை கண்காணிப்பில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து டிஐஜி என்.தேவராணி, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் அருணின் கவனத்திற்கு கொண்டு சென்றதைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை அறிக்கையின் அடிப்படையில் ஆய்வாளர் விமலா இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட டிஎஸ்பி ஜாய் நீலகிரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதற்கிடையில், இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்தது தொடர்பாகவும் தன்னை இடைநீக்கம் செய்தது குறித்தும் விமலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆவணங்களை பரிசீலித்தது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின்படி, ராஜலட்சுமி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு கண்காணிப்புத் துறை அதிகாரிகளே விமலாவுக்கு உத்தரவிட்டதுடன், எஃப் ஐ ஆர் வரைவைத் தயாரிக்கவும் அறிவுறுத்தியிருந்தனர்.

சென்னை உயர் நீதிமன்றம்

பின்னர் அந்த வரைவு லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டதுடன், 12.02.2026 அன்று காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்து சில திருத்தங்களை மேற்கொண்ட பிறகே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜூன் 17 அன்று பிறப்பிக்கப்பட்ட இடைநீக்க உத்தரவுக்கு ஜூலை 9 வரை இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்மனுதாரர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

`நெல் கொள்முதல் செய்யாததால் ஒரு நாள் மழையில், பல மாத உழைப்பு வீணாகிறது' - நீதிபதிகள் வேதனை

தஞ்சையைச் சேர்ந்த அமிர்தராஜ் ஹமீதுதீன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், `தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல்... மேலும் பார்க்க

டெலிகிராம்: `கட்டுப்பாடற்ற அரக்கனைப் போல.!' - மத்திய அரசின் கடும் வாதம்; தடையை உறுதி செய்த கோர்ட்

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முறைகேடுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்தப்படவுள்ளது. இந்தத் தேர்வில் மீண்டும் வினாத்தாள் கசிவு போன்ற... மேலும் பார்க்க

ரூ.100க்காக போராடிய வழக்கறிஞர்; `ராமேஸ்வரம் நகராட்சி ஆணையருக்கு பிடிவாரன்ட்' நுகர்வோர் ஆணையம் அதிரடி

நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபாகர் என்பவர் கடந்த 2022 பிப்ரவரி 13-ம் தேதி, தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரத்தில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சொந்த காரில் சென்றுள்ளார். ராமேஸ்வரம் நுழைவாயி... மேலும் பார்க்க

"GDP-யில் 17% உழைப்பு இல்லத்தரசிகளுடையது; அவர்களின் உத்தேச வருமானம் ரூ.30,000" - உச்ச நீதிமன்றம்

இல்லத்தரசிகள் அல்லது குடும்பத் தலைவிகள் என்பவர்கள் வெறும் வீட்டைப் பராமரிப்பவர்கள் மட்டுமல்ல, அவர்கள் நாட்டின் உண்மையான கட்டுமானக் கற்கள் (Building Blocks) என்றும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழ... மேலும் பார்க்க

`தமிழக முதல்வர் பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி தருவோம் என்கிறார்; ஆனால்..!' - நீதிபதி விமர்சனம்!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்,உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில்,`சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வருகிறேன்.எங்கள் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவ... மேலும் பார்க்க

`காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்படும்' - தமிழக அரசு

காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள், ஆங்காங்கே பிளாஸ்டிக் பாட்... மேலும் பார்க்க