செய்திகள் :

'எதிரிக்கு எதிரி நண்பன்?' பாகிஸ்தான் பயணம் முடித்த கையோடு ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர் அராக்சி

post image

கடந்த வார இறுதியில் நடக்கவிருந்த அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை நடக்கவில்லை.

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்திற்கு ஈரான் தரப்பு மட்டுமே சென்றிருந்தது. அமெரிக்கா கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்துவிட்டது.

இஸ்லாமாபாத்திற்கு ஈரான் சார்பாக ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி சென்றிருந்தார்.

பாகிஸ்தான் மத்தியஸ்தர்களிடம் ஈரான் பேசியவை...

1. முதலில் ஈரான் மற்றும் லெபனானுக்கு எதிரான தாக்குதல்கள் நிற்க வேண்டும். எதிர்காலத்திலும் எந்தத் தாக்குதலும் நடக்காது என்கிற உத்தரவாதம் வேண்டும்.

அமெரிக்கா - ஈரான்
அமெரிக்கா - ஈரான்

2. அது நடந்தால், அடுத்து ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு மற்றும் நிர்வாகம் பற்றி பேசப்படும்.

3. அதுவும் நடந்துவிட்டால், கடைசியாக ஈரானின் அணு ஆயுதம் குறித்து கலந்தாலோசிக்கலாம்.

இவற்றை அமெரிக்காவிடம் தெரிவிக்கும் படி, பாகிஸ்தானிடம் ஈரான் கூறியிருக்கிறது.

இஸ்லாமாபாத் பயணத்திற்கு அடுத்து அராக்சி சென்றிறங்கிய நாடு, 'ரஷ்யா'.

அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தை ஒரு பக்கம் இழுப்பறியில் இருக்க, அராக்சி ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவில் அவருக்கு தடபுடலான வரவேற்பு கிடைத்துள்ளது. இதை பார்க்கையில், 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்கிற தொனியே இருக்கிறது.

அராக்சி உடனான சந்திப்பில், 'ஈரான் நலனுக்கு என்ன உதவி வேண்டுமோ, அதை ரஷ்யா செய்யும். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும் ரஷ்யா தேவையான நடவடிக்கைகளை செய்யும்' என்று கூறியுள்ளார் புதின்.

அராக்சியோ ரஷ்ய பயணம் குறித்து, "மத்திய கிழக்கு மற்றும் உலக அரசியல் சூழல் பெரும் மாற்றங்களைச் சந்தித்து வரும் வேளையில், ரஷ்யாவுடன் உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி

சமீபத்திய நிகழ்வுகள் நமது வியூகக் கூட்டாண்மையின் (strategic partnership) ஆழத்தையும் வலிமையையும் நிரூபித்துள்ளன.

நமது உறவு மென்மேலும் வளர்ந்து வரும் நிலையில், ரஷ்யா காட்டும் ஒற்றுமைக்கும், இராஜதந்திர ரீதியிலான ஆதரவிற்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஈரானும், ரஷ்யாவும் நண்பர்களாக இருக்கிறார்கள் என்பதை உலகத்திற்கு, முக்கியமாக, 'அமெரிக்காவிற்கு' காட்டவே அராக்சியின் இந்தப் பயணம் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

`ஆட்சிக்கு வழிதேடும் நேரத்தில்.!' - மாநில தலைமையை மாற்றும் முடிவில் டெல்லி; ரேஸில் குதித்த கதர்கள்

கூட்டணி பஞ்சாயத்து.!தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைமையில் மாற்றம் ஏற்... மேலும் பார்க்க

கேரளாவை உலுக்கும் மாணவர் நிதின் ராஜ் தற்கொலை: கவனம் ஈர்க்கும் 'ஹர்த்தால்' போராட்டம்!

கண்ணூர் அஞ்சரக்கண்டியிலுள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு பி.டி.எஸ் (BDS) படித்து வந்த மாணவர் நிதின் ராஜ் (22). இவர் சாதிய ரீதியான துன்புறுத்தல் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூற... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கோயிலில் கையில் வேலுடன் சுவாமி தரிசனம்; விஜய்யின் சர்ப்ரைஸ் விசிட்! | Photo Album

திருச்செந்தூர் கோயிலில் கையில் வேலுடன் சுவாமி தரிசனம் செய்த நடிகர் விஜய்! சர்ப்ரைஸ் விசிட் போட்டோஸ்!திருச்செந்தூரில் `சத்ரு சம்ஹார பூஜை' செய்த விஜய் - வெற்றிக் கணக்கு பலிக்குமா? மேலும் பார்க்க

திருச்செந்தூரில் `சத்ரு சம்ஹார பூஜை' செய்த விஜய் - வெற்றிக் கணக்கு பலிக்குமா?

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் மற்றும் அவரது கட்சி சார்பில் 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்த நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ச... மேலும் பார்க்க

TVK: 'தடைகள் நீங்க விஸ்வரூப தரிசனம்; வேட்பாளர்களுடன் முக்கிய மீட்டிங்?' - விஜய்யின் 'மே4' பிளான்!

தவெக தலைவர் விஜய் திடீரென இன்று அதிகாலை திருச்செந்தூர் முருகன் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்துள்ளார். விஜய்யின் திடீர் திருச்செந்தூர் விசிட்டுக்குக் காரணம் என்ன? ரிசல்ட்டுக்கு முன்பாக அவரின் அடுத்தக்க... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: பாரம்பர்ய மரபுப்படி மீட்டெடுக்கப்பட்ட 140 ஆண்டுகால நீதிமன்ற கட்டிடம்! | Photo Album

`15 டன் கடுக்காய், 20 டன் கருப்பட்டி,180 டன் சுண்ணாம்பு'- புதுப்பொலிவுடன் புதுக்கோட்டை நீதிமன்றம் மேலும் பார்க்க