செய்திகள் :

`என்னைக் கொல்ல முயற்சி; செந்தில் பாலாஜியும் அவர் தம்பியும்தான்..!' - எம்.ஆர்.விஜயபாஸ்கர் `பகீர்'

post image

கரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். திமுக சார்பில் ஆசி.தியாகராஜன் களத்தில் உள்ளார்.

கரூர் தொகுதியில் உள்ள முக்கிய பிரச்னைகளில் ஒன்றான இனாம் கோயில் நில பிரச்னை தொடர்பாகத் துண்டு பிரசுரத்தை எம்.ஆர்.விஜயபாஸ்கர் தான்தோன்றி மலைப் பகுதியில் மக்களிடம் வழங்கி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த திமுக-வினர் துண்டு பிரசாரம் செய்த எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திமுக, அதிமுக ஆகிய இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை மற்றும் தேர்தல் ஆணையத்திடம் பாதுகாப்பு கேட்டு எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார் அளித்தார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இதையடுத்து ஓர் இன்ஸ்பெக்டர் தலைமையில் நான்கு போலீஸார் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று கரூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் தொகுதியில் 50 தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டார்.

அப்போது அவர் பேசுகையில்.

"2021 தேர்தல் சமயத்தில் என்னை பின் தொடர்ந்து வந்து கண்காணித்த சிலர், திமுக-வின் முக்கிய புள்ளிகளுடன் தொடர்பில் இருப்பவர்கள். இந்த தேர்தலிலும் என்னை கண்காணித்து வருகின்றனர்.

என் உயிருக்கு ஆபத்து உள்ளது. என்னை கொலைசெய்ய முயற்சி செய்கிறார்கள். எனக்கோ, என் குடும்பத்தினருக்கும், என்னை சார்ந்தவர்களுக்கும் ஏதேனும் நடந்தால் செந்தில் பாலாஜியும், அவர் தம்பி அசோக்குமாரும்தான் அதற்கு முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

கரூரில் நேற்று கோவில் இனாம் நில பிரச்னைக்காக நோட்டீஸ் வழங்கச் சென்றபோது, என் மீது தாக்குதல் நடத்த முயன்றனர். அதன் காரணமாக எனக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

களத்தில் சந்திக்கலாம் என்று சவால் விட்ட கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, கோவைக்குச் சென்று விட்டார். நான் கரூர் களத்தில்தான் இருக்கிறேன். தோல்வி பயம் காரணமாக அவர் கோவைக்குச் சென்று விட்டார்.

கரூர் சட்டமன்றத் தொகுதியில் ஏதேனும் பிரச்னை செய்து, வன்முறையைக் கட்டவிழ்த்து விட தயாராகி வருகின்றனர். எப்படியாவது இந்த தேர்தலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று திமுக-வினர் செயல்படுவதாக ரகசிய தகவல் எங்களுக்குக் கிடைத்துள்ளது" என்றார்.

`கரூர் விஷயத்துக்கு வரேன்... நான் போலீஸ் கொடுத்த டைம்க்குதான் வந்தேன்.!' - விஜய் ஓப்பன் டாக்

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தின் கடைசி நாளான இன்று, நந்தனம் YMCA மைதானத்தில் தவெக தலைவர் விஜய் தனது கடைசி பிரசார உரையை ஆற்றியிருந்தார்.விஜய் பேசியதாவது, ``தமிழ்நாட்டுல இதுவரைக்கும் வாங்காத அளவுக்க... மேலும் பார்க்க

'ஸ்டாலின் தன் தந்தை கலைஞரை சாகும்வரை கவனித்துக்கொண்டார்; ஆனால் எனக்கு வாய்த்த பிள்ளை'- ராமதாஸ்

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவர் மகன் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு நீடித்து வரும் நிலையில், இருவரும் தங்களுக்குத்தான் கட்சி சொந்தம் எனக் கூறி வருகின்றனர்.`உண்மையான பா.ம.க., நாங்கள்தான்' எனக் ... மேலும் பார்க்க

காட்பாடி: `ஊராட்சிகளில் உள்கட்டமைப்பு வளர்ச்சி’ - வீடுதோறும் கடிதம்; கவனம் ஈர்த்த துரைமுருகன்

தி.மு.க பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் தனது காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் நிலையில், இன்றைய தினம் இறுதிக்கட்ட பரப்புரையில் தீவிரம் காட்டி வருகிறார். இதனிடையே, `உங... மேலும் பார்க்க