செய்திகள் :

கரூர்: `திருமணம் மீறிய உறவில் மனைவி' - த.வெ.க நிர்வாகி மீது புகார்; தற்கொலைக்கு முயன்ற கணவர்

post image

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த பாலவிடுதி அருகே பெருமாள்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம். லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், தனலட்சுமி என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி உள்ளது.

தனலட்சுமி தற்போது தமிழக வெற்றி கழகத்தில் கடவூர் தெற்கு ஒன்றிய மகளிர் அணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார். இவருக்கும், கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது திருமணம் மீறிய உறவாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கணவன் -மனைவி இருவருக்கும் நிறைய கருத்து வேறுபாடு ஏற்பட்டு தொடர்ந்து பிரச்னை ஏற்பட, அதன்காரணமாக தனலட்சுமி தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.

rajalingam, thanalatchumi

இந்த சூழலில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனலட்சுமியும், கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துசாமி என்பவரும் இரவு நேரத்தில் காரில் ஒன்றாக இருக்கும் வீடியோ ஒன்று வெளியானது. இது குறித்து, ராஜலிங்கம் தனது மனைவி தனலட்சுமியிடம், முத்துசாமியிடமும் கேட்டபோது, தன்னை லாரி ஏற்றி கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக ராஜலிங்கம் பாலவிடுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால், போலீஸார் அவரது புகார் குறித்து விசாரணை மேற்கொள்ளாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், ராஜலிங்கம் பாலவிடுதி காவல் நிலையத்தில் புகார் அளித்ததற்காக அவரது மனைவி தனலட்சுமி உறவினர்கள் மற்றும் கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துசாமி ஆகியோர் மீண்டும் அவரை மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், மன வேதனையில் இருந்த ராஜலிங்கம் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு அவரது குடும்பத்தினர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

poster

இந்நிலையில், ராஜலிங்கம் தான் விஷம் அருந்துவதற்கு முன்பாக தற்கொலை செய்து கொள்வதாக கூறி, மனைவி மற்றும் முத்துசாமி இருவரது தவறான உறவு குறித்து கூறி கண்ணீர் மல்க பேசும் வீடியோ வெளியானது. இந்நிலையில், ராஜலிங்கத்தின் மனைவி தனலட்சுமி, கரூர் எஸ்.பி-யிடம் ராஜலிங்கம் மீது புகார் கொடுத்ததோடு, "ராஜலிங்கத்துக்கும், மற்றொரு பெண்ணுக்கும் தொடர்பு. ஒரே கட்சியில் இருப்பதால் முத்துசாமியோடு என்னை தவறாக தொடர்புபடுத்தி ராஜலிங்கம் அவதூறு பரப்புகிறார்' என்று குற்றம்சாட்டியிருக்கிறார். கணவர் மற்றும் மனைவி இருவரும் பரஸ்பரம் குற்றம்சாட்டி புகார் கொடுத்திருப்பது, கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆட்டோ வாங்கி கொடுத்தும் `திருந்தாத’ குடிகாரக் கணவன் - சேர்ந்து வாழ மறுத்ததால் பெண் போலீஸ் கொலையா?

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது மகள் தாமரைச்செல்வி (40). இவர், குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரு... மேலும் பார்க்க

உதவிய காதலன்; மயக்க மருந்து கலந்து கொடுத்து மர்ம உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி கணவனை கொன்ற மனைவி

டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள சங்கம் விஹாரில் வசித்து வந்தவர் முன்னாலால்(55). கடந்த 10ம் தேதி முன்னா லால் சங்கம் விஹாரின் ரதியா மார்க் பகுதியில் உள்ள சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அன்று அதிக... மேலும் பார்க்க

`பில் கேட்ஸ் மகளுக்கு 20 ஆண்டுகள் சிறை?' - மோசடி புகார் சிக்கலில் Phoebe Gates!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸின் 23 வயதான மகள் Phoebe Gates, தான் இணை நிறுவனராக இருக்கும் 'ஃபியா' (Phia) என்ற ஷாப்பிங் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் 'குக்கீ ஸ்டஃப்பிங்' (Cookie stuffin... மேலும் பார்க்க

`சிறையில் செல்போன் பயன்படுத்தும் பிரஜ்வல் ரேவண்ணா' - போன், பென் டிரைவ் பறிமுதல் செய்த அதிகாரி

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவர் தங்கியிருக்கும் அறையில் இருந்து கைபேசி,... மேலும் பார்க்க

டிஜிட்டல் மோசடியில் கிடைத்த ரூ.10 கோடி; 5435 வங்கி கணக்குகளுக்கு மாற்றிய சோசியல் மீடியா பிரபலம் கைது

இந்த ஆண்டு ஜனவரி மாதம் சிபிஐ அதிகாரிகளாக தங்களைக் காட்டிக் கொண்ட ஒரு கும்பல் புனேயைச் சேர்ந்த முதியவரை டிஜிட்டலில் கைது செய்து ரூ.10 கோடியைப் பறித்தது. முதியவர் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க

சீருடையில் பெண் போலீஸ் கொடூரக் கொலை; கணவன் வெறிச்செயல் - வேலூர் அருகே பேரதிர்ச்சி!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எர்த்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வி. இவர், குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இன்று இரவு பணிமுடித்துவிட்டு இ... மேலும் பார்க்க