செய்திகள் :

பெற்றோரை வீட்டை விட்டு துரத்திய மகன்: சகோதரிகளிடம் சொத்தை அபரிக்க இறந்த தந்தை கைரேகையை எடுத்த மகன்

post image

பெற்றோர் இறந்த பிறகு குடும்ப சொத்தை பிரித்துக்கொள்வதில் சகோதரன், சகோதரிகளிடையே தொடர்ந்து மோதல் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதுவும் மகள்களுக்கும் பெற்றோரின் சொத்தில் சம பங்கு இருக்கிறது என்று அறிவித்த பிறகு இந்த மோதல்கள் அதிகரித்துள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகில் உள்ள கராஹா கிராமத்தில் வசித்து வந்தவர் சத்ரபால்(75). இவர் ஆரம்பத்தில் தனது மகனுடன் தனது வீட்டில் வசித்து வந்தார். ஆனால் அவரது மகன் மகேந்திராவும், அவரது மனைவியுடம் சேர்ந்து சத்ரபால் மற்றும் அவரது மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றினர்.

இதையடுத்து வயதான தம்பதி தங்களது வீட்டை விட்டு வெளியேறி உறவினர் வீட்டில் தங்கி இருந்தனர். அதன் பிறகு லக்னோவில் வசிக்கும் தனது மகள் சுமன் வீட்டிற்கு சென்று வசித்து வந்தனர். அவரை அவரது மூன்று மகள்களும் கவனித்துக்கொண்டனர்.

இதையடுத்து தனது சொத்தில் பாதியை மூன்று மகள்களுக்கும் பிரித்து சத்ரபால் எழுதிக்கொடுத்தார். அதுமட்டுமல்லாது தன்னையும் தன் மனைவியையும் தனது மகனும், அவரது மனைவியும் மோசமாக நடத்தியதாகக் குறிப்பிட்டு, செய்தித்தாள் அறிவிப்பு ஒன்றின் மூலம் மகேந்திராவையும் அவரது மனைவியையும் தனது அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களுக்கான வாரிசுரிமையிலிருந்து பகிரங்கமாக நீக்குவதாக அறிவித்தார்.

இது குறித்து சந்திரபால் மகள் சுமன் கூறுகையில்,''எனது தந்தைக்கு ஜூலை 7ம் தேதி உடல்நிலை மோசம் அடைந்தது. உடனே இது குறித்து எனது சகோதரனுக்கு தகவல் தெரிவித்தேன். எனவே மகேந்திரா லக்னோ வந்து தந்தைக்கு ஊரில் சிகிச்சை அளித்துக்கொள்கிறேன் என்று கூறி எனது தந்தையை அழைத்துச்சென்றார். ஆனால் அழைத்து சென்ற இரண்டு நாளில் தந்தை இறந்து போனார். இதற்காக நானும் எனது சகோதரிகளும் இறுதிச்சடங்கிற்கு அங்கு சென்றபோது எங்களை அவமானப்படுத்தினார்.

அதோடு உறவினர்கள் முன்னிலையில் இறந்து போன எனது தந்தையின் கைவிரல் ரேகையை வெற்றுப்பேப்பரில் எடுத்துக்கொண்டார்'' என்றார்.

சுமனின் கணவர் ரமேஷ் இது குறித்து கூறுகையில்,''சத்ரபாலின் உடலிலிருந்து கட்டைவிரல் ரேகை எடுக்கப்படுவதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அந்த வெற்றுத் தாள்கள் எதற்காகப் பயன்படுத்தப்படவுள்ளன என்று அவர்கள் கேள்வி கேட்டனர்'' என்றார்.

மகேந்திரா தனது இறந்து போன தந்தையின் விரலில் ரேகை எடுக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் இருக்கிறது. சகோதரிகளிடம் இருக்கும் சொத்தை அபகரிக்க இந்த கைரேகையை பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

வீரர்கள் தற்கொலை முயற்சி; ஆபிரகாம் லிங்கனுக்கு ஓய்வு கொடுக்க வரும் ஜார்ஜ் வாஷிங்டன் போர்க்கப்பல்!

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி இறுதியில் தாக்குதல் நடத்த தொடங்கின. இத்தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து அமெரிக்காவின் அதிகமான போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு ஆசிய பகுதியில் நிறுத்தி... மேலும் பார்க்க

சூரியகாந்தி மலர்களால் மிளிரும் சுந்தரபாண்டியபுரம் – தென்காசியின் புதிய செல்ஃபி சுற்றுலாத் தலம்!

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டமாகத் திகழ்கிறது தென்காசி. இயற்கையும் ஆன்மிகமும் இணைந்த சுற்றுலாத் தலங்கள் மாவட்டத்தில் நிரம்பி உள்ளன. குற்றாலம் அருவிகள், காசி விசு... மேலும் பார்க்க

கப்பலில் 250 நாள்கள் பணி: மன அழுத்தத்தில் கடலில் குதித்து தற்கொலைக்கு முயலும் அமெரிக்க படைவீரர்கள்?

கடந்த பிப்ரவரி மாதம் ஈரானுக்கு எதிரான போரை அமெரிக்கா தொடங்கியது. ஆனால் அதற்கு முன்பே அமெரிக்க போர்க்கப்பல்கள் வளைகுடா கடற்பகுதியில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுவிட்டன. தற்போது போர் நடக்கவில்லை என்றாலும... மேலும் பார்க்க

மும்பையில் உணவு கட்டுப்பாட்டு விதிகளை மீறிய டோமினோஸ் பிட்சா... சீல் வைத்த அதிகாரிகள்

மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் கமிஷனராக இருக்கும் துகாராம் முண்டே என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மாநிலம் முழுவதும் பால் கலப்படத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். தற்போது மாநிலம் முழுவதும் உள... மேலும் பார்க்க

`ஈரான் தாக்கலாம்' - துருக்கியிலிருந்து உணவு லாரியில் பதுங்கி விமானநிலையம் சென்ற அதிபர் ட்ரம்ப்?

கடந்த பிப்ரவரியில் இருந்து ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வந்தன. கடந்த மாதம் இஸ்ரேல் நேரடி தாக்குதலில் இருந்து ஒதுங்கிக்கொண்ட நிலையில் அமெரிக்கா மட்டும் ஈரான் மீது தாக்கியது. ஈரா... மேலும் பார்க்க

தனியாக 4 பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய தந்தை; முதியோர் இல்லத்தில் இறந்தபோது பார்க்கவராத பிள்ளைகள்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரைச் சேர்ந்த கன்ஷ்யாம் என்பவர் தனது மனைவி இளம் வயதில் 4 குழந்தைகளை விட்டுவிட்டு இறந்துவிட்ட நிலையில் தனியாக வேறு திருமணம் செய்து கொள்ளாமல் தனது குழந்தைகளைப் போராடி வளர்... மேலும் பார்க்க