செய்திகள் :

காவிரி: ``ஆணையம் பிறப்பித்த உத்தரவை கர்நாடகா கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்!" - உச்ச நீதிமன்றம் அதிரடி

post image

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விடக் கோரித் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 12,000 கனஅடி நீர் திறப்பு உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுக்கள் மீதான விசாரணை  உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.

நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன்பாக நடைபெற்ற இந்த விசாரணையின் போது, தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். ``காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளைக் கர்நாடக அரசு எப்போதும் செயல்படுத்துவதே இல்லை. அணைகளில் 76% நீர் இருப்பு இருந்தும் தண்ணீரைத் திறக்க மறுத்து வருகிறது. ஆகஸ்ட் 16-ஆம் தேதி நிலவரப்படி கர்நாடகா தமிழ்நாட்டிற்கு 64 டி.எம்.சி தண்ணீரைத் திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால், வெறும் 14 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே கிடைத்துள்ளது.

கர்நாடகா தானாக முன்வந்து தண்ணீரைத் திறக்கவில்லை. கபினி/வயநாடு பகுதியில் பெய்த கனமழையால் கடவுளின் அருளால் அணைகளுக்கு வந்த உபரி நீரை மட்டுமே வழிநெடுகத் திறந்து விட்டுள்ளது. மழை நீரைக் கூட அவர்களால் முழுமையாகத் தேக்கி வைக்க முடியாமல் தான் திறந்து விட்டுள்ளனர். காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த வினாடிக்கு 12,000 கனஅடி நீர் என்பது மிகவும் குறைவானது.

காவிரி ஆறு
காவிரி ஆறு

ஆகஸ்ட் மாத விகிதாச்சாரப் பங்கு: 21.357 டி.எம்.சிஒட்டுமொத்தமாக ஆகஸ்ட் 31-க்குள் 36.635 டி.எம்.சி நீரைத் தமிழ்நாடு பெறுவதை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். உரிய நீர் திறக்கப்பட்டிருந்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60 டி.எம்.சி-யாக உயர்ந்து, குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறக்கப்பட்டிருக்கும். லட்சக்கணக்கான விவசாயிகள் சாகுபடிக்குக் காத்துக் கொண்டிருப்பதால் உடனடி உத்தரவு தேவை" என அடுக்கடுக்கான வாதங்களை முன் வைத்தார்

இதற்கு பதில் அளித்த கர்நாடகா அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், ``தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள தரவுகள் அனைத்தும் தவறானவை. இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவிய ஆண்டாகும். காவிரி ஒழுங்காற்றுக் குழு மற்றும் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் பின்பற்றப்பட்டுள்ளன.

முதலில் 3,500 கனஅடி திறக்கச் சொன்னார்கள்; அதைவிட அதிகமாகவே திறந்தோம். இன்று (ஆகஸ்ட் 17) காலை 8 மணி நிலவரப்படி, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட 12,000 கனஅடியை விடக் கூடுதல் தண்ணீரே தமிழ்நாட்டிற்குத் திறந்து விடப்பட்டுள்ளது. நாள் முழுவதும் இதே அளவு தொடரும். தமிழ்நாட்டிற்கு முழுமையாகத் தண்ணீர் வழங்க வேண்டும் என்பதற்காகவே மேகதாது அண கட்ட முயற்சிக்கிறோம்; ஆனால் தமிழ்நாடு அரசு அதற்குத் தொடர்ந்து முட்டுக்கட்டை போடுகிறது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

ஏற்கனவே ஒழுங்காற்றுக் குழு மற்றும் மேலாண்மை ஆணையம் அமைத்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில், நீதிமன்றம் இதில் தனியாக விசாரிக்கத் தேவையில்லை" என திட்டவட்டமாக தெரிவித்தார்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இரண்டு மாநில அரசுகளிடமும் கேள்விகளை எழுப்பினர், "உங்கள் அணைகளில் அத்தனை நீரையும் சேமிக்க முடியாது என்பதாலும், கடவுள் கொடுத்த மழைநீரை முழுமையாகத் தேக்கி வைக்க முடியாது என்பதாலும் தானே தற்போது தண்ணீரைத் திறந்து விட்டுள்ளீர்கள்? ஏன் தேவையான நீரை முன்பே திறக்கவில்லை?" என கர்நாடகாவை நோக்கி நீதிபதிகள் வினவினர்.

"கர்நாடகா தேவைக்கு அதிகமான தண்ணீரைத் திறந்து விட்டிருப்பதாகக் கூறும்போது, நீங்கள் தண்ணீர் வரவில்லை என்று சொல்வது ஏன்?" என தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்களிடம் நீதிபதிகள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு, "மழையினால் வந்த உபரி நீரைத் தவிர வேறு நீரை அவர்கள் தரவில்லை" எனத் தெளிவுபடுத்தியது

இதனை அடுத்து உத்தரவுகளை பிறப்பித்த நீதிபதிகள், ``இரு மாநிலங்களும் தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளன. இந்த ஒரு வார காலத்திற்குச் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை (வினாடிக்கு 12,000 கனஅடி) கர்நாடகா கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

இரு மாநிலங்களின் அறிக்கைகளையும் ஆய்வு செய்ய அவகாசம் தேவைப்படுவதால், வழக்கு விசாரணை அடுத்த திங்கட்கிழமைக்கு (ஆகஸ்ட் 24, 2026) ஒத்திவைக்கப்படுகிறது.

அதுவரை கர்நாடகாவால் திறந்து விடப்பட்ட நீரின் முழுமையான விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கூடுதல் நீர் கோரிக்கை [21,413 கனஅடி] உடனடி இடைக்கால உத்தரவாக ஏற்கப்படாததால், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை முக்கியத்துவம் பெறுகிறது.!

உ.பி முசாபர்நகர் நீதிமன்றம்: `4 மாதத்தில் 22 பேருக்கு தூக்குத் தண்டனை' - நடுங்கும் கைதிகள்

தூக்குத்தண்டனை என்பது மிகவும் கொடூரமான குற்றங்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு நீதிபதி பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனையை வழங்கி வருகிறார். அ... மேலும் பார்க்க

கரூர்: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கிய வழக்கு; நியமன ரத்து உத்தரவுக்கு இடைக்கால தடை

கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்குக் கர... மேலும் பார்க்க

'நீட் கலந்தாய்வில் தவறாகத் தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு' - உயர்நீதிமன்றம் உத்தரவு

பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற பிரஜித் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தன்னிடம் செல்லுபடியாகும் ஓசிஐ (OCI) அட்டை உள்ளது. நீட் யூஜி 2026 தேர்வில் பங்கேற்று தகுதி பெற்றுள்ளேன். ... மேலும் பார்க்க

பழனி நிலமோசடி விவகாரம்: "அன்வர்தீன் மரணத்தை அரசியலாக்க வேண்டாம்"- நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வாதம்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வேணுகோபால், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்தின் அறங்காவலர் அன்னபூரணி சிவக்குமார், திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி பிரதீப் ஆகியோர் மதுரை உயர்நீத... மேலும் பார்க்க

'தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையா?' - வேதாந்தா நிறுவனத்தின் மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணை

தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாகக் கூறி 2018-ம் ஆண்டு ஆலைக்கு எதிராக 100 நாட்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தின் 100வது நாளான மே... மேலும் பார்க்க

நீட் போராட்டத்தில் போலீஸாரின் செயல்: `சட்டம் தன் கடமையைச் செய்யும்' - அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்

மாணவர்களுக்கு முழு உரிமை உள்ளது!அமைதியான வழியில் போராடநீட் தேர்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது, காவல்துறையினர் மிதமிஞ்சிய பலத்தைப் பயன்படுத்தியதாக... மேலும் பார்க்க