செய்திகள் :

குஜராத்: 33 கிராமங்களுக்காக ரூ.21 கோடிக்கு கட்டிய தண்ணீர் தொட்டி- திறக்கப்படுவதற்கு முன்பே இடிந்தது!

post image

குஜராத் மாநிலம் சூரத் அருகில் உள்ள தட்கேஷ்வர் என்ற கிராமத்தில் மாநில அரசு, 33 கிராமங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்வதற்காக ரூ.21 கோடியில் 9 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் வகையில் 15 மீட்டரில் பிரம்மாண்ட தண்ணீர் டேங்க் ஒன்றை கட்டியது.

இதனை கட்டுவதற்கு தனியார் ஒப்பந்ததாரர் ஒருவர் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் சமீபத்தில் தண்ணீர் டேங்கை கட்டி முடித்தார். இதையடுத்து அரசு பொறியாளர்கள் தண்ணீர் டேங்கை ஆய்வு செய்வதற்காக வந்தனர். அவர்கள் தண்ணீர் டேங்க் முழுக்க தண்ணீரை நிரப்பினர். தண்ணீரை நிரப்பியபோதே தொட்டியில் கசிவு ஏற்பட்டது. தண்ணீர் முழுமையாக நிரப்பியவுடன் அதிகாரிகள் முன்னிலையில் தொட்டி அப்படியே இடிந்து விழுந்தது.

அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. 3 பேர் காயம் அடைந்தனர். கட்டி முடிக்கப்பட்டவுடன் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மிகவும் தரமில்லாத பொருட்களை கொண்டு தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க மாநில அரசு 7 தனிப்பிரிவுகளை அமைத்து இருக்கிறது. இது தவிர போலீஸார் இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்து அதிரடி ரெய்டு நடத்தி 7 பேரை கைது செய்து இருக்கின்றனர். மேலும் அரசின் துணை நிர்வாக பொறுப்பாளர் இதற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. அவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் தொடர்புடைய பல அதிகாரிகள் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ரூ.21 கோடியில் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டி நொடியில் அப்படியே அப்பளம் போன்று உடைந்து விழுந்தது மாநில அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை: சாலையில் தூக்கி வீசப்பட்ட ஆண் சிசுவின் சடலம்; நாய் கவ்விச் சென்ற அவலம்; பின்னணி என்ன?

நெல்லை, மேலப்பாளையம் அருகில் உள்ளது மேலநத்தம். இங்கு பழைய அரிசி ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலைக்குச் செல்லும் சாலையின் ஓரத்தில் தெருநாய் ஒன்று சிவப்பு நிறத் துணி சுற்றப்பட்ட ஒரு பார்சலை கவ்விச் சென்று வாய... மேலும் பார்க்க

`பொண்டாட்டினு கூட பார்க்காம அசிங்கமா வீடியோ எடுத்து.!’ அதிர வைக்கும் வரதட்சனை புகார்; விபரீத முடிவு

விழுப்புரம் மாவட்டம் பக்கிரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த எம்.ஏ பட்டதாரியான பிரியங்காவுக்கும், புதுச்சேரி பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயனுக்கும் கடந்த 2025 அக்டோபர் 31-ம் தேதி திரும... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவுக்கு இடையூறு; 4 வயது பெண் குழந்தையை வன்கொடுமை செய்து கொன்ற கொடூரன்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் இருளப்பபுரத்தைச் சேர்ந்தவர் சத்யா . இவருக்கும் ராஜா என்பவருக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. ராஜா இறந்து விட்டதால், தற்போது அந்தக்குழந்தை ராஜாவின் தாயிடம் வ... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகை: முதியவர்களைக் குறிவைத்து ரூ. 500ஐ அமுக்கிய ரேஷன்கடை ஊழியர்; அதிகாரிகள் விசாரணை

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசாக குடும்ப அட்டைக்கு ரூ.3000 மற்றும் ஒரு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சீனி மற்றும் வேட்டி, சேலை அறிவித்தது. இந்தப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப... மேலும் பார்க்க

கேரளா: பேருந்தில் எடுத்த வீடியோ வெளியானதால் ஊழியர் தற்கொலை செய்த வழக்கு - இளம் பெண் கைது

கேரள மாநிலம் கோழிக்கோடு வடகரா பகுதியை சேர்ந்தவர் ஷிம்ஜிதா முஸ்தபா(35). இன்ஸ்டா கன்டென்ட் கிரியேட்டரான இவர், கடந்த சில தினங்களுக்கு முன் பேருந்தில் பயணம் செய்தபோது கோழிக்கோடு கோவிந்தாபுரம் பகுதியைச் சே... மேலும் பார்க்க

போதையால் அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் - என்ன நடக்கிறது கோவையில்?

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே சின்ன மத்தம்பாளையம் பகுதி உள்ளது. அங்கு தனியார்மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது. அங்கு 50 வயது வயதான மதிக்கத்தக்க ஒருவர் நேற்று இரவு மது அருந்தியுள்ளார். இந... மேலும் பார்க்க