செய்திகள் :

கும்பகோணம், திருவலஞ்சுழி சுவேத விநாயகர் திருக்கோயில்: மன்னர் ராஜராஜனின் குலதெய்வக் கோயில் இதுதான்!

post image

திருவலஞ்சுழிநாதர்

காவிரி நதியின் கரையில் பல்வேறு தேவாரத் தலங்கள் அமைந்துள்ளன. அவை ஒவ்வொன்றும் தனிச்சிறப்புவாய்ந்தவை. காவிரியாலேயே பெயர்பெற்றதும், காவிரிநதி தோன்றியது குறித்த சரிதத்தை உடையதுமான திருத்தலம் திருவலஞ்சுழி.

மேலும் இத்தலத்தில் உள்ள க்ஷேத்திர பாலரே மாமன்னர் ராஜராஜனின் குலதெய்வம் என்றும் சொல்கிறார்கள். வாருங்கள், அந்த அற்புதத் தலத்தின் மகிமைகளையும் தலவரலாற்றையும் தெரிந்துகொள்வோம்.

கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில், சுவாமிமலையிலிருந்து வடக்கே 1 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது திருவலஞ்சுழி. கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்தத் தலத்தில் ஈசன் திருவலஞ்சுழிநாதராக அருள்பாலிக்கிறார். இவருக்கு

சித்தீசநாதர், செஞ்சடைநாதர், பொன்மலை, கற்பகநாதேஸ்வரர், கபர்த்தீசர் என்கிற திருநாமங்களும் உண்டு. இங்கே அம்பிகை கற்பக தேவி, வலஞ்சுழிநாயகி, பெரியநாயகி, பிருகந்நாயகி என்று துதிக்கப்படுகிறாள்.

திருவலஞ்சுழிநாதர் - பெரியநாயகி அம்பாள்

திருவலஞ்சுழி

ஒருமுறை, ஈசனை தரிசிக்க விரும்பிய ஆதிசேஷன் பூமியில் இருந்து வெளிப்பட்டார். அந்த இடத்தில் ஒரு பெரும் துவாரம் உருவானது. காவிரி ஆறு அந்த துவாரத்தில் பாய்ந்து பாதாளத்துக்குள் மறைந்தது.

இதனால் மக்கள் அனைவரும் வருந்தினர். தேசம் முழுவதும் பாய்ந்து செழுமைப்படுத்த வேண்டிய காவிரி இப்படி மறைந்துபோனால் என்னவாகும் என்று கவலையுற்றான் சோழ மன்னன்.

அப்போது ஈசன் அவருக்கு வழிகாட்டினார். ஏரண்ட மகரிஷியை அழைத்துவந்து அந்த துவாரத்துக்குள் இறங்கச் செய். அப்போது காவிரி வெளிப்படுவாள் என்றார். அதன்படியே ஏரண்ட மகரிஷியை வேண்டிக்கொள்ள அவரும் மனம் மகிழ்ந்து அதைச் செய்தார். காவிரி ஆறு மீண்டும் ஓரிடத்தில் மேலேறி வலமாகச் சுழித்து வெளிப்பட்டது. அப்படி நதி வலஞ்சுழித்து ஓடிய தலம் என்பதால் இதற்குத் திருவலஞ்சுழி என்ற பெயர் ஏற்பட்டது.

சுவேத விநாயகர்

இங்குள்ள சுவேத விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவர். அமுதம் பெற தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது, வெற்றி கிட்ட அங்கு இருந்த நுரைகளைக் கொண்டு விநாயகரை உருவாக்கி வழிபட்டனர். அந்தத் திருவுருவத்தையே இந்திரன் இங்கு கொண்டு வந்து வழிபட்டான் என்கிறது தலவரலாறு.

10 அங்குல உயரமே கொண்ட தீண்டாத் திருமேனியாக உள்ள சுவேத விநாயகரின் துதிக்கை வலப்பக்கம் சுழித்துள்ளதால் திருவலஞ்சுழி எனவும் இந்த ஊருக்குப் பெயர் ஏற்பட்டது என்பார்கள். இந்த மூர்த்திக்கு பச்சைக்கற்பூரம் மட்டும் சாத்தி அபிஷேகம் செய்யப்படுகிறது.

திருவலஞ்சுழி

பலகணி

திருவலஞ்சுழி பலகணி உலகப் புகழ் கொண்டது. சிற்பக்கலைக்குச் சிறந்த உதாரணம் இந்தக் கல்லால் வடிக்கப்பட்ட ஜன்னல். காண்பவரைக்கவரும் இந்த பலகணியைப் போன்ற அற்புதமான சிற்ப வேலைப்பாட்டை வேறு எங்கும் காண இயலாது.

பெரியநாயகி

இங்குள்ள பெரியநாயகி அம்மனை வழிபட்டு அவளுக்கு குங்குமார்ச்சனை செய்வதாக வேண்டிக்கொண்டால் திருமண வரம் நிச்சயம் கிட்டும் என்கிறார்கள். திருமணத்துக்குத் தடையாக இருக்கும் எல்லாவித தோஷங்கள், ஜாதகக் கோளாறுகள், பாவங்கள் அனைத்தையும் நீங்கும்.

க்ஷேத்திர பாலர்

திருவலஞ்சுழியில் அருள்புரியும் க்ஷேத்திர பாலர்தான் ராஜராஜ சோழனின் குலதெய்வம் என்கிறது வரலாறு. வெள்ளை விநாயகருக்கு அருகிலேயே க்ஷேத்திர பாலர் கோயில் உள்ளது. க்ஷேத்திர பாலர் என்றால் பைரவரையே குறிக்கும். ராஜராஜ சோழனின் பட்டத்து ராணியான உலகமாதேவி எனும் தந்திசக்தி இந்த க்ஷேத்திர பாலர் கோயிலை எழுப்பியதாகக் கல்வெட்டு கூறுகிறது.

ஏகவீரி

இங்குள்ள அஷ்டபுஜ காளியை ‘ஏகவீரி’ என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. மன்னன் ராஜராஜனின் மாமியாரான குந்தணன் அமுதவல்லியார், பிடாரி ஏகவீரிக்கு ‘அவபல அஞ்சனை’ செய்வதற்காக நிவந்தங்கள் வழங்கினார் என்ற கல்வெட்டு இங்குள்ளது.

சோழர்கள் இந்த சந்நிதியில் தங்களின் வாள், வேல் போன்ற ஆயுதங்களை வைத்து வழிபட்டு, இவளிடம் உத்தரவுபெற்ற பிறகே போருக்குப் புறப்படுவார்கள் என்றும் வரலாறு கூறுகின்றது.

சுவேத விநாயகர் - ஏகவீரி

எண்ணற்ற சந்நிதிகளுடன் கூடிய இந்த பிரமாண்ட ஆலயத்தை முற்காலத்தில் தேவ சிற்பியான விஸ்வகர்மா எழுப்பினார் என்கிறார்கள். பிற்காலத்தில் சோழர்களால் இந்த ஆலயம் விஸ்தரிக்கப்பட்டது.

நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மன், பிச்சாடனர், நடராஜர், அர்த்தநாரீஸ்வரர், துர்கை, சனீஸ்வரர் என கோஷ்ட தெய்வங்களும், லட்சுமி, சரஸ்வதி, 32 சிவலிங்கங்கள், நான்கு விநாயகர்கள், பாலமுருகன், மகாவிஷ்ணு, துர்கை, சப்த மாதர், வலஞ்சுழி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கஜலட்சுமி எனத் தனிச் சந்நிதி தெய்வங்களும் இங்கே அருள் செய்கின்றனர்.

‘மலங்கு பாய் வயல் சூழ்ந்த வலஞ்சுழி

வலங் கொள்வார் அடி என் தலைமேலவே!’ என்று பாடுகிறார் அப்பர் பெருமான். இதைப் படித்தே ராஜராஜ சோழன் தன்னை சிவபாதசேகரன் என்றும் சிவசரண சேகர தேவர் என்றும் அறிவித்துக்கொண்டார் என்கிறது வரலாறு.

இந்த ஆலயத்தின் சிறப்புகள் இன்னும் பல உள்ளன. வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய ஆலயம் இது என்பதால் வாய்ப்புக்கிடைக்கும்போது சென்று வழிபட்டு வாருங்கள். வாழ்க்கை வளமாகும் நலமாகும்.

காஞ்சிபுரம், இளையனார் வேலூர் பாலசுப்பிரமணியர் கோயில்: பங்குனியிலும் சூரசம்ஹாரம் நடைபெறும் தலம்!

முருகப்பெருமான் ஆலயங்களில் ஐப்பசி மாதம் கந்த சஷ்டித் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். அப்போது ஆறாம்நாள் சஷ்டி திதி அன்று சூரசம்ஹாரம் நடைபெறும். அதேபோன்று பங்குனி மாதத்திலும் சூரசம்ஹாரம் நடைபெறும் ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: 500 ஆண்டுகள் பழமையான கருப்பண்ணசாமி கோவில் குடமுழுக்கு விழா –பக்தர்கள் சாமி தரிசனம்

குடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி ஸ்ரீசீனிவாச பெருமாள்: திருமணம் நடக்க வழிபடுங்கள்; வியக்கும் பக்தர்கள்

நம் பாரத தேசம் முழுமையும் விஷ்ணு ஆலயங்கள் பல உள்ளன. பழைமைவாய்ந்த ஆலயங்கள் பல இருந்தாலும் பல புதிய ஆலயங்களும் தோன்றி பக்தியை வளர்த்து வருகின்றன. அந்த வகையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுக... மேலும் பார்க்க

திருவள்ளூர் மாவட்டம்,மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில்: மூல நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபடவேண்டிய தலம்!

தேவர்களும் முனிவர்களும் ஏன் மகாவிஷ்ணுவும் பிரம்மனும் காணவிரும்புவது ஈசனின் நடனக் காட்சி. அப்படிப்பட்ட அந்த அற்புதமான காட்சியை ஈசனும் அவரை நோக்கித் தவம் செய்பவர்களுக்கு காட்டி அருளினார். அப்படி அவர் தி... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டம், ஆட்சிப்பாக்கம் அட்சயவரதர்: பொன்னும் பொருளும் பதவியும் அருளும் தாயார் சந்நிதி!

பெருமாள் வரதராஜராக அருள்பாலிக்கும் தலங்கள் பல உள்ளன. அவற்றில் குறையாத செல்வம் அருளும் பெருமாளாக அட்சய வரதராகக் கோயில் கொண்டிருக்கும் தலம் ஆட்சிப்பாக்கம். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து ஆவணி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டம், திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர்: சுயம்புமூர்த்தி, நோய் தீர்க்கும் பஞ்சாம்ருதம்!

ஆலயம் சென்று வழிபடுவது அருள் சேர மட்டுமல்ல. பொருள் பெறவும் வாழும் இந்த வாழ்க்கையை இனிமையாக்கிக் கொள்ளவும்தான். ஒவ்வொரு ஆலயமும் தனித்துவமான நலன்களை வழங்கும் சிறப்பைக் கொண்டே அமைந்துள்ளன. அப்படிப்பட்ட ஓ... மேலும் பார்க்க