செய்திகள் :

குவைத், பஹ்ரைனைத் தாக்கிய ஈரான்; தடுத்து நிறுத்திய ஈரானின் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதா?

post image

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய ஈரான் போரில், கடந்த ஏப்ரல் 8-ம் தேதி முதல் 'தற்காலிக போர் நிறுத்தம்' இருந்து வந்தது.

ஆனால், நேற்று குவைத், பஹ்ரைன் போன்ற மத்தியக் கிழக்கு நாடுகளின் மீது ஈரான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியது.

இந்தத் தாக்குதலில் பஹ்ரைனில் உள்ள அமெரிக்கக் கடற்படையின் ஐந்தாம் படைப்பிரிவின் தலைமையகத்தையும், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனி விமானத் தளத்தையும் தாக்கியதாகவும் ஈரான் கூறியது.

ஈரானின் இந்தப் பேச்சை மறுத்து அமெரிக்க தற்காப்புப் படைகளில் ஒன்றான அமெரிக்க மத்திய கட்டளையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது...
ஈரான் போர்
ஈரான் போர்

"மத்தியக் கிழக்கு நாடுகள் முழுவதும் ஜூன் 2 அன்று ஈரான் நடத்த முயன்ற தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்கப் படைகள் ஈரானின் பல பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வெற்றிகரமாக முறியடித்ததோடு, கெஷ்ம் தீவிலும் தற்காப்புத் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

ஈரான் தனது பிராந்திய அண்டை நாடுகளை நோக்கிப் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. இருப்பினும், அவை எதுவுமே இலக்குகளைத் தாக்கவில்லை.

குவைத்தை நோக்கி ஏவப்பட்ட இரண்டு ஈரானிய ஏவுகணைகள் இலக்கை எட்டாமல் வழியிலேயே விழுந்து நொறுங்கின.

பஹ்ரைனை நோக்கி ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகள் அமெரிக்க மற்றும் பஹ்ரைன் வான் பாதுகாப்புப் படைகளால் உடனடியாக சுட்டு வீழ்த்தப்பட்டன.

இதற்கு சற்று முன்னதாக, சர்வதேசக் கடல் பகுதியில் சட்டப்பூர்வமாகப் பயணித்துக் கொண்டிருந்த வணிகக் கப்பல்களை நோக்கி ஈரான் ஏவிய மூன்று தற்கொலைத் தாக்குதல் டிரோன்களை அமெரிக்க மத்திய கட்டளையக (CENTCOM) படைகள் சுட்டு வீழ்த்தின.

ஈரான் போர்
ஈரான் போர்

மேலும், அமெரிக்கப் படைகள் கெஷ்ம் தீவில் உள்ள ஈரானிய ராணுவத்தின் தரைக்கட்டுப்பாட்டு மையத்தின் மீது தற்காப்புத் தாக்குதல்களையும் நடத்தின.

இந்தச் சம்பவங்களில் அமெரிக்க வீரர்கள் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது அமலில் இருக்கும் போர் நிறுத்தத்தின் போது, ஈரானின் அநியாயமான ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக படைகளைப் பாதுகாக்கவும், எதிர்த்துப் போராடவும் சென்ட்காம் படைகள் தொடர்ந்து விழிப்புடனும் தயார் நிலையிலும் உள்ளன."

கர்நாடகா: 'கதர்'ஜீ-க்களை மட்டுமல்ல, ஜென்சீ-களையும் கவர்ந்தவர் டி.கே.சிவகுமார்!

"இனி கர்நாடக அரசியலில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது" என்கிறார்கள் அரசியல்வாதிகளும், அரசியல் நோக்கர்களும்.கர்நாடக மாநிலத்தின் 23 வது முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும், ... மேலும் பார்க்க

அண்ணாமலை புதிய கட்சி அறிவிப்பு?; கர்நாடகா முதல்வராகப் பதவியேற்கிறார் DKS - இன்றைய அரசியல் நிகழ்வுகள்|Live updates

டி.கே.சிவகுமார் - கர்நாடகா முதலமைச்சர்2023-ம் ஆண்டு கர்நாடகாவின் முதலமைச்சராகப் பதவியேற்ற சித்தராமையா, கடந்த 28-ம் தேதி காங்கிரஸ் டெல்லி தலைமையின் உத்தரவையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனால்,... மேலும் பார்க்க

வாழ்வா - சாவா போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ்: மம்தா பானர்ஜியின் அதிரடி முழக்கம்!

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அங்கு ஆளும் கட்சியாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் தற்போது தன் வரலாற்றிலேயே மிக மோசமான வாழ்வா-சாவா போராட்டத்தை எதிர்கொண்டுள்... மேலும் பார்க்க

`விஜய் Bro... உங்களை இயலாதவர் என்று சொல்வதில் என்ன தவறு?'- முதல்வரின் விமர்சனங்களுக்கு ஆ.ராசா பதில்!

முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என இரண்டு தொகுதிகளில் தேர்தலை எதிர்க்கொண்டு வெற்றிப்பெற்றார். அதைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதிக்கான எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.இந்த நிலை... மேலும் பார்க்க

எஸ்.பி.வேலுமணியை ’துரோகி' என்ற அதிமுக தொண்டர் – பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டில் பரபரப்பு!

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார் சரஸ்வதி அம்மாள், கடந்த மே 16ம் தேதி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்... மேலும் பார்க்க

போலி கையொப்ப சிக்கல்; அதிகரிக்கும் அதிருப்தி... பிளவை நோக்கிச் செல்கிறதா மம்தா கட்சி?!

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது. இத்தோல்வியால் கட்சி கலகலத்துப்போய் இருக்கிறது. வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்களில் பெரும்பான்மையினர் திரிணா... மேலும் பார்க்க