'தோழியை சந்திக்க வந்த இடத்தில்.!' கோயம்பேடு தனியார் பார் தகராறு; மற்றொரு பெண்ணும...
குவைத், பஹ்ரைனைத் தாக்கிய ஈரான்; தடுத்து நிறுத்திய ஈரானின் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதா?
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய ஈரான் போரில், கடந்த ஏப்ரல் 8-ம் தேதி முதல் 'தற்காலிக போர் நிறுத்தம்' இருந்து வந்தது.
ஆனால், நேற்று குவைத், பஹ்ரைன் போன்ற மத்தியக் கிழக்கு நாடுகளின் மீது ஈரான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியது.
இந்தத் தாக்குதலில் பஹ்ரைனில் உள்ள அமெரிக்கக் கடற்படையின் ஐந்தாம் படைப்பிரிவின் தலைமையகத்தையும், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனி விமானத் தளத்தையும் தாக்கியதாகவும் ஈரான் கூறியது.
ஈரானின் இந்தப் பேச்சை மறுத்து அமெரிக்க தற்காப்புப் படைகளில் ஒன்றான அமெரிக்க மத்திய கட்டளையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது...

"மத்தியக் கிழக்கு நாடுகள் முழுவதும் ஜூன் 2 அன்று ஈரான் நடத்த முயன்ற தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்கப் படைகள் ஈரானின் பல பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வெற்றிகரமாக முறியடித்ததோடு, கெஷ்ம் தீவிலும் தற்காப்புத் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
ஈரான் தனது பிராந்திய அண்டை நாடுகளை நோக்கிப் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. இருப்பினும், அவை எதுவுமே இலக்குகளைத் தாக்கவில்லை.
குவைத்தை நோக்கி ஏவப்பட்ட இரண்டு ஈரானிய ஏவுகணைகள் இலக்கை எட்டாமல் வழியிலேயே விழுந்து நொறுங்கின.
பஹ்ரைனை நோக்கி ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகள் அமெரிக்க மற்றும் பஹ்ரைன் வான் பாதுகாப்புப் படைகளால் உடனடியாக சுட்டு வீழ்த்தப்பட்டன.
இதற்கு சற்று முன்னதாக, சர்வதேசக் கடல் பகுதியில் சட்டப்பூர்வமாகப் பயணித்துக் கொண்டிருந்த வணிகக் கப்பல்களை நோக்கி ஈரான் ஏவிய மூன்று தற்கொலைத் தாக்குதல் டிரோன்களை அமெரிக்க மத்திய கட்டளையக (CENTCOM) படைகள் சுட்டு வீழ்த்தின.

மேலும், அமெரிக்கப் படைகள் கெஷ்ம் தீவில் உள்ள ஈரானிய ராணுவத்தின் தரைக்கட்டுப்பாட்டு மையத்தின் மீது தற்காப்புத் தாக்குதல்களையும் நடத்தின.
இந்தச் சம்பவங்களில் அமெரிக்க வீரர்கள் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது அமலில் இருக்கும் போர் நிறுத்தத்தின் போது, ஈரானின் அநியாயமான ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக படைகளைப் பாதுகாக்கவும், எதிர்த்துப் போராடவும் சென்ட்காம் படைகள் தொடர்ந்து விழிப்புடனும் தயார் நிலையிலும் உள்ளன."










