செய்திகள் :

குமாரபாளையம்: 3 வயது பெண் குழந்தைக்குப் பாலியல் தொல்லை - காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!

post image

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் 12 வயது சிறுமியை, பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து, பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை குமாரபாளையம் காவல் நிலையத்தில் சிறுமியின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், குமாரபாளையம் பகுதியில் மூன்று வயது பெண் குழந்தைக்கு முதியவர் ஒருவர் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக உறவினர்கள் கண்ணீருடன் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

இந்தக் கொடூரத்தை அறிந்த உள்ளுர் மக்கள், 59 வயதான அந்த நபரைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். காவல்துறையினர் அவரை மீட்ட நிலையிலும், ஆத்திரம் தீராத மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, `அவனை எங்களிடம் ஒப்படையுங்கள்..' எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போலீஸார் அந்த நபர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவுசெய்து, தாக்குதலில் காயங்கள் ஏற்பட்டதால்... மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்.

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்

இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய காவல்துறையினர், "3 வயது மற்றும் 12 வயது சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இந்த இரு வேறு சம்பவங்களில் ஈடுபட்ட 59 வயது மற்றும் 62 வயதுடைய இரண்டு நபர்களைக் கைதுசெய்திருக்கிறோம். ஒருவரை சிறையில் அடைத்துள்ளோம்‌. மற்றொரு நபரை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறோம். இரண்டு சிறுமிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருவரும் நலமுடன் உள்ளனர். இந்தக் கொடூரச் சம்பவங்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். அளவுக்கு அதிகமாக மக்கள் கூடியதால் பாதுகாப்பு காரணங்களுக்காக காவல் நிலைய கதவுகள் மூடப்பட்டன. கூடுதல் பாதுகாப்பு வழங்கி அந்த நபர்களை அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது" என்றனர்.

45 லிட்டர் கொள்ளளவு டேங்கில் 52 லிட்டர் பெட்ரோல் எப்படி? - கார் உரிமையாளரால் அம்பலமான மோசடி

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், தனது புத்தம் புதிய காரின் 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கில் 52 லிட்டர் பெட்ரோல் நிரப்பப்பட்டதாகக் கூறி ரசீது வழங்கப்பட்டதைக் கண்டு கார் உரிமையாளர் ஒருவர் அ... மேலும் பார்க்க

கரூர்: கல்குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் கொல்லப்பட்ட்ட வழக்கு; 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டன

கரூர் மாவட்டம், க.பரமத்தி அடுத்த குப்பம் கிராமத்தில் வசித்து வந்தவர், ஜெகநாதன் (வயது: 52). சமூக ஆர்வலரான அவர், அப்பகுதியில் விவசாயம் மேற்கொண்டு வந்தார். க.பரமத்தி, தென்னிலை சுற்று வட்டார பகுதிகளில் இய... மேலும் பார்க்க

நெல்லை: தகாத உறவைக் கைவிட மறுத்த மகள்; வாயில் விஷம் ஊற்றி கொன்று, தற்கொலை நாடகமாடிய பெற்றோர் கைது

நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகேயுள்ள செண்பகராமநல்லூரைச் சேர்ந்தவர் சிவன். இவரது மனைவி வைரம்மாள். இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். இவரது 5வது மகள் அமுதா. திருமணமாகாத நிலையில் அமுதா தன் பெற்றோருடன் வசித... மேலும் பார்க்க

தூத்துக்குடி: வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை; தவெக நிர்வாகிகள் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். அவரது நண்பர் ராமநாதபுர... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதை தட்டிக்கேட்ட இளைஞர் கொலை - சென்னை தண்டையார்பேட்டை சம்பவத்தில் என்ன நடந்தது?

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் விஷ்ணு (வயது 23). அந்தப் பகுதியில் கும்பல் ஒன்று கஞ்சா விற்று வந்திருக்கிறது. இதை எதிர்த்து காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார் விஷ்ணு. அந்தக் காவல் நிலையத்தில் உ... மேலும் பார்க்க

கேரளம்: திருமணம் மீறிய உறவால் குழந்தை கொலை; நடனப் பெண், டிரைவர் பின்னணி குறித்த அதிர்ச்சித் தகவல்

கேரள மாநிலம் நெடுமங்காடு பனவூரில் வாடகை வீட்டில் வசித்துவந்தார் அகிலா. நடன மங்கையான அகிலா நடனக்குழுவுடன் கோயில் திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுவதற்குச் செல்வது வழக்கம். அகிலா மூன்று மாதக்... மேலும் பார்க்க