செய்திகள் :

தூத்துக்குடி: வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை; தவெக நிர்வாகிகள் கைது

post image

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார்.

அவரது நண்பர் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகியாக உள்ளார். இவர்கள் இருவரும் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை வேலை வாங்கி தருவதாக காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.  

அனைத்து மகளிர் காவல் நிலையம்
அனைத்து மகளிர் காவல் நிலையம்

ராமநாதபுரம் அருகே  ஏர்வாடி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பின்னர் அந்தப் பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். மயக்கம் தெளிந்து கண் விழித்து பார்த்த போதுதான் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது அவருக்குத் தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் இந்தச் சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்ததுடன் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.  

அனைத்து மகளிர் காவல் நிலையம்
அனைத்து மகளிர் காவல் நிலையம்

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, “பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. தேர்தல் காலத்தைப் போல தி.மு.க மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, தாங்கள்தான் ஆளுங்கட்சி என்பதை உணர்ந்து பொறுப்புடன் முதல்வர் விஜய் அவர்கள் செயல்படப் போவது எப்போது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூர்: கல்குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் கொல்லப்பட்ட்ட வழக்கு; 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டன

கரூர் மாவட்டம், க.பரமத்தி அடுத்த குப்பம் கிராமத்தில் வசித்து வந்தவர், ஜெகநாதன் (வயது: 52). சமூக ஆர்வலரான அவர், அப்பகுதியில் விவசாயம் மேற்கொண்டு வந்தார். க.பரமத்தி, தென்னிலை சுற்று வட்டார பகுதிகளில் இய... மேலும் பார்க்க

நெல்லை: தகாத உறவைக் கைவிட மறுத்த மகள்; வாயில் விஷம் ஊற்றி கொன்று, தற்கொலை நாடகமாடிய பெற்றோர் கைது

நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகேயுள்ள செண்பகராமநல்லூரைச் சேர்ந்தவர் சிவன். இவரது மனைவி வைரம்மாள். இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். இவரது 5வது மகள் அமுதா. திருமணமாகாத நிலையில் அமுதா தன் பெற்றோருடன் வசித... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதை தட்டிக்கேட்ட இளைஞர் கொலை - சென்னை தண்டையார்பேட்டை சம்பவத்தில் என்ன நடந்தது?

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் விஷ்ணு (வயது 23). அந்தப் பகுதியில் கும்பல் ஒன்று கஞ்சா விற்று வந்திருக்கிறது. இதை எதிர்த்து காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார் விஷ்ணு. அந்தக் காவல் நிலையத்தில் உ... மேலும் பார்க்க

கேரளம்: திருமணம் மீறிய உறவால் குழந்தை கொலை; நடனப் பெண், டிரைவர் பின்னணி குறித்த அதிர்ச்சித் தகவல்

கேரள மாநிலம் நெடுமங்காடு பனவூரில் வாடகை வீட்டில் வசித்துவந்தார் அகிலா. நடன மங்கையான அகிலா நடனக்குழுவுடன் கோயில் திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுவதற்குச் செல்வது வழக்கம். அகிலா மூன்று மாதக்... மேலும் பார்க்க

"கார் கொடுக்காததால் கொன்றுவிட்டனர்" - வரதட்சணை கொடுமையால் பெண் சோசியல் மீடியா பிரபலம் தற்கொலை?

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த த்விஷா சர்மா என்ற எம்.பி.ஏ பட்டதாரிப் பெண் சமீபத்தில் போபாலில் உள்ள தனது கணவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவரைக் கொலை செய்து தூக்கி... மேலும் பார்க்க

சென்னை மதுபான பாரில் தகராறு; இலங்கைப் பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் பார்க்கு சீல்; பின்னணி என்ன?

நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் பார் ஒன்றில் தகராறு ஏற்பட்டு, அது கொலையில் முடிந்துள்ளது. இலங்கையைச் சேர்ந்தவர் யான்சி. இவர் தனது இரண்டு தோழிகளுடன் கோயம்பேட்டில் உள்ள தனியார் பார்க்குச் சென்ற... மேலும் பார்க்க