செய்திகள் :

நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயில்; அதிகரிக்கும் உயிரிழப்புகள்; தாமதமாகும் பருவமழை

post image

நாடு முழுவதும் வெயில் சுட்டெரித்து வருகிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

மற்றொரு பக்கம் இந்நேரம் தொடங்கி இருக்க வேண்டிய பருவ மழை கேரளாவில் இன்னும் தொடங்கவில்லை. அதேசமயம் தொடர்ந்து நாட்டின் பெரும்பாலான இடங்களில் வெயில் 45 டிகிரிக்கும் அதிகமாக இருந்து வருகிறது.

இந்த ஆண்டு, வடக்கு, மத்திய மற்றும் மேற்கு மாநிலங்களில் வெப்பத்தின் அளவு உச்சநிலையைக் கண்டுள்ளது. டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற இடங்களில் கடுமையான வெப்பம் இருந்து வருகிறது.

இதற்கு முன்பு 2024 ஆம் ஆண்டில், ராஜஸ்தானின் சில பகுதிகளில் அதிக பட்சமாக 50.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருந்தது.

இந்த ஆண்டு பகல் மட்டுமல்லாமல் இரவிலும் மக்கள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மின் தேவை அதிகரித்து அடிக்கடி இரவு நேரங்களில் மின் வெட்டு அமல்படுத்தப்படுவதால் மக்கள் இரவு நேரங்களில் தூக்கத்தைத் தொலைத்துள்ளனர்.

கடுமையான வெயில் காரணமாக பகல் நேரங்களில் மாரடைப்பு, சுவாசப் பிரச்னைகள் ஏற்பட்டு பலர் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் மட்டும் கடந்த 5 நாட்களில் வெயில் தொடர்பான பிரச்னையில் 8 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தவிர அகமதாபாத், ஜெய்ப்பூர், சூரத் போன்ற நகரங்களில் ஒரே நாளில் தலா 250 பேர் உயிரிழந்துள்ளனர். பருவமழையும் தாமதம் அடைந்து வருவதால் மக்கள் காலை 10 மணிக்கு மேல் வெளியில் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர்.

Rajasthan: ராஜஸ்தானில் அதிவேக புழுதிப்புயல்; வைரலான வீடியோ - காரணம் என்ன?

ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானெர் மற்றும் சுரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று திடீரென புழுதிப்புயல் வீசியது. அதிக வேகத்தில் இந்தப் புயல் வீசியதால், இப்பகுதிகள் முழுவதும் புழுதியால் சூழப்பட்டது. இது தொடர்பாகச்... மேலும் பார்க்க

Miyazaki: ஒரு ஜோடி மாம்பழம் ரூ.3.5 லட்சம்? உலகின் காஸ்ட்லியான மியாசாகி மாம்பழம் உருவாவது எப்படி?

மாம்பழங்கள் என்றால் பல வகை உண்டு. ஆனால், சில மாம்பழங்கள் பழக்கடையில் இல்லாமல், ஒரு சொகுசு நகைக் கடையில் இருக்க வேண்டிய தகுதியுடன் காட்சியளிக்கும். அப்படிப்பட்ட ஒரு மாம்பழம்தான் ஜப்பானின் 'மியாசாகி' மா... மேலும் பார்க்க

''மெல்ல மெல்ல அழியும் எவரெஸ்ட் சிகரம்!'' - 6 முறை ஏறிய வீராங்கனை சொன்ன அதிர்ச்சி தகவல்

பனி மூடிய இமயமலையின் சிகரங்களை ரசிப்பதும், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டுச் சாதனை படைப்பதும் பல மலையேற்ற வீரர்களின் வாழ்நாள் கனவாகும். ஆனால், நாம் தூரத்தில் இருந்து பார்த்து ரசிக்கும் அந... மேலும் பார்க்க

நடிகர் சாயாஜி ஷிண்டே: தாயின் அன்புக்காக 6.5 லட்சம் மரங்கள் வளர்த்த `பசுமை நாயகன்!’

சினிமா உலகில் பல நடிகர்கள் புகழுக்காகவும், பணத்திற்காகவும் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், திரைக்கு அப்பால் சமூகத்தின் மீதும் இயற்கையின் மீதும் தீராத அக்கறை கொண்ட ஒரு கலைஞன் இருக்கிறார். அவர்தான் பல மொழ... மேலும் பார்க்க

'Climate Change பாதிப்புகளிலிருந்து தப்பிக்க இது மட்டும்தான் வழி!' - City Union Bank கருத்தரங்கு

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாமல், 'பசுமை முறை'யில் தொழிலை வளர்ப்பது குறித்து... சிட்டி யூனியன் வங்கி கடந்த 24-ம் தேதி கோயம்புத்தூரில் கருத்தரங்கு ஒன்றை நடத்த... மேலும் பார்க்க