செய்திகள் :

`கை, கால்களை வெட்டினால்தான் சட்டத்தை மதிப்பார்கள்' - கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி காட்டம்

post image

பெங்களூரை சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மணிப்பாலில் கைதான மாணவர் அவருடன் சேர்ந்து படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரது ஜாமீன் மனு கீழ்க்கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

இம்மனு நீதிபதி நடராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனது மனுதாரர் எந்த தவறும் செய்யாமல் 3 மாதங்களாக சிறையில் இருப்பதாக குறிப்பிட்டார்.

அதற்கு பதிலளித்த நீதிபதி நடராஜ், ''உப்பு தின்றால் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். இன்னும் 4-5 நாட்கள் சிறையில் இருக்கட்டும். சிறைக்குப் பழகட்டும். யாருக்குத் தெரியும், நீங்கள்(மனுதாரர்) தண்டிக்கப்பட்டால், நீங்கள் மீண்டும் (சிறைக்கு) செல்ல வேண்டியிருக்கும்.

குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் உறுதியாகக் கையாளப்படாத காரணத்தால் மக்கள் சாதாரணமாக குற்றங்களைச் செய்கிறார்கள். அதனால்தான் மத்திய கிழக்கு நாடுகளை போலல்லாமல் ஒரு குற்றத்தைச் செய்வது மிகவும் எளிதாகிறது. குற்றவாளிகளை உறுதியாகக் கையாளாததால் சட்டம் அதன் பற்களை இழந்துவிட்டது. குற்றம் செய்பவர்களின் ஒரு காலையோ கையையோ வெட்டினால், மக்கள், ஒருவேளை, சட்டத்தை மதித்து நடப்பார்கள்.

ஜனநாயகம் இருப்பதால், எல்லோரும் அதன் பலனை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்கிறார்கள்" என்று நீதிபதி தெரிவித்தார். அதோடு குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் கொடுக்க மறுத்த நீதிபதி மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து மாநில அரசு பதிலளிக்க உத்தரவிட்டார். நீதிபதியின் இக்கருத்து கடும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேகதாது: `எந்த முகாந்திரமும் இல்லை'- தமிழ்நாடு அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்னையான காவிரி நீர் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் இருந்து தமிழக அரசுக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது பகுதியில் புதிய... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு | 77-வது நாளில் தீர்ப்பு

தூத்துக்குடியில் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலால் கொலை செய்த வழக்கில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டைத் தூக்கு தண்டனையும், உடலில் பலத்த காயம் ஏற்படுத்தியதற்கு... மேலும் பார்க்க

NEET: `இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை!' – மத்திய அரசு, NTA-வை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்!

2026-ஆம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வான நீட் யுஜி (NEET UG 2026) வினாத்தாள் கசிவு விவகாரம், நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ள நிலை... மேலும் பார்க்க

Twisha Sharma case: `நீதிபதி குடும்பம் என்பதால் பாரபட்சமா?' - வழக்கை கையில் எடுத்தது உச்ச நீதிமன்றம்

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது முன்னாள் நடிகை த்விஷா ஷர்மாவின் மரணம். மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில், தனது கணவர் வீட்டில் கடந்த மே 12-ம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் கண... மேலும் பார்க்க

``ஒவ்வொரு முறையும் ஜாமீன் வழங்க முடியாது" - உமர் காலித் மனுவை மீண்டும் நிராகரித்த நீதிமன்றம்!

டெல்லி கலவர வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள உமர் காலித் தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தனது மறைந்த மாமாவின் 40வது நாள் சடங்கில் பங்கேற... மேலும் பார்க்க

`தெரு நாய்களை மீண்டும் பொது இடங்களில் விட முடியாது! மாநில அரசுகள்...' - உச்ச நீதிமன்றம் அதிரடி!

நாடெங்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறிவரும் தெரு நாய் கடி விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் இன்று மிக முக்கியமான, அதிரடியான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. பொது இடங்களில் இருந்து பிடிக்கப்படும் தெரு நாய்களைக்... மேலும் பார்க்க