செய்திகள் :

கரூர்: கல்குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் கொல்லப்பட்ட்ட வழக்கு; 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டன

post image

கரூர் மாவட்டம், க.பரமத்தி அடுத்த குப்பம் கிராமத்தில் வசித்து வந்தவர், ஜெகநாதன் (வயது: 52). சமூக ஆர்வலரான அவர், அப்பகுதியில் விவசாயம் மேற்கொண்டு வந்தார். க.பரமத்தி, தென்னிலை சுற்று வட்டார பகுதிகளில் இயங்கும் சட்டவிரோத கல்குவாரிகள் சில அரசின் உரிமம் காலாவதியான நிலையிலும் கற்கள் வெட்டி எடுப்பதை கரூர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில், ஜெகநாதன் அளித்த புகார் ஒன்றின், விசாரணைக்காக கடந்த 2022 -ம் ஆண்டு, செப்டம்பர் 9-ம் தேதி கரூர் மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள் கல்குவாரியை சோதனை நடத்தி குவாரிக்கு சீல் வைத்தனர்.

murder

இதனால், ஆத்திரமடைந்த கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார், அதே வருடம் செப்டம்பர் 18-ம் தேதி சமூக ஆர்வலர் ஜெகநாதன் தனது இருசக்கர வாகனத்தில் குப்பம் கிராமத்திலிருந்து காருடையாம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, மினி வேனை ஏற்றி கொலை செய்து விட்டு, இந்த கொலையினை மறைக்க சாலை விபத்து போல சித்திரித்து நாடகம் ஆடினார். ஆனால், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில், கொலை வழக்காக மாற்றப்பட்டு கரூர் நீதிமன்றத்தில் கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார் மற்றும் ரஞ்சித் குமார் உள்ளிட்ட மூன்று பேர் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கானது, கடந்த நான்கு ஆண்டுகளாக , கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்பு விசாரணை முடிவுற்று, நேற்று மாலை தீர்ப்பு வாசித்தார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கல்குவாரி உரிமையாளர் க.பரமத்தி பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (வயது: 42), ராணிப்பேட்டை அடுத்த ஆற்காடு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார்(வயது: 52) மற்றும் சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியைச் சேர்ந்த மினி வேன் ஓட்டுநர் சக்திவேல்(வயது: 28) ஆகிய மூன்று பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். செலுத்த தவறினால், மேலும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து, குற்றவாளிகள் மூவரையும் போலீஸார் பலத்த பாதுகாப்புடன் திருச்சியில் உள்ள மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

கரூரை சேர்ந்த சுற்றுச்சூழல் சமூக ஆர்வலர் ஜெகநாதன் கொலை வழக்கில், குற்றவாளிகள் மூவருக்கு நீதிபதி தண்டனை வழங்கியதை அடுத்து, நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் இந்த அதிரடி தீர்ப்புக்கு தங்கது நன்றியை தெரிவித்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்,

"இந்த கொலை வழக்கில் உரிய விசாரணை மேற்கொண்டு நீதிமன்றம் வழங்கி உள்ள இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

murder

கொலை செய்யப்பட்ட ஜெகநாதன் கரூர் மாவட்டத்தில் இயங்கும் சட்டவிரோத கல்குவாரிக்கு எதிராக போராடி அரசுக்கு பல கோடி ரூபாய் வருமான இழப்பை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால், அவர் கொலை செய்யப்பட்டார். ஆனால், முந்தைய தி.மு.க அரசு கொலை செய்யப்பட்ட விவசாயிக்கு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. தற்போது, புதிதாக ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அரசு கொலை செய்யப்பட்ட ஜெகநாதனுக்கு இரங்கல் தெரிவிக்க வேண்டும். மேலும், அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். ஜெகநாதனின் குடும்பத்தாருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தனர்.

நெல்லை: தகாத உறவைக் கைவிட மறுத்த மகள்; வாயில் விஷம் ஊற்றி கொன்று, தற்கொலை நாடகமாடிய பெற்றோர் கைது

நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகேயுள்ள செண்பகராமநல்லூரைச் சேர்ந்தவர் சிவன். இவரது மனைவி வைரம்மாள். இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். இவரது 5வது மகள் அமுதா. திருமணமாகாத நிலையில் அமுதா தன் பெற்றோருடன் வசித... மேலும் பார்க்க

தூத்துக்குடி: வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை; தவெக நிர்வாகிகள் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். அவரது நண்பர் ராமநாதபுர... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதை தட்டிக்கேட்ட இளைஞர் கொலை - சென்னை தண்டையார்பேட்டை சம்பவத்தில் என்ன நடந்தது?

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் விஷ்ணு (வயது 23). அந்தப் பகுதியில் கும்பல் ஒன்று கஞ்சா விற்று வந்திருக்கிறது. இதை எதிர்த்து காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார் விஷ்ணு. அந்தக் காவல் நிலையத்தில் உ... மேலும் பார்க்க

கேரளம்: திருமணம் மீறிய உறவால் குழந்தை கொலை; நடனப் பெண், டிரைவர் பின்னணி குறித்த அதிர்ச்சித் தகவல்

கேரள மாநிலம் நெடுமங்காடு பனவூரில் வாடகை வீட்டில் வசித்துவந்தார் அகிலா. நடன மங்கையான அகிலா நடனக்குழுவுடன் கோயில் திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுவதற்குச் செல்வது வழக்கம். அகிலா மூன்று மாதக்... மேலும் பார்க்க

"கார் கொடுக்காததால் கொன்றுவிட்டனர்" - வரதட்சணை கொடுமையால் பெண் சோசியல் மீடியா பிரபலம் தற்கொலை?

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த த்விஷா சர்மா என்ற எம்.பி.ஏ பட்டதாரிப் பெண் சமீபத்தில் போபாலில் உள்ள தனது கணவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவரைக் கொலை செய்து தூக்கி... மேலும் பார்க்க

சென்னை மதுபான பாரில் தகராறு; இலங்கைப் பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் பார்க்கு சீல்; பின்னணி என்ன?

நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் பார் ஒன்றில் தகராறு ஏற்பட்டு, அது கொலையில் முடிந்துள்ளது. இலங்கையைச் சேர்ந்தவர் யான்சி. இவர் தனது இரண்டு தோழிகளுடன் கோயம்பேட்டில் உள்ள தனியார் பார்க்குச் சென்ற... மேலும் பார்க்க