செய்திகள் :

கொளத்தூர்: "50 வருஷமா வாழும் வீட்டை இடிக்கப்போறோம்னு சொல்றாங்க" பாரத் ராஜீவ்காந்தி நகர் மக்கள்

post image

கொளத்தூரில் அமைந்திருக்கும் பாரத் ராஜீவ் காந்தி நகர் பகுதி மக்களின் வீடுகளை இடித்து, பொதுமக்களை அப்புறப்படுத்த தமிழக அரசு ஆயத்தமாகவுள்ளதாக குமுறுகிறார்கள் குடியிருப்புவாசிகள்!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது பாரத் ராஜீவ் காந்தி நகர். இப்பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்துவருவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் பாரத் ராஜீவ் காந்தி நகரின் பல தெருக்கள் தனிநபர் ஒருவரின் பெயரில் இருப்பதாகவும், நீதிமன்றம் அப்புறப்படுத்த ஆணையிட்டிருப்பதாகவும் கூறி வீடுகளை இடித்து பொதுமக்களை அப்புறப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிகிறது.

பாரத் ராஜீவ் காந்தி நகர்

நம்மிடம் பேசிய குடியிருப்புவாசி கோபிநாத் கூறியதாவது:
"பாரத் ராஜீவ் காந்தி நகரைச் சுற்றி எந்த நீர்வழித்தடங்களும் இப்போதில்லை. மூன்றாவது தலைமுறையாக வசித்துவருவதால் எங்களுக்கு பட்டா கொடுக்க வேண்டும் என கோரினோம். அதன்படி சென்னை மாவட்ட கலெக்டரிடம் பட்டா கேட்டு மனு கொடுத்தபோது, எங்கள் வீடுகளுக்கு பட்டா கேட்டு நாங்கள் மனு அளித்தபோது இந்தப் பகுதி ஏரி உள்வாயில் அரசு புறம்போக்கு நிலம் என்று தவிர்த்தார்கள். இதனால் நாங்கள் முதலமைச்சர் தனிப்பிரிவிலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழும் கேட்டதில் அரசு ‘ஏரி உள்வாயில் புறம்போக்கு’ என்று எங்களுக்கு எழுத்துமூலமாக தெரிவித்தனர்.

நாங்கள் கோரிக்கை விடுத்தபோது ‘நீர்வழித்தடம்’ என மறுத்த மாவட்ட நிர்வாகம், தற்போது ‘தனிநபரின் நிலத்தில் நீங்கள் வசிக்கிறீர்கள், உடனடியாக காலிசெய்ய வேண்டும்’ என்கிறார்கள். மேலும் டிசம்பர் 8ம் தேதி இரவு எங்கள் ஏரியா முழுக்க போலீசாரையும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். ‘50 ஆண்டுகளாக வசிக்கும் வீட்டை இடிக்க போறோம்னு சொல்றாங்க’. இதில் எங்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் அப்புறப்படுத்தும் பணிகளை தொடங்கக்கூடாது" என்றார் கண்ணீருடன்.

பாரத் ராஜீவ் காந்தி நகர் மக்கள்

தொடர்ந்து பேசிய குடியிருப்புவாசிகள் சிலர் கூறியது:
"2021 சட்டமன்றத் தேர்தலில், வாக்கு கேட்க வந்த முதல்வர் தரப்பு எங்களுக்கு பட்டா தரப்படும், எந்த இடையூறும் இன்றி நீங்கள் வசிக்க நாங்கள் உதவியாக இருப்போம் என வாக்குறுதி கொடுத்தனர். அதை நம்பி பல முறை பட்டா கேட்டு அரசு அலுவலகங்களின் படிக்கட்டுகளை ஏறினோம். ‘ஏரி உள்வாயில் புறம்போக்கு பகுதியில் பட்டா தர முடியாது’ எனச் சொன்ன அரசு, இப்போது நாங்கள் வசிக்கும் நிலம் தனிநபரின் பெயரில் இருப்பதாகச் சொல்கிறது. இந்த இடைப்பட்ட 6 மாதத்தில் புறம்போக்கு நிலம் எப்படி தனிநபருக்கு மாறியது எனத் தெரியவில்லை. சிறுகச் சிறுக சேர்த்து நாங்கள் கட்டிய வீடுகளை விட்டு போகச் சொன்னால் எங்கே செல்வது? அரசு எங்களை அப்புறப்படுத்தும் பணியை தொடங்கக்கூடாது" என அவர்கள் குமுறினர்.

"இது என் மீது ஜோடிக்கப்பட்ட வழக்கு" - தீர்ப்பு குறித்து நடிகர் திலீப் சொன்ன விஷயம்

கேரளாவைச்சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு, அதை வீடியோவாகவும் பதிவுசெய்த வழக்கு, 2017-ம் ஆண்டு முதல் இன்றுவரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தச் சம்... மேலும் பார்க்க

`258 பக்கம் ஆவணம், ரூ.1,020 கோடி ஊழல்?' - கே.என்.நேரு மீது FIR பதிவு செய்ய அமலாக்கத்துறை கடிதம்

திமுகமூத்த அமைச்சர் கே.என்.நேரு1,020 கோடி ரூபாய் வரை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ஊழல் செய்திருப்பதாகக் குற்றம்சாட்டி வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத்துறை தமிழக தலைமை செயலாளர் மற... மேலும் பார்க்க

சாத்தூர்: அரசு அலுவலருக்குப் பினாமியாக 10 ஆண்டுகள் பணிபுரிந்த நபர் - எம்.எல்.ஏ ஆய்வில் அம்பலம்!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில் நடைபெறும் பணிகள் குறித்து சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.ஏ.ஆர்.ஆர். ரகுராமன் வெம்பக்கோட்டை ஊராட்... மேலும் பார்க்க

வரும் 31-ம் தேதி தான் கெடு: பான் கார்டு ரத்தாகலாம்; உங்கள் பான் கார்டை செக் செய்வது எப்படி?| How to

வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை தான் டைம். அதற்குள் பான்‌ கார்டை, ஆதார் கார்டு உடன்‌ இணைத்துவிடுங்கள். இல்லையென்றால், 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் உங்கள் பான் கார்டு செல்லாமல் போய்விடும்.பான் - ஆ... மேலும் பார்க்க

"ஆணவம் உண்மையை மறைக்கும்; அந்த உண்மை எது என்றால்.!" - செங்கோட்டையன்

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 4,5 மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன.அந்த வரிசை... மேலும் பார்க்க