செய்திகள் :

கோவை டு டெல்லி; குடியரசு தலைவர் தேநீர் விருந்துக்கு அழைக்கப்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர் சங்கீதா!

post image

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சாமுண்டேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருணமாகி 2 மகன்கள் உள்ளனர். சங்கீதாவின் கணவர் பாலாஜி கட்டுமான தொழிலாளி ஆவார். இவர்கள் இருவரும் இணைந்து மாதம் ரூ.15,000 சம்பாதிக்கிறார்கள்.

கோவை பெண் ஆட்டோ ஓட்டுநர் சங்கீதா

இவர்களுக்கு சொந்த வீடு இல்லை. ரூ. 4,000க்கு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை வீட்டில் இருந்ததால், எப்படியாவது சொந்த வீடு கட்ட வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.

சங்கீதா – பாலாஜி சிறுக சிறுக சேமித்துள்ளனர். அவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் மற்றும் மத்திய அரசின் உதவியால் அனைவருக்கும் வீடு திட்டத்தில் ரூ. 2.10 லட்சம் மானியம் கிடைத்துள்ளது. அதனுடன் கூட்டுறவு வங்கியில் இருந்து ரூ.5 லட்சம் கடன் கிடைத்துள்ளது. இதன் மூலம் அவர்களின் சொந்த வீட்டு கனவை நனவாகியுள்ளது.

கோவை பெண் ஆட்டோ ஓட்டுநர் சங்கீதா

வெற்றிகரமாக வீடு கட்டி தற்போது சொந்த வீட்டில் வசித்து வருகிறார்கள். கடின உழைப்பால் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் பயனடைந்த சங்கீதாவை கௌரவிக்கும் வகையில், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது.

அதன்படி ஜனவரி 26-ம் தேதி டெல்லி ராஷ்ட்ரபதி பவன் குடியரசு தினவிழா பேரணியை நேரில் காண்பதற்கும், குடியரசுத் தலைவரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளவும் சங்கீதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சங்கீதா மகிழ்ச்சியடைந்துள்ளார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

“இந்த திட்டத்தால் என் வாழ்க்கையே மாறியுள்ளது. என் மகன்களின் கல்வி தான் முக்கியம். அவர்களின் எதிர்காலத்துக்கு இந்த சொந்த வீடு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை சாத்தியப்படுத்திய மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

`சிங்கத்தின் வாயில் மாட்டிய விஜய்; சிபிஐ மூலம் பாஜக ஸ்கெட்ச்' - செல்வப்பெருந்தகை விமர்சனம்

கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ராகுல் காந்தி நாளை நீலகிரி மாவட்டம் கூடலூர் வருகிறார்.செல்வப்பெருந்தகை பள்ளி விழா ... மேலும் பார்க்க

TVK Vijay: 7 மணி நேர விசாரணை: சிபிஐ-யிடம் விஜய் கொடுத்த வாக்குமூலம் என்ன?

செப்டம்பர் 27, 2025 அன்று கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) முன் ஆஜரானார். காலை 10.30 ... மேலும் பார்க்க

`Trump, வெனிசுலாவின் தற்காலிக அதிபர்' - ட்ரம்ப்-ன் சமூக வலைதளப் பதிவால் எழுந்த சர்ச்சை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் தன்னை "வெனிசுலாவின் தற்காலிக அதிபர்" எனப் பதிவிட்டிருக்கும் செய்தி, உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில்... மேலும் பார்க்க

அதிமுக மீதான அதிருப்தி; திமுக கூட்டணியில் ராமதாஸா? - சூரியக் கட்சிக்கு ப்ளஸா... மைனஸ்ஸா?!

தனக்கு முன்பாக மகன் அன்புமணியை அழைத்துக் கூட்டணியை இறுதி செய்ததில் என்.டி.ஏ-வின் மீதும் எடப்பாடியின் மீதும் பெரும் அதிருப்தியில் இருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.அதிருப்தியில் ராமதாஸ்பாமக நிறுவனர் ரா... மேலும் பார்க்க

ADMK: ``ராஜபாளையம் தொகுதியில் நான் போட்டியிட்டால் 100% வெற்றி" - நடிகை கௌதமி ஓப்பன் டாக்!

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் ... மேலும் பார்க்க

வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained

ஓர் இரவு அனைத்தையும் மாற்றுமா? ஈரானில் மாற்றியிருக்கிறது... மாறியிருக்கிறது. கடந்த டிசம்பர் 28-ம் தேதி காலையில் இருந்து ஈரானில் பெரும் போராட்டம் வெடித்திருக்கிறது. இதற்கு காரணம், முந்தைய நாள் உறங்கும்... மேலும் பார்க்க