செய்திகள் :

"சேவை செய்யவே சீருடை" - நடுரோட்டில் பாஜக அமைச்சருடன் வாக்குவாதம் செய்த பெண்ணின் புது வீடியோ வைரல்

post image

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வி அடைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.கவினர் மும்பை ஒர்லி பகுதியில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

அமைச்சர் கிரீஷ் மகாஜன் தலைமையில் பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தொண்டர்கள் வந்து சேர தாமதம் ஆனதால் பேரணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

பேரணிக்காக வந்த அமைச்சர் கிரீஷ் மகாஜன் மற்றும் தொண்டர்கள் நடுரோட்டில் நின்றனர். அது முக்கியமான சந்திப்பு என்பதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இந்தப் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொண்ட தீனா செளதரி என்ற பெண் தனது காரில் இருந்து இறங்கி நேரடியாக அமைச்சரிடம் சென்று இந்த இடத்தைக் காலி செய்யுங்கள் என்று கூறி வாக்குவாதம் செய்தார்.

அவர் அமைச்சருடன் வாக்குவாதம் செய்த வீடியோ வைரலானது. இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண் ரீனா நடந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளப் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

வாக்குவாதம் செய்த பெண்
வாக்குவாதம் செய்த பெண்

அவர் தனது வீடியோவில், ''சம்பவத்தன்று நான் எனது மகளை மியூசிக் கிளாசில் இருந்து மாலை 4.45 மணிக்கு பிக்கப் செய்வதற்காகச் சென்று கொண்டிருந்தேன். ஆனால் கார் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொண்டது.

காருக்குள் 25 நிமிடம் இருந்தேன். அதன் பிறகுதான் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள காரைவிட்டு இறங்கினேன். பா.ஜ.கவினரின் போராட்டம் காரணமாக என்னை போன்று ஏராளமானோர் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி இருந்தனர்.

ரோட்டில் இரண்டு பஸ்களைக் கொண்டு வந்து நிறுத்தி இருந்ததால் மற்ற வாகனங்களால் செல்ல முடியவில்லை. ஒன்றரை மணி நேரமாக ஒவ்வொரு போலீஸ் அதிகாரியிடமும் சென்று ரோட்டில் நிறுத்தி இருக்கும் பஸ்களை அங்கிருந்து அகற்றும்படி கேட்டுக்கொண்டேன். அப்படி எடுத்தால் மற்ற வாகனங்கள் யூ டர்ன் எடுத்து செல்ல முடியும் என்று கூறினேன்.

ஆனால் எந்த அதிகாரியும் அதனைக் கேட்கவில்லை. சேவை (serve) என்ற சொல்லைச் சிறப்பாக வலியுறுத்த விரும்புகிறேன்; ஏனெனில், நீங்கள்(போலீஸார்) சீருடை அணியும்போது, ​​பொதுச் சேவையில் ஈடுபடுகிறீர்கள்.

அது, ஒரு பெண்ணுக்கு மட்டுமல்லாமல், எந்தவொரு மனிதரிடமும் அலட்சியமாகவோ, அவமரியாதையாகவோ அல்லது மிரட்டும் வகையிலோ நடந்துகொள்வதற்கான உரிமையையோ அல்லது அனுமதியையோ உங்களுக்கு வழங்குவதில்லை. நீங்கள் அனைவருமே ஒரே குற்றத்தைச் செய்திருக்கிறீர்கள்.

அது பொதுமக்களின் மீது காட்டும் முழுமையான அலட்சியமும், கடுகளவும் அக்கறையின்மையுமே ஆகும். எனவே, தயவுசெய்து உங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக என்னைப் பயன்படுத்திக்கொள்ளாதீர்கள். எனது குடும்பத்தில் எனது தந்தை உட்பட 8 பேர் பேர் ராணுவத்தில் பணியாற்றி இருக்கின்றனர்.

நாடாளுமன்றம் | தொகுதி மறுவரையறை
நாடாளுமன்றம் | தொகுதி மறுவரையறை

பேரணியை முன்னின்று நடத்திய மகாராஷ்டிர மாநில அமைச்சர் கிரீஷ் மகாஜனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அப்பேரணியில் நான் கூறியதைக் காதுகொடுத்துக் கேட்கவாவது முயன்ற ஒரே நபர் அவர்தான்.

அவர் சொன்ன பிறகுதான் இரண்டு பஸ்களும் சாலையில் இருந்து அகற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்தே எங்களால் கார்களை எடுக்க முடிந்தது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது தண்ணீர் பாட்டிலைத் தூக்கி எறிந்தது குறித்தும் ரீனா விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் போராட்டம் நடத்தியவர்களை நோக்கி தண்ணீர் பாட்டிலை எறியவில்லை. எனக்கு முன்பு சாலை தடுப்பு இருந்ததால் போலீஸாரின் கவனத்தை ஈர்க்க தண்ணீர் பாட்டிலை தரையில் தூக்கி எறிந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக - அதிமுக கூட்டணி? "பாஜக-வைத் தூண்டும் அதிமுக; துரோகத்தையும் மீறி நாங்கள்.."- கலாநிதி வீராசாமி

'என்னது திமுகவும், அதிமுகவும் கூட்டணியா?' என்பதுதான் நேற்றைய இரவு முதல் இன்று காலை வரை இந்தியா முழுவதும் பேசப்பட்ட 'ஹாட்' டாபிக். "தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கட்டும். அவரது ஆட்சியை திமுக ஆறு மாதங்கள... மேலும் பார்க்க

Stalin: "விஜய் ஆட்சி அமைக்கட்டும்; திமுக தொந்தரவு செய்யாது" - சர்ச்சைகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி

திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கப் போகிறது... அதிமுக ஆளும் கட்சியாகச் செயல்பட, திமுக எதிர்க்கட்சியாகச் செயல்படும்... முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்... தவெக தலைவர் விஜய்க்... மேலும் பார்க்க

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திமுக - அதிமுக கூட்டணி? | Live

'திமுக எதிர்க்கட்சிதான்!'திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி 'திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்' என ட்வீட் செய்திருக்கிறார்.திமுக முன்னாள் எம்.பியின் ட்வீட்!தி... மேலும் பார்க்க

'விலக்கப்பட்ட விஜய்யின் கான்வாய் பாதுகாப்பு?; கூட்டு சேரும் திமுக - அதிமுக?' - நிலவரம் என்ன?

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரி விஜய் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு... மேலும் பார்க்க

விஜய்க்கு எதிராக திமுக - அதிமுக கூட்டு? திரை மறைவில் நகர்த்தப்படும் காய்கள்! - பின்னணி என்ன?

ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் நாளை ஆட்சியமைக்க உரிமைக் கோரிய நிலையில், ஆளுநர் இன்னமும் எந்த முடிவையும் சொல்லவில்லை. தவெகவிடம் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் யாரென ஆளுநர் பட்டியல் கேட்டதாகவு... மேலும் பார்க்க