'என்ன தான் நடக்கிறது?' மீண்டும் ஹார்முஸை மூடிய ஈரான்; என்ன காரணம் சொல்கிறது? ட்ர...
ஜூ.வி மெகா சர்வே: `பிரேமலதாவுக்கு கை கொடுக்குமா விருதாச்சலம்?' - டெல்டா மாவட்டங்கள் யாருக்கு சாதகம்?
தமிழக தேர்தல் களம் பரபரத்துப் போயிருக்கும் நிலையில், மக்களின் பல்ஸ் அறிய களமிறங்கியது ஜூனியர் விகடன் டீம். 539 தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள், 54 நிருபர்கள் என ஒரு பெரும் படையே சென்று 234 தொகுதிகளிலும் சர்வே நடத்தியது. வழக்கமாக, கேள்விகளுக்கான பதில்களை கருத்துக்கணிப்பு படிவத்தில் நிரப்பச் சொல்லி வாக்காளர்களிடம் அளிப்போம். இம்முறை, முழுவதும் டிஜிட்டல் வடிவத்தில் கருத்துக்கணிப்பை நடத்தினோம். அதற்கெனவே உயர் தொழில்நுட்பத்துடனும் சைபர் செக்யூரிட்டியுடனும் செயலி உருவாக்கப்பட்டு, சர்வே எடுப்பவர்களிடம் அளிக்கப்பட்டது.
ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள நகரம், உள் கிராமப்புறங்களை வகைப்படுத்தி, அங்கேயெல்லாம் எந்த பாலினத்தவர், வயதுடையவரிடம் சர்வே எடுக்க வேண்டுமென திட்டமிட்டுச் செயல்படுத்தியிருக்கிறோம். தொகுதியிலுள்ள பல்வேறு சமூகத்தினரிடமும் பரவலாகவே சர்வே நடத்தப்பட்டது. அந்த செயலியில் ஜியோ லொகேஷன் வசதி ஏற்படுத்தப்பட்டதால், நாம் சொன்ன இடத்தில்தான் சர்வே நடைபெற்றதா என்பதனை தெரிந்துகொள்ள முடிந்தது. அதன்மூலமாக, துல்லியமான முடிவுகளை நம்மால் கிரகிக்க முடிந்தது என்பது கூடுதல் சிறப்பம்சம்.
தொகுதிக்கு 400 பேர் என, 234 தொகுதிகளிலும் 93,600 பேரிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன. இந்த சர்வேயில், மொத்தமாக ஆறு கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு துணைக் கேள்வியும் இடம்பெற்றது. இந்தக் கேள்விகள் மற்றும் மக்கள் அவற்றுக்கு அளித்த தெளிவான பதில்கள் என மாவட்ட வாரியாகவும், தொகுதி வாரியாகவும் இந்த வார ஜூனியர் விடகன் இதழில் வெளியாகியிருக்கிறது.
விருதாச்சலம்
விருதாச்சலம் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-வும், அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க-வும் மோதும் தொகுதி. தே.மு.தி.க சார்பில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும், பா.ம.க சார்பில் டாக்டர் தமிழரசியும் களம் காண்கிறார்கள். நா.த.க–வில் ஆனந்தி, த.வெ.க–வில் விஜய் போட்டியிடுகின்றனர்.

உள்ளூர் மருத்துவராகத் தொகுதி மக்களுக்குப் பரிச்சயமானவர் என்பது தமிழரசிக்கு பலம். அதேபோல விஜயகாந்த் முதலில் வெற்றிபெற்ற தொகுதி என்பதும், தே.மு.தி.க இரண்டு முறை தக்கவைத்த தொகுதி என்பதும் பிரேமலதாவுக்கு ப்ளஸ். தி.மு.க-வின் கூட்டணி பலத்தாலும், அதிரடி பிரசாரத்தாலும் பிரேமலதா முந்துகிறார்.
இவர்கள் தவிர, கடலூர் - மயிலாடுதுறை - நாகப்பட்டினம் - திருவாரூர்- தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி, நாகப்பட்டினம் தொகுதியில் ஜவாஹிருல்லா, வேதாரண்யம் தொகுதியில் ஓ.எஸ்.மணியன், மன்னார்குடி தொகுதியில் டி.ஆர்.பி ராஜா, முகமது முபாரக், க.அன்பழகன், ஷாஜகான், துரை.சந்திரசேகர், வைத்திலிங்கம், சி.வி.சேகர் உள்ளிட்ட பல முக்கிய முகங்கள் போட்டியிடுகின்றன. இந்தத் தொகுதிகளின் முழு கள நிலவரம் தெரிந்துகொள்ள க்ளிக் செய்யவும்!








