செய்திகள் :

'டாஸ்மாக்-கிற்கு வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா?' - அமைச்சர் விக்னேஷின் பதில் என்ன?

post image

​திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்ப்பு முகாமில் பங்கேற்ற அமைச்சர் விக்னேஷ், அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, "தமிழகத்தில் பொதுமக்களுக்குப் பாதிப்பை அல்லது இடையூறை ஏற்படுத்தும் வகையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, கண்டிப்பாக அகற்றப்படும் அல்லது இடமாற்றம் செய்யப்படும்.

இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள கடைகளின் பட்டியலை மீண்டும் மறுஆய்வு செய்து, புதிய லிஸ்ட் எடுக்கும் பணிகளை துறை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

​அதே நேரத்தில், டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்துவது மற்றும் கடைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக புதிய சட்டவரைவு (Draft Law) தயார் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு நாள்களில் அரசின் உயர்மட்ட அளவிற்கு உடனே கொண்டு செல்லப்பட்டு விரைவில் ஒரு நல்ல முடிவுக்கு வரும்.

மதுக்கடைகளில் காலி பாட்டில்கள் தொடர்பாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் தொடர்ந்து வருகின்றன. அவை அனைத்தையும் கண்காணித்து, புகார்கள் மீது உடனுக்குடன் தகுந்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

டாஸ்மாக் கடைகள்
டாஸ்மாக் கடைகள்

டாஸ்மாக் கடைகளை தனியாருக்குத் தாராளமாகத் திறந்துவிடும் யோசனை தற்போதைக்கு அரசிடம் எதுவும் இல்லை. ஆனால், தொடர்ந்து செய்தியாளர்களும், பல்வேறு தரப்பினரும் இதுபோன்ற கேள்விகளை எழுப்பி வருவதால், எதிர்காலத்தில் அதைப் பற்றியும் யோசிக்க வேண்டிய நிலை அரசுக்கு வரும்" என்று கூறினார்.

'அரசுத் துறைகளில் வெள்ளை அறிக்கை வெளியிடுவது போல் டாஸ்மாக் துறையிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா?' என்ற கேள்விக்கு, "டாஸ்மாக் துறையே ஒரு வெள்ளை அறிக்கைதான், அதில் உள்ள அனைத்தும் அப்படியே வெளிப்படையாகத் தெரிகிறது. டாஸ்மாக் பார் மற்றும் கடைகளில் முறைகேடுகள் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதேனும் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு சார்பில் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

வெள்ளை அறிக்கை: "பணி நியமனம், பணி உயர்வு குறித்த விவரங்களை தவெக அரசு மறைப்பது ஏன்?"- செந்தில் பாலாஜி

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உள்கட்டமைப்பு, நிதி, வருவாய், செலவினம் ஆகியவை குறித்த வெள்ளை அறிக்கையை இன்று (ஜூன்.25) மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் முன்... மேலும் பார்க்க

ராமதாஸ் - அன்புமணி: `நீங்க எல்லோரும் ஒன்னா நல்லா இருங்க' - பாச சந்திப்பை புறக்கணித்த ஸ்ரீகாந்தி?

பா.ம.க-வில் மருத்துவர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல் ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், நேற்று மதியம் அன்புமணி தன்னுடைய மனைவி சௌமியா மற்றும் மகள்களுடன் தைலாபுரம் தோட்டத... மேலும் பார்க்க

'ஆள் பற்றாக்குறை முதல் Party Fund வரை!' - EB வெள்ளை அறிக்கையில் திமுக மீது வைக்கப்பட்ட 5 புகார்கள்!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார். 2001 முதல் 2026 மார்ச் வரை விரியும் இந்த வெள்ளை அறிக்கையின் மூலம் கடந்த திமுக அரசின் மீது நிறைய க... மேலும் பார்க்க

"'மந்திரி சபையிலும் இடம், திமுகவிலும் தொடர்கிறோம்' எனச் சிலர் சொல்வது எனக்கு புரியவில்லை" - வைகோ

மதுரை பாண்டி கோவில் பகுதியில் உள்ள திருமண மஹாலில் நடந்த மதிமுக கட்சி நிர்வாகியின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.... மேலும் பார்க்க

பிரமாண்ட ஸ்வர்ணகிரி; `ஆந்திராவின் KGF' - சந்திரபாபு நாயுடு பெருமிதம்

ஆந்திரப் பிரதேச மாநிலம், கர்னூல் மாவட்டம் துக்கலி மண்டலத்தில் உள்ள ஜொன்னகிரி கிராமத்தில், தனியார் துறையின் மிகப்பெரிய தங்கம் சுரங்கம் மற்றும் தங்கம் பிரித்தெடுக்கும் ஆலையை ஆந்திர முதல்வர் என். சந்திரப... மேலும் பார்க்க