செய்திகள் :

ஈமு கோழி திருட்டு புகார் விவகாரம்: 17 ஆண்டுகள் கழித்து ஆய்வாளருக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு

post image

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வந்த ஓர் ஈமு கோழி பண்ணையில், 2009-ம் ஆண்டு சில கோழிகள் காணாமல் போய்விட்டன.

இந்நிலையில், அதுபற்றி கொடுக்கப்பட்ட புகாரை விசாரித்த அப்போதைய காவல்துறை ஆய்வாளர் கருணாகரன் என்பவர் ஈமு கோழிகளைக் கண்டுபிடிக்க முடியாமல், அதேபோன்ற ஈமு கோழி பண்ணைகள் நடத்திய சிலரைப் பிடித்து விசாரித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அதோடு, அப்படி அவர் பிடித்து விசாரித்தவர்களில் ஒருவரான கோபால் என்பவரைப் பிடித்து வைத்துக் கொண்டு இரண்டு நாள்களாக வழக்கு போடாமல் சட்டவிரோத காவலில் வைத்துக் கொண்டது மட்டுமல்லாமல், அவரது சகோதரரிடம் மேற்படி வழக்கில் கோபாலைச் சேர்க்காமல் இருக்க பணம் கேட்டு செல்போனில் பேசியதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

cheque
cheque

அப்படி, ஆய்வாளர் பணம் கேட்டு பேரம் பேசிய ஆடியோவைப் பதிவு செய்து, அப்போதைய மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தினகரனிடம் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதனை விசாரித்த அவர் காவல்துறை ஆய்வாளர் கருணாகரனை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

அது தொடர்பான வழக்கு சென்னையில் உள்ள மனித உரிமைகள் பாதுகாப்பு நீதிமன்றத்தில், கரூர் வழக்கறிஞர் 'தமிழ்' இராஜேந்திரன் மூலமாக தாக்கல் செய்யப்பட்டு நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், விசாரணை முடிவில் காவல்துறை ஆய்வாளர் கருணாகரனால் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்ட கோபால் என்பவருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தத் தீர்ப்பு குறித்து பேசிய வழக்கறிஞர் 'தமிழ்' ராஜேந்திரன்,

"அந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காவல் துறை ஆய்வாளர் கருணாகரன் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இந்நிலையில், அந்தவழக்கு விசாரணை ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் வந்தது.

tamil rajenthiran
tamil rajenthiran

அதனைத்தொடர்ந்து, ஏற்கனவே மனித உரிமைகள் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின்படி ரூ. 5 லட்சத்திற்கான வரைவு காசோலை பாதிக்கப்பட்ட கோபால் பெயருக்கு எடுக்கப்பட்டு, காவல்துறை ஆய்வாளரால் நீதியர் ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

17 வருடங்கள் ஆனாலும் நீதி தேவதை உயிரோடுதான் இருக்கிறாள் என்பதை நிரூபிக்கும் வகையில் சிறப்பான தீர்ப்பை நீதியரசர் வழங்கியுள்ளார்" என்றார்.

"என் மகன் அமைதியானவன்" - மும்பை ரயிலில் பயணிகள் முன்னிலையில் வாலிபர் குத்திக்கொலை; கதறிய தாய்

மும்பை புறநகர் ரயிலில் எப்போதும் கூட்டம் நிரப்பி வழியும். அதுவும் காலை மற்றும் மாலை நேரங்களில் புறநகர் ரயில்களில் ஏறி இறங்குவது என்பது நினைத்து பார்க்க முடியாத காரியம். குறிப்பாக மும்பையில் மேற்கு ரயி... மேலும் பார்க்க

மது கேட்டு தொல்லை கொடுத்த மனைவி – விஷம் கொடுத்து கொன்ற கணவர் | கோவையில் அதிர்ச்சி

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே கரவழி மாதாப்பூர் அருகில் உள்ள அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (28). இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில், கணவரை பிரிந்து தனியாக வசித்து வந... மேலும் பார்க்க

வருங்கால கணவனை கொலை செய்யும் முன்பு காதலனுடன் ஹோட்டலில் சதி: சிக்னல் கொடுத்தவுடன் தள்ளிவிட்ட காதலன்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இரண்டு நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஷியா கோயல் என்பவர் தனது வருங்கால கணவன் கேதன் அகர்வால் என்பவரை மலை உச்சியில் இருந்து 400 அடி பள்ளத்தில் காதலன் துணையோடு தள்ளிவிட்டு கொலை ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; பரபரக்கும் கரூர்!

தமிழக முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சரும், தி.மு.க முக்கிய புள்ளியுமான ஏ.வ.வேலு தொடர்புடைய சென்னை வீடு உள்ளிட்ட 13 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலைய... மேலும் பார்க்க

கம்பம்: கணவரை இழந்த பெண்ணிடம் அத்துமீறல்; தலைமறைவான தவெக நிர்வாகி

கம்பத்தைச் சேர்ந்த 38 வயது பெண்ணின் கணவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் தவெக நிர்வாகியும் ஆட்டோ டிரைவருமான ஆசிக்பாபு என்ற பாபு ... மேலும் பார்க்க

காட்பாடி: கறாராக `லஞ்சம்’ கேட்ட அரசு பெண் மருத்துவர் - கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை!

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள அக்கிரெட்டிபுதூர் கிராமம், வீரமந்திரி தெருவைச் சேர்ந்தவர் ரங்கன். இவரது மனைவி ரவீனா. இவர்களின் 3 பிள்ளைகள், காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் பயில்கின்றனர். பள்ள... மேலும் பார்க்க