செய்திகள் :

டெல்லிக்குப் புகாரளித்த ஸ்டாலின்; 4வது நாளாகச் சரிபார்க்கப்படும் கொளத்தூர் EVM மெஷின்கள்

post image

கொளத்தூர் தொகுதியின் 14 பூத்-களின் EVM மெஷின்களை மீண்டும் சரிபார்த்து பரிசோதனை செய்து கொண்டிருக்கிறது தேர்தல் ஆணையம். திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த புகாரின் பேரில் இந்தச் செயல்முறை நடத்தப்பட்டு வருகிறது.

EVM Verification
EVM Verification

கடந்த மே 4 ஆம் தேதி சட்டமன்றத் தேர்வு முடிவுகள் வெளியாகியிருந்தது. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஸ்டாலின் 8795 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோற்றிருந்தார். முடிவுகள் வெளியான பிறகு மே7 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு ஒரு புகார் அனுப்பப்பட்டிருக்கிறது.

கொளத்தூரில் திமுகவுக்குச் சாதகமான வாக்களார்கள் இருக்கும் பூத்-களில் கூட எங்களுக்குக் குறைவான வாக்குகளே பதிவாகியிருக்கின்றன. எனவே, குறிப்பிட்ட அந்த 14 பூத்-களில் EVM மெஷின்களில் பதிவான வாக்குகளைச் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும் என்பதே புகார்.

இதைக் கருத்தில் கொண்ட தேர்தல் ஆணையம் கடந்த ஜூலை 29 ஆம் தேதி முதல் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள EVM கிடங்கில் கொளத்தூர் பூத்-களின் மெஷின்களைச் சரிபார்க்கும் பணியைத் தொடங்கியிருக்கிறது.

EVM Verification
EVM Verification

இந்தச் சரிபார்த்தலுக்காக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட 36 வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அதிகாரிகள் பேசுகையில், ''மொத்தமாக 14 பூத்-களைச் சரிபார்த்து முடிக்க 7 நாள்கள் ஆகும். ஒரு நாளைக்கு 2 பூத்-களின் மெஷின்களை மட்டுமே சரிபார்க்க முடியும். முதலில் அரசியல் கட்சிகளின் முகவர்களிடம் ஏப்ரல் 23 ஆம் தேதி EVM இல் பதிவான வாக்குகளைக் காண்பித்து உறுதிப்படுத்துவோம்.

அதன்பிறகு அந்த வாக்குகளை மெஷினிலிருந்து நீக்கிவிட்டு, முகவர்கள் முன்னிலையில் ஒவ்வொரு மெஷினிலும் 500 முதல் 1400 வாக்குகள் வரை பதிவு செய்து அவை மெஷினில் சரியாக ரெக்கார்ட் ஆகிறதா என்பது முகவர்கள் முன்னிலையிலேயே உறுதிப்படுத்தப்படும். காஞ்சிபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களிலும் ஒரு சில தொகுதிகளில் இந்தச் சரிபார்ப்பு செயல்முறை நடந்து கொண்டிருக்கிறது'' என்றனர்.

ஒரு தொகுதியில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் வேட்பாளர்கள் மட்டுமே EVM சரிபார்ப்பு நடவடிக்கைக்குப் புகாரளித்து விண்ணப்பிக்க முடியும். அந்தவகையில்தான் கொளத்தூர் தொகுதிக்கு மு.க.ஸ்டாலின் தரப்பில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது.

வேளாண் பட்ஜெட்டுடன் திருப்பதி சென்ற அமைச்சர் விநோத்… சர்ச்சைக்குள்ளான அமைச்சரின் செயல்

தமிழ்நாடு அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் ஆகஸ்ட் 6-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்கு முன்னதாக, வேளாண் துறை அமைச்சர் வினோத், வேளாண் பட்ஜெட்டின் வரைவு ஆவணத்தை எடுத்த... மேலும் பார்க்க

`பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வாங்குவதில் புது ரூல்ஸ்' - மக்களவையில் மசோதா நிறைவேற்றம்; பின்னணி என்ன?

பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்ந்து பல ஆண்டுகள் கழித்துப் பதிவு செய்யும் முறையைக் கடினமாக்கும் வகையில், பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு (திருத்த) மசோதா 2026 நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பிறப்பு மற்றும் இறப்... மேலும் பார்க்க

மேகதாது விவகாரம்: 'தமிழ்நாடு அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?' - அமைச்சர் நிர்மல் குமார் பதில்

திருநெல்வேலியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வருகை தந்தபோது, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், ``சுமார் 3,70,000 மின் கட்டணப் புகார்கள் வந்திருப்பதாக தி.ம... மேலும் பார்க்க

CJP: ``தவறான பாதையில் சென்ற நமது இளைஞர்களை நாம் மன்னிக்க வேண்டும்" - பிரதமர் மோடி வீடியோ

கடந்த ஜூலை 23 அன்று, டெல்லி ஜந்தர் மந்தரில் 'காக்ரோச் ஜனதா கட்சி' சார்பில் போட்டித் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டத்தின் போது, 25 வயது பெண் ஒருவ... மேலும் பார்க்க

"ஆர்.எஸ்.எஸ் சீமான், பொதுவேட்பாளராக முடியாது!" - சொல்கிறார் அமைச்சர் வன்னிஅரசு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், 'தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு' கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் வருகிற ஆகஸ்ட் 17-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்தச் சூழலில், வி.சி.க துணை பொதுச்செயலாளரு... மேலும் பார்க்க