செய்திகள் :

திருப்பரங்குன்றம்: "உடனே தீபம் ஏற்ற இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது!" – உச்ச நீதிமன்றம்!

post image

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரிய வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாகச் செயல்படுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாக மறுத்துவிட்டது.

நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அடங்கிய அமர்வு முன் நடைபெற்ற இந்த விசாரணையில், மனுதாரர் தரப்பு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் முன்வைக்கப்பட்ட காரசார வாதங்களைத் தொடர்ந்து வழக்கு 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதங்கள் நடைபெற்றது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

முக்கிய அம்சங்கள் & உச்ச நீதிமன்ற வாதங்கள்:

"முன்னர் நடைமுறையில் இல்லாத ஒரு புதிய விஷயத்தை உயர் நீதிமன்ற உத்தரவு மூலம் புகுத்தப் பார்க்கிறார்கள்" என அறநிலையத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

ஜனவரி மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இத்தனை நாட்கள் மேல்முறையீடு செய்யாமல் தமிழ்நாடு அரசு என்ன செய்து கொண்டிருந்தது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஆவணங்களை மொழிபெயர்ப்பு செய்ய வேண்டியிருந்ததால் காலதாமதம் ஏற்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

"வழக்கை முழுமையாக விசாரித்த பிறகே உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்; தற்போதைய நிலையில் எந்தவொரு தடை அல்லது இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது" என நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

எதிர்மனுதாரர் ராம ரவிக்குமார், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை காவல் ஆணையர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கு 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அமர்வை அணுகத் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

'விஜய்யின் ஆன்லைன் தளபதி; ஜெகதீஸின் பரிந்துரை!'- TN Fact Check Unit இன் தலைவராக்கப்பட்ட 'குரு' யார்?

தமிழக அரசின் 'உண்மை சரிபார்ப்புக் குழு'வின் பெயரை 'தகவல் நம்பகத்தன்மை சரிபார்ப்புக் குழு' எனப் பெயர் மாற்றி 'குரு' என்பவரை அதற்கு தலைவராக நியமித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. யார் இந்த குரு?அம... மேலும் பார்க்க

மின்வாரியம்: ஒரே நேரத்தில் 700 பேருக்கு பதவி உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாடு மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கோரிக்கை நிலுவையில் இருந்தது. இந்நிலையில், உதவி பொறியாளர்களாக பணியாற்றி வந்தவர்களுக்கு உதவி செயல் பொறியாளர்களாக பதவி உயர்வு அள... மேலும் பார்க்க

தி.மு.க எம்.எல்.ஏ மார்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்; விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்னென்ன?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், ““இவ்வளவு கேவலமான முதல்வரை தமிழகம் மட்டுமல்ல, இந்திய... மேலும் பார்க்க

மேகதாது: ``போராடிப் பெற்ற தீர்ப்பைக்கூட இந்த அரசால் காப்பாற்ற முடியாத நிலை" - எடப்பாடி பழனிசாமி

தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, ``தீரன் சின்னமலையி... மேலும் பார்க்க

இடைத்தேர்தல்: `முன்னிலையில் பிரசாந்த் கிஷோர்' - கவனம் ஈர்க்கும் பீகார்!

பீகார் மாநிலத்தின் பங்கிப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர் பா.ஜ.க-வைச் சேர்ந்த நிதின் நபின். இவர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார். இதனால் அவரது தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மத்திய ப... மேலும் பார்க்க

அமைச்சர் ஜெகதீஸ்வரி போட்ட கம்பி வேலியை பிய்த்து எறிந்த சொந்த ஊர் மக்கள்! - பதட்டத்தில் பனைவிளை

'அமைச்சரானதும் ஊர்க்கிணற்றைப் பூட்டிட்டாங்க ஜெகதீஸ்வரி!' – வருந்தும் சொந்த கிராம மக்கள் என்கிற ஒரு செய்தியைநான்கு தினங்களுக்கு முன் விகடன் தளத்தில் வெளியிட்டிருந்தோம்.தமிழக அரசின் சமூக நலத்துறை அமைச்ச... மேலும் பார்க்க