செய்திகள் :

தோஷங்கள் - தடைகள் நீக்கி விரைவில் கல்யாண வரம் தரும் வாழை மலர் பூஜை.! வீட்டிலேயே செய்ய எளிய வழிபாடு!

post image

கல்யாணமோ, சொந்த வீடோ அதற்கான நேரம் காலம் கூடி வந்துவிட்டால் எப்பேர்ப்பட்ட பிரச்னைகள் வந்தாலும் சமாளித்து வெற்றிகொள்ளும் வல்லமை வாய்த்துவிடுகிறது. ஆனால், சிலருக்கு இந்த சுப நிகழ்வுகளுக்கான தருணம் கூடிவருவதிலேயே சிக்கல். குறிப்பாக, கல்யாணம் என்பது அவர்களுக்கு கானல்நீராகவே அமைந்து போகிறது.

திருமண தோஷங்கள்

ஏன் அப்படி? திருமணம் தாமதப்படுவதற்கான கிரக நிலைகள் என்னென்ன? பன்னிரு பாவங்களுக்கும் தனித்தனி கிரக அமைப்புகள் இருந்தாலும், குறிப்பிட்ட கிரக நிலைகள் சிலவற்றை அறிவோம்.

கல்யாண வரம் தரும் துதிப்பாடல்கள்

கல்யாணத்தைத் தாமதப்படுத்தும் கிரக நிலைகள்!

* 7-க்கு உடையவன், 12-ல் விரயமாகும்போதும், 7-ஆம் பாவத்தில் சனி, சூரியன், ராகு, கேது ஆகியோர் தனியாக அமர்ந்திருந்தாலும் திருமணம் தாமதப்படும்.

* 3, 6, 7, 8, 9 மற்றும் 12-ல் அசுபர்கள் அமர்ந்தாலும் திருமணம் தாமதமாகும்.

* சனி பகவான் மேஷத்தில் பலம் இழந்தாலும், விரயம் (12-ல்) ஆனாலும் தாமதமாகும்.

* ஒருவரது ஜாதகத்தில் சூரியனும் சுக்கிரனும் எந்த இடத்தில் சேர்ந்து இருந்தாலும் தாமத திருமணம்தான்.

* குரு பகவான் மேஷம், விருச்சிகம், கும்பத்தில் அமர்ந்திருந்தால் 28 வயதுக்கு மேல்தான் திருமணம் நடக்கும்.

* பூராட நட்சத்திரத்தில் பூப்படைந்த பெண்ணுக்கு திருமண யோகம் அரிது என்பர். உரிய பரிகாரத்தால் பலன் காணலாம்.

* ஒருவரது ஜாதகத்தில் 3, 6, 10, 11-ல் ராகு அல்லது கேது அமர்ந்திருந்தால் எல்லா தோஷங்களும் மறைந்து திருமணம் நல்ல படியாக நடந்துவிடும் என்று ஜோதிட விதி ஒன்று கூறுகிறது.

இப்படியான காரணங்களால் உண்டாகும் தோஷங்களும், தடைகளும், கெடுபலன்களும் நீங்கி, கல்யாண பாக்கியம் எளிதில் கைகூட மிக அற்புதமான வழிபாடுகளை சொல்லி வைத்துள்ளனர், நம் முன்னோர். அதில் ஒன்றுதான் வாழைமலர் வழிபாடு!

எப்படி வழிபட வேண்டும்:

பூஜையறையில், நுனி பாகம் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்கும்படி நுனிவாழை இலை விரித்துப்போட வேண்டும். அதில் பச்சரிசி பரப்பி வைத்து, அதன் மீது மோதிரவிரலால் ஸ்வஸ்திகம் அல்லது திருநாமம் வரையவும்.

பிறகு, பஞ்சவர்ண நூல் சுற்றிய (3 லிட்டர் கொள்ளளவு கொண்ட) மண் கலசத்தை தீர்த்தத்தால் நிரப்பி, மஞ்சள் பொடி, ஏலக்காய், பச்சை கற்பூரம் தூள் இட்டு, கலசத்தின் மீது முற்றிய வாழை மலரை இதழ்கள் விரிந்து இருக்கும்படி வைக்கவேண்டும். அதற்கும் வாசனை மலர், சந்தன-குங்குமத் திலகமிட வேண்டும். பிறகு, கலசத்துக்கு எதிரில் பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்துவைத்து, அவருக்கு அருகம்புல் சமர்ப்பித்து ஒரு வெற்றிலையின் மீது வைக்கவும்.

தொடர்ந்து, பெரிய தட்டு ஒன்றின் மீது 16 தென்னங்குச்சிகளில் பஞ்சு அல்லது திரிவிலையை சுற்றிவைத்து, நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகிய மூன்று எண்ணெய் கலவையில் அவற்றை நனைத்து தீபம் ஏற்றத் தயாராக வைக்கவேண்டும். அல்லது 5 முகக் குத்துவிளக்கை இரண்டு பக்கங்களிலும் ஏற்றிவைக்கலாம். இனி, பூஜையை ஆரம்பிக்கலாம்.

முதலில், வழக்கம்போல் விநாயகர் பூஜை.

ஆனை முகத்தவனே அருகம்புல் நாயகனே

வீணை சரஸ்வதிக்கு வித்தகனாய் வந்தவனே

வாழை மலர் முன்பு வாசமுடன் அமர்ந்தோனே

வாழ்வை பெறும் பூசை வெற்றிதர அருள்வாயே

என்றபடி மலர்கள் சமர்ப்பித்து, விநாயகரைத் தியானித்து வணங்க வேண்டும். திருமணத் தடையுள்ள ஆண்-பெண் அமர்ந்து இதைச் செய்தல் அவசியம். அடுத்ததாக அன்றைய திதி, வாரம், நட்சத்திர விவரங்களைச் சொல்லி, கையில் மலர் மற்றும் மஞ்சள் அரிசியை எடுத்துக்கொண்டு, மம அதிசீக்கிர விவாக பராப்தியர்த்தம் களத்திர தோஷ நிவாரணார்த்தம் என்று பெயரைச் சொல்லி சங்கல்பம் செய்யவேண்டும்.

பிறகு ஶ்ரீதுர்காதேவி துதி, ஶ்ரீலட்சுமி துதி, ஶ்ரீமகாவிஷ்ணு துதி, ஶ்ரீஸ்வயம்வர கலாதேவியின் துதி ஆகியவற்றை பாராயணம் செய்ய வேண்டும்.

மேலும் திருச்செந்தூர் முருகனைப் போற்றும் கீழ்க்காணும் துதியை 7 முறை சொல்லலாம்.

விறல் மாறன் ஐந்து மலர்வானி சிந்த

மிகவானில் இந்து வெயில் காய

மிதவாடை வந்து தழல் போல ஒன்ற

வினை மாதர் தத்தம் வசை கூறக்

குறவாணர் குன்றில் உறை பேதை கொண்ட

கொடிதான துன்ப மயல் தீரக்

குளிமாலையின் கண் அணிமாலை தந்து

குறைதீர வந்து குறுகாயோ

தொடர்ந்து கீழ்க்காணும் பாடலை 5 முறை சொல்லி வணங்கலாம்.

பலரும் பரவப் படுவாய் சடைமேல்

மலரும் பிறையோன் நுடையாய் மருகல்

புலருந்த் தனையும் துயிலான் புடைபோத்

தலரும் படுமோ அடியானிவனே

பின்னர், ஆத்ம பிரதட்சிணம் செய்து, தேங்காய் மற்றும் மூவகை கனிகளை தாம்பூலத்துடன் படைத்து, குலதெய்வம், குரு, பித்ருக் களை நினைத்து மலரிட்டு வணங்கிய பிறகு, ‘ஓம் சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே சரண்யே திரியம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதே’ என்று சொல்லி தீபக்குச்சிகள் 16-யும் ஏற்றுக. பிறகு, கற்பூர ஆரத்தி காட்டி மஞ்சள்- குங்குமம் பிரசாதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக, கலசநீரை வீடு முழுவதும் தெளிக்கலாம்.

பின்னர், வீட்டுப் பெரியவர்களை வணங்கி அவர்களின் ஆசியைப் பெறலாம். இந்த வழிபாட்டால் கிடைக்கும் இறையருளாலும் பெரியோர் ஆசியாலும் விரைவில் கல்யாணம் கூடி வரும்.

`இந்த 12 காட்சிகளில் ஒன்றை கனவில் கண்டால், விரைவில் அதிர்ஷ்டம் வரும்!' - ஸ்வப்ன சாஸ்திர ரகசியங்கள்

கனவுகள் எப்போதும் சுவாரஸ்யமானவை. நிஜத்தில் நடக்காத சில விஷயங்கள், கனவில் நடந்து நம்மை வியப்பில் ஆழ்த்தும். அதேநேரம், சில எதிர்மறையான காட்சிகள் பயத்துக்கும் மன நெருடலுக்கும் ஆளாக்கிவிடும். இதுபற்றி ஸ்வ... மேலும் பார்க்க

வார ராசிபலன் | 31.8.26 முதல் 6.9.26 வரை | இந்த வாரம் யாருக்கு யோகம்? | ஜோதிடர் பாரதி ஸ்ரீதர்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் August 31 th to September 6th 2026, vaara rasipalan. this video offers guidance on love, career,... மேலும் பார்க்க

ஏழரைச்சனி கஷ்டம் நீங்கிட கும்பம், மீனம், மேஷம் 3 ராசியினர் அவசியம் அறியவேண்டிய ஜோதிட பரிந்துரைகள்!

நவகிரகங்களில் சாயா புத்திரனான சனி பகவான் தர்மத்தை நிலைநாட்டும் மூர்த்தியாகத் திகழ்கிறார். முன்வினைகளுக்கு ஏற்ற பலாபலன்கள் அவரால் செயல்படுத்தப்படுகின்றன. சனிபகவான் ராசிக்கு 12, 1, 2 வரும் காலத்தையே ஏழர... மேலும் பார்க்க

நட்சத்திரப் பலன்கள் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 3 வரை #VikatanPhotoCards

அசுவினிபரணிகிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை மேலும் பார்க்க

உங்கள் ராசிப்படி சொந்த வீடு யோகம் எந்த வயதில் அமையும்? விளக்கங்கள் - பரிகாரங்கள்!

சொந்த வீடு என்பது பலருக்கும் வாழ்நாள் கனவாக இருக்கும். சிலருக்கு மிக எளிதில் சட்டென சொந்த வீடு அமைந்துவிடும். ஆனால் வேறு சிலருக்கோ, அவர்கள் எவ்வளவு பகிரத பிரயத்தனம் செய்தாலும் எளிதில் சொந்த வீடு அமையா... மேலும் பார்க்க