செய்திகள் :

நாஞ்சில் சம்பத்: `வேறு ஏதாவது இருக்குமானு தெரிஞ்சுக்கணுமா?' - ஈரோடு பரப்புரையில் பங்கேற்காதது ஏன்?

post image

ஈரோட்டில் நடந்த தவெக-வின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அந்தக் கட்சியில் புதிதாகச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் கலந்து கொள்ளாதது குறித்து சமூக ஊடகங்களில் பலவிதமான தகவல்கள் உலா வருகின்றன.

'கட்சியில் பரப்புரைச் செயலாளரா நியமிக்கப் பட்டார். இந்தக் கூட்டம் பரப்புரைக் கூட்டம் தானே? ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண் ராஜ் எல்லாரும் பேசினாங்க. கொங்கு ஏரியாவுல இருந்து கட்சிக்கு வந்தாலயும் அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததுல முக்கியப் பங்கு வகித்ததாலயும் செங்கோட்டையனும் வேனில் நின்னு பேசினார்.

ஆனா சம்பத்தும் முக்கியமான ஆள் இல்லையா? அதுவும் சிறந்த பேச்சாளர். ஆனா அவர் கட்சியில சேர்ந்த பிறகு நடக்கிற முதல் கூட்டத்துக்கு அவர் வரலைன்னா எப்படி? என்ன பிரச்னை தெரியலையே' என்கிற ரேஞ்சுக்கு அங்கே விவாதங்கள்.

தவெகவுக்கு எதிரானவர்கள் இதைப் பிடித்துக் கொண்டு, 'மரியாதை இல்லைனுதான் முன்பு இருந்த கட்சிகள்ல இருந்து வெளியேறினார். இப்ப இங்கயும் இதே நிலையா' என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

TVK Vijay
TVK Vijay

விதண்டாவாதம்

'ஏன் ஈரோட்டுக்கு வரவில்லை' என நாஞ்சில் சம்பத்தையே தொடர்பு கொண்டு கேட்டோம்.

''இது மாதிரி சின்ன விஷயங்களைக் கூட பெரிசு பண்ணி விவாதிக்கணுமா? டிவியில கூட விவாதிச்சாலும் விவாதிப்பாங்க போல.. அப்படி வந்தா அதுக்கு பேரு விவாதம் இல்ல, விதண்டாவாதம். இதையே வேலையாச் செய்திட்டிருப்பாங்க சிலர். அவங்களுக்கு பொழுது போகாது. அந்தக் கூட்டத்துக்கு முந்தைய நாள் பனையூர்ல நடந்த மீட்டிங்ல பேசினேன்.

ஈரோட்டுக் கூட்டம் குறுகிய காலத் திட்டமிடல்ல உருவானது. அதுக்கு முன்னாடியே என்னுடைய பயணம் திட்டமிடப் பட்டிருந்தது. அந்தப் பயணத்துல ஈரோடு கூட்டம் இல்லை. அங்க நான் வராததற்கு இதுதான் காரணம். வேறு ஏதாச்சும் பின்னணி இருக்குமான்னு தெரிஞ்சுக்கணுமா? அப்படின்னா அலசி ஆராயட்டும். அவங்க நேரம் தான் விரயமாகும்' என முடித்துக் கொண்டார்.

'நாங்க குரைக்கிற நாய் கிடையாது' - மீண்டும் அண்ணாமலையை சீண்டிய தவெக அருண்ராஜ்

தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். கூட்டணிக்காக ஒரு குழு அமைக்கப்படும்.அண்ணாமலை தவெகவை தொடர்ந்து ... மேலும் பார்க்க

"கக்கூஸ் கழுவத்தான் கண்ணகி நகர்ல தூக்கி போட்டீங்களா?" - கொந்தளிக்கும் மறுகுடியமர்வு மக்கள்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லையென்று சென்னையிலுள்ள கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஆகிய குடியிருப்புப் பகுதி மக்களைத் திரட்டி சென்னை ... மேலும் பார்க்க

மகா. உள்ளாட்சித் தேர்தல்: 134 நகராட்சிகளை ஆளும் பாஜக கூட்டணி முன்னிலை; உத்தவுக்குப் பெரும் பின்னடைவு

மகாராஷ்டிரா முழுவதும் உள்ள நகராட்சிகளுக்குக் கடந்த 2ம் தேதி தேர்தல் நடந்தன. சில நகராட்சிகளுக்குத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு நேற்று தேர்தல் நடத்தப்பட்டன. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 10 மண... மேலும் பார்க்க

கர்நாடகா: "நானே முதல்வராகத் தொடர்வேன்" - சித்தராமையா விடாப்பிடி; டி.கே. சிவகுமாரின் பதில் என்ன?

மீண்டும் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் இடையே மோதல் போக்கு தொடங்கியுள்ளது.சில மாதங்களுக்கு முன்பு, முதலமைச்சர் நாற்காலிக்காக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்தது. பி... மேலும் பார்க்க

பட்டமளிப்பு விழாவில் பெண்ணின் ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்; 'பணியில் சேரவில்லை' - மீண்டும்‌ சர்ச்சை

இந்த வாரத்தின் தொடக்கத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆயுஷ் மருத்துவப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.அங்கே பட்டம் வாங்க வந்த முஸ்லிம் பெண் ஒருவரின் ஹிஜாப்பைப் பிடித்து இழுக்க முயன்றார். இ... மேலும் பார்க்க

நாமக்கல்: தவெக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் நீக்கம்; பொதுச்செயலாளர் ஆனந்த் அதிரடி; என்ன நடந்தது?

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் ஜே.ஜே.செந்தில்நாதன். தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் கூட்ட... மேலும் பார்க்க