செய்திகள் :

"நீங்க அத்தனை கதை கேட்டால் தூங்காமல் இருந்திருப்பீங்களா?" - செய்தியாளரின் கேள்விக்கு அஸ்வின் காட்டம்

post image

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் 'ஹாட்ஸ்பாட்' படத்தின் முதல் பாகம் கடந்த 2024-ம் ஆண்டு திரைக்கு வந்திருந்தது.

அதைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. ப்ரியா பவானி ஷங்கர், எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, பவானி ஸ்ரீ, அஸ்வின் குமார், ஆதித்யா பாஸ்கர், சஞ்சனா திவாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

Hotspot 2
Hotspot 2

அதில், "இப்போதும் நீங்கள் கதை கேட்கும்போது, தூங்கிக் கொண்டிருக்கிறீர்களா அல்லது விழித்திருக்கிறீர்களா?" எனச் செய்தியாளர் ஒருவர் அஸ்வின் குமாரிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்குக் காட்டமாகப் பதில் சொன்ன அஸ்வின், "ஒரே ஒரு கேள்வி நான் நேர்மையாகக் கேட்டால், நீங்க பதில் சொல்வீங்களா? அப்போ, 40 கதைகள் என்பது நான் பொதுவாகச் சொன்ன ஒரு எண்ணிக்கை.

அதுக்கு அதிகமாகவும் கதைகள் நான் கேட்டிருக்கலாம். இன்னைக்கு நீங்க அத்தனை கதைகள் கேட்டாலும், தூங்காமல் இருந்திருப்பீங்களா?

தியேட்டர்லேயே நான் பார்க்கும்போது, பலர் தூங்கிட்டு இருக்காங்க. அப்போ நான் யாரையும் புண்படுத்தணும்னு பேசவே இல்ல.

Actor Ashwin
Actor Ashwin

அப்போவே அதுக்கான விளக்கம் கொடுத்திருந்தேன். இப்போ, படத்துக்காக வரும்போது என்னை நீங்க குத்துறதுக்குப் பார்த்துட்டிருக்கீங்க. ப்ராப்பர் நடிகர்னு என்னை நான் சொல்ல மாட்டேன்.

நான் இப்போ கத்துகிட்டுதான் இருக்கேன். நான் வேலை பார்க்கிற அத்தனை இயக்குநர்களிடமிருந்து நிறைய விஷயங்களைக் கத்துகிட்டிருக்கேன். நான் ஒரு நல்ல நடிகனாக முயற்சி பண்றேன்" எனக் கூறினார்.

`100 பேர் முன் மன்னிப்பு கேட்டேன்; அப்பவும் விடலை!' மகளிர் ஆணையத்தில் தயாரிப்பாளர் ராஜேஸ்வரி புகார்

பிப்ரவரியில் நடக்கவிருக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தன்னைப் போட்டியிட விடாமல் தடுக்கும் தற்போதைய நிர்வாகிகளுக்கு எதிராக தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார் ‘ம... மேலும் பார்க்க

`இங்கே யானைகள்தான் வாழ முடியுமா... எறும்பு வாழ முடியாதா?' - வசந்த பாலன் ஆதங்கம்

ஓடிடி தளங்கள் மீதான ஆதங்கம் பற்றியும், சின்ன பட்ஜெட் படங்கள் திரைக்கு வர முடியாமல் தவிப்பது பற்றியும் இயக்குநர் வசந்த பாலன் முகநூலில் சிறு குறிப்பாக எழுதியிருந்தார். அவரிடம் இது பற்றியும் சற்று விரிவா... மேலும் பார்க்க

ஒரே விழாவில் 34 புது இயக்குநர்கள்; ஒளிப்பதிவாளர் செழியனின் புதுமுயற்சி; பங்கேற்கும் பிரபலங்கள்!

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியனின் 'தி ஃபிலிம் ஸ்கூல்' திரைப்படப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் 34 பேர், 34 சுயாதீனத் திரைப்படங்களை இயக்குகிறார்கள். 34 அறிமுக இயக்குநர்களின் விழா சென்னையில் வருகிற 24... மேலும் பார்க்க

ஜனநாயகன் : "மண்டல தணிக்கை வாரியத்தில் படத்தைப் பார்த்தது யார்? - கேள்வி எழுப்பிய நீதிபதி | Live

"தனி நீதிபதி ஒரே நாளில் முடிவு எடுத்துள்ளார்"- தலைமை நீதிபதி"இந்த வழக்கில் தனி நீதிபதி ஒரே நாளில் முடிவு எடுத்துள்ளார். பதிலளிக்க தணிக்கை வாரியத்திற்கு அனுமதி அளிக்காமல் தனி நீதிபதி முடிவு எடுத்திருக்... மேலும் பார்க்க

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்: இரு அணிகள்... ஏராள சுயேச்சைகள் - களத்தில் யார்... யார்?!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இப்போது பொறுப்பில் உள்ளவர்களின் பதவிக்காலம், வருகிற ஏப்ரல் மாதத்தோடு நிறைவு பெறுகிறது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அதனையொட்டி புது நிர்வாகிகள... மேலும் பார்க்க