செய்திகள் :

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரசு வழக்கறிஞர்கள்; கலெக்டருக்கு அபராதம் விதித்த நீதிபதி; காரணம் என்ன?

post image

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கு தொடர்பான விசாரணை, ஐந்தாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், சாட்சி சொல்வதற்காக மருத்துவர் ஒருவர் கேரளாவில் இருந்து வந்து ஆஜராகி இருந்தார். ஆனால் கூடுதல் அரசு வழக்கறிஞர் இன்று விசாரணைக்கு ஆஜராகாததால் குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன், அரசு தரப்பு சாட்சியிடம் விசாரணையும் நடத்த முடியவில்லை.

அரசு தரப்பின் தவறால் இது ஏற்பட்டதால் கோவை மாவட்ட ஆட்சியர் சார்பாக மாநில அரசு பத்தாயிரம் ரூபாய் தொகையினை ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் எனவும், இந்தத் தொகை மருத்துவரின் வருகை செலவு மற்றும் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும் என ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார்.

கோவை நீதிமன்றம்
கோவை நீதிமன்றம்

இதேபோல அதே நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு விசாரணைக்காக பட்டியலிடப்பட்ட வழக்கில், சாட்சி சொல்வதற்காக திருவாரூரில் இருந்து வந்த காவல் உதவி ஆய்வாளரும், குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் ஆஜராகி இருந்தனர். ஆனால் கூடுதல் அரசு வழக்கறிஞர் ஆஜராகாததால் வழக்கு விசாரணை நடைபெறவில்லை.

இவர்கள்  நீதிமன்றத்திற்குத் தேவையன்றி வரவழைக்கப்பட்டதால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அரசு தரப்பின் தவறால் இது ஏற்பட்டதால், கோவை மாவட்ட ஆட்சியர் சார்பாக மாநில அரசு ரூ.9,000 தொகையை நீதிமன்றத்தில் ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார்.

அதில் குற்றம்சாட்டபட்ட 5 பேருக்கும் தலா ஆயிரம் ரூபாயும், காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ.4,000  இழப்பீட்டுத் தொகையாக வழங்க நீதிபதி உத்திரவிட்டார்.

தி.மு.க ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்களுக்கான பணிக்காலம் கடந்த ஜூன் 30ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், புதிய அரசு வழக்கறிஞர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்படாமல் உள்ளது.

இதனால் நீதிமன்றங்களில் புதிய அரசு வழக்கறிஞர்கள் பதவியேற்காமல் இருந்து வருகின்றனர். இதன் காரணமாக அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகமால் உள்ள நிலையில், நீதிபதி ஆட்சியருக்கு அபராதம் விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

`விளம்பர மோகம்; பள்ளிக் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறல்' கீர்த்தனாவுக்கு சீமான் கண்டனம்

அமைச்சர் கீர்த்தனா விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளி மாணவிகளுடன் பேசிய அமைச்சர் கீர்த்தனா, ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பப் பள்ளி மாணவி தயங்கியதால், ஆசிர... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திமுக - காங்கிரஸார் தொடர் கருத்து மோதல்; கல் வீச்சு... போலீஸ் புகார் - என்ன நடக்கிறது?

தூத்துக்குடியில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையிலான அரசியல் மோதல், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி வெளியிட்டுள்ள வீடியோ, அரசியல் வ... மேலும் பார்க்க

கச்சா எண்ணெய்: 26 ஆண்டுகளில் இல்லாத விலை குறைப்பு; சவுதியின் இந்த முடிவு இந்தியாவுக்கு குட் நியூஸா?

சவுதி அரேபியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் ஆசிய நாடுகளுக்கு குட் நியூஸ். சவுதி அரேபியா தன்னுடைய சொந்த எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோவில் (Saudi Aramco) இருந்து 'அரப் லைட்' (Arab Light) எனும... மேலும் பார்க்க

"மு.க.ஸ்டாலினுடன் எங்களது நட்பு தொடர்கிறது, ஆனால்..!"- விசிக தலைவர் திருமாவளவன் சொல்வதென்ன?

எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வருகிறார். விசிக விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று முன்தினம் (ஜூலை. 5) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திருமாவள... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த 2 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. காலை இர... மேலும் பார்க்க

`ஆங்கிலம் தான் அறிவா? ஏன் இதுவரை Last Bench ஸ்டூடென்ட் முன்னேறியதே இல்லையா அமைச்சர் கீர்த்தனா?'

"இவங்க கிட்ட சிம்பிளா, 'What is your Father?'ங்கற தான் கேட்டோம். ஆனா, அதுக்குமே அவங்களால பதில் சொல்ல முடியல...'(ஃபர்ஸ்ட் பெஞ்சில் அமர்ந்திருக்கும் அந்த மாணவியிடம் 'What is your name?', 'What is your F... மேலும் பார்க்க