செய்திகள் :

நெஞ்சை உலுக்கும் சோகம்: குடும்பத்தினர் 8 பேர் தீயில் கருகி இறந்ததை அறியாமலேயே முதியவர் மரணம்!

post image

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராதே ஷியாம் அகர்வால் கடுமையான இதய நோய் காரணமாக டெல்லி சாகேத் பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து, அவரது ஒரே மகனான விவேக் அகர்வால் தனது குடும்பத்தினருடன் டெல்லிக்கு விரைந்தார். தந்தைக்குத் துணையாக இருக்க வேண்டும் என்பதற்காக அவரது உறவினர்கள் சிலரும் டெல்லிக்கு வந்திருந்தனர்.

டெல்லி தீ விபத்து

மருத்துவமனைக்கு மிக அருகில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஹவுஸ் ரானி பகுதியில் உள்ள 'புளோரிஷ் ஸ்டேஸ்' (Flourish Stays) என்ற விடுதியில் விவேக் தனது தாய் பிரேமலதா, மனைவி தார்ஜனி, மகள்கள் ஜீவிஷா, வாரியா மற்றும் உறவினர்களான அசோக் கோயல், கமலா, ஜிம்ரி ஆகியோருடன் தங்கியிருந்தார். ஆனால், ஜூன் 3-ம் தேதி அதிகாலை அந்த விடுதியில் எதிர்பாராதவிதமாகப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் தப்பிக்க வழியின்றி விவேக்கின் குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தக் கொடூர விபத்தில் ஒட்டுமொத்த விடுதியும் தீக்கிரையானதில், 13 வெளிநாட்டுப் பயணிகள் உட்பட மொத்தம் 22 பேர் உயிரிழந்தனர். குடும்பமே அழிந்துவிட்ட நிலையிலும், வென்டிலேட்டர் உதவியுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ராதே ஷியாம் அகர்வாலிடம் இந்தத் துயரச் செய்தி தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், தீ விபத்து நடந்த சில நாட்களிலேயே, செவ்வாய்க்கிழமை மதியம் ராதே ஷியாமின் உயிரும் பிரிந்தது. "எல்லாம் முடிந்துவிட்டது" என அவரது உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

அடுத்த மாதம் குடும்பத்தில் நடைபெறவிருந்த திருமணத்திற்காக மகிழ்ச்சியோடு காத்திருந்த ஒட்டுமொத்த குடும்பமும் ஒரே வாரத்தில் முற்றிலும் அழிந்துபோன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'ட்ரம்பின் ஒப்பந்தம் எங்களைக் கட்டுப்படுத்தாது' - ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் முரண்படும் இஸ்ரேல்

வருகிற 19-ம் தேதி ஈரான் அமைதி ஒப்பந்தம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இந்த நேரத்தில் ஈரான் போரின் முக்கிய தரப்புகளில் ஒன்றான இஸ்ரேல் தனது கர... மேலும் பார்க்க

குழந்தை பாலியல் வன்கொடுமை: 'இந்தச் சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டிருக்கிறார்' காவல்துறை விளக்கம்

கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்டு உயிரிழந்த கொடூரச் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் நேற்று (ஜூன்.14) மாலை 3 வயது குழந்... மேலும் பார்க்க

‘’உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாக பார்க்கும் தலைமை” - எடப்பாடியை விமர்சித்த சி.விஜயபாஸ்கர்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக விமர்சிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.தவெக ஆட்சிக்கான நம்பிக்கை தீர்மானத்தில் ஆத... மேலும் பார்க்க

`இன்னுயிரையும் பொருட்படுத்தாத அர்ப்பணிப்பு'- கீர்த்தி சக்ரா தேனி ராணுவ வீரரை கௌரவித்த முதல்வர் விஜய்

கீர்த்தி சக்ரா (Kirthi Chakra) என்பது இந்தியாவில் அமைதிக்காலத்தில் வழங்கப்படும் இரண்டாவது மிக உயரிய ராணுவ விருது ஆகும். போர்க்களத்தில் அல்லாமல், மற்ற இடங்களில் நிகழும் அசாதாரண வீர தீரச் செயல்களுக்காகவ... மேலும் பார்க்க

`கூகுளின் ரத்தக்கறை.!' - சுந்தர் பிச்சையை புறக்கணித்த ஸ்டான்ஃபோர்டு மாணவர்கள் - காரணம் தெரியுமா?

கலிஃபோர்னியாவின் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா. உலகமே உற்றுநோக்கும் அந்த மேடையில் சிறப்பு விருந்தினராகப் பேச வருகிறார் கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி ... மேலும் பார்க்க

அஸ்ஸாமில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் புதிதாக ஆதார் கார்டு பெறத் தடை; ஏன் தெரியுமா?

அஸ்ஸாமில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் புதிதாக ஆதார் கார்டு பெற தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைக் கடந்த சனிக்கிழமை (ஜூன் 13), அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.என்ன அறிவ... மேலும் பார்க்க