செய்திகள் :

'பாஜக புயலை மீறி 82 வயதில் 10வது வெற்றி' - யார் அந்த திரிணாமுல் வேட்பாளர்?

post image

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெறும் 80 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று தோல்வியைத் தழுவி இருக்கிறது.

இந்தத் தோல்வி அந்தக் கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. அதேசமயம் பா.ஜ.க-வை விட வெறும் 5 சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட முக்கிய தலைவர்கள் தோல்வி அடைந்தாலும் மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய வேட்பாளர் சோபந்தேப் சட்டோபாத்யாய் இத்தேர்தலில் 10வது முறையாக வெற்றி பெற்று மம்தா பானர்ஜியின் நம்பிக்கையைக் காப்பாற்றி இருக்கிறார்.

பாலிகங்கா தொகுதியில் அவர் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் கிடைத்த வாக்குகளை விட இந்தத் தேர்தலில் கிடைத்த வாக்குகள் எண்ணிக்கை சற்று குறைந்து இருந்தாலும், வெற்றியைத் தக்கவைத்துக்கொண்டார்.

மம்தா பானர்ஜி 1998ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய பிறகு நடந்த இடைத்தேர்தலில் அக்கட்சி சார்பாக வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் சட்டோபாத்யாய்மட்டும்தான்.

சட்டோபாத்யாய்
சட்டோபாத்யாய்

சட்டோபாத்யாய் தனது அரசியல் பயணத்தை 1960களில் கல்லூரி நாட்களில் தொடங்கினார். அவர் முதன்முதலில் 1991ம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளராக பருய்பூர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் நுழைந்தார்.

அதன் பிறகு 1996 இல் அதே தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது அரசியல் வாழ்க்கையில், அவரது தொகுதி பல முறை மாறியிருக்கிறது. அது பருய்பூர், ராஷ்பிஹாரி, பாபானிபூர், கர்தா அல்லது பாலிகங்கே என எதுவாக இருந்தாலும், கட்சியின் முடிவை அவர் கேள்வியின்றி ஏற்றுக்கொண்டார்.

அப்படி ஏற்றுக்கொண்டதோடு அந்தத் தொகுதியில் வெற்றிக்கனியைப் பறித்துக்கொடுக்கவும் அவர் தயங்கியதில்லை. இந்த முறை, அவரது முன்னாள் சட்டமன்றத் தொகுதிகளை பாஜக வேட்பாளர்கள் வென்றாலும், அவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வெற்றி குறித்து சட்டோபாத்யாய் கூறுகையில், ''நான் பிரசாரம் செய்யத் தொடங்கும் முன்பே இந்தப் பகுதி மக்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள், இது எனக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசாக உணர்கிறேன்.

எங்களது கட்சி வேட்பாளர்கள் குறிப்பாக மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தது மிகவும் வருத்தமாக இருக்கிறது'' என்று தெரிவித்தார்.

தொகுதிகள் மாறினாலும் தொடர்ந்து 10வது முறையாக சட்டோபாத்யாய் தனது 82வது வயதில் இத்தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறார்.

திமுக - அதிமுக கூட்டணி? "பாஜக-வைத் தூண்டும் அதிமுக; துரோகத்தையும் மீறி நாங்கள்.."- கலாநிதி வீராசாமி

'என்னது திமுகவும், அதிமுகவும் கூட்டணியா?' என்பதுதான் நேற்றைய இரவு முதல் இன்று காலை வரை இந்தியா முழுவதும் பேசப்பட்ட 'ஹாட்' டாபிக். "தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கட்டும். அவரது ஆட்சியை திமுக ஆறு மாதங்கள... மேலும் பார்க்க

Stalin: "விஜய் ஆட்சி அமைக்கட்டும்; திமுக தொந்தரவு செய்யாது" - சர்ச்சைகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி

திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கப் போகிறது... அதிமுக ஆளும் கட்சியாகச் செயல்பட, திமுக எதிர்க்கட்சியாகச் செயல்படும்... முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்... தவெக தலைவர் விஜய்க்... மேலும் பார்க்க

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திமுக - அதிமுக கூட்டணி? | Live

'திமுக எதிர்க்கட்சிதான்!'திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி 'திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்' என ட்வீட் செய்திருக்கிறார்.திமுக முன்னாள் எம்.பியின் ட்வீட்!தி... மேலும் பார்க்க

'விலக்கப்பட்ட விஜய்யின் கான்வாய் பாதுகாப்பு?; கூட்டு சேரும் திமுக - அதிமுக?' - நிலவரம் என்ன?

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரி விஜய் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு... மேலும் பார்க்க

விஜய்க்கு எதிராக திமுக - அதிமுக கூட்டு? திரை மறைவில் நகர்த்தப்படும் காய்கள்! - பின்னணி என்ன?

ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் நாளை ஆட்சியமைக்க உரிமைக் கோரிய நிலையில், ஆளுநர் இன்னமும் எந்த முடிவையும் சொல்லவில்லை. தவெகவிடம் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் யாரென ஆளுநர் பட்டியல் கேட்டதாகவு... மேலும் பார்க்க