செய்திகள் :

'பாஜக மதவெறி அரசியலுக்கு முதல் கள பலி' - திருமாவளவன் விமர்சனம்

post image

கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "100 நாள் வேலை திட்டத்தை அழிப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துவிட்டது. பாஜக அரசியலில் தரம் தாழ்ந்துவிட்டது. பாஜக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே

காந்தியடிகளை சிறுமைப்படுத்துவதில் குறியாக இருக்கிறார்கள். நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்று கொண்டாடுகிறார்கள். 100 நாள் வேலை திட்டத்துக்கு 'ஜி ராம் ஜி' என்று பெயர் சூட்டியுள்ளனர்.

'ஹே ராம்' என்று சொன்ன காந்தியின் பெயரை நீக்கியுள்ளனர்.

காந்தி மீது வெறுப்பை உமிழ்கிறார்கள்.

100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியை பாஜக படிப்படியாக குறைத்து வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 100 நாள் வேலை திட்டத்தில் ஒருநாள்கூட வேலை கிடைப்பதில்லை. தற்போது 125 நாள்கள் வேலையை உயர்த்தியுள்ளதாக ஏமாற்றுகின்றனர்.

திருமாவளவன்

இந்த நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதைக் கண்டித்து திமுக கூட்டணி சார்பில் வருகிற 24-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் கலந்துகொள்கிறேன். விசிக சார்பில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரு மாவட்டச் செயலாளர் வீதம், 234 மாவட்டச் செயலாளர்கள் நியமித்துள்ளோம். அதைத் தொடர்ந்து அமைப்பு ரீதியான பதவிகள் நியமிக்கப்படவுள்ளன.

அதன் பிறகு தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துவோம். எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மூலம் நீக்கப்படுவோர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் நாட்டின் பூர்வீக குடிமக்கள். வாக்குரிமையைப் பறித்து, பிறகு குடியுரிமையை பறிக்க முயற்சிக்கிறார்கள். பாஜகவுக்கு ஏதோ உள்நோக்கம் உள்ளது

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி இதை செய்கிறார்கள். இது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது. திருப்பரங்குன்றத்தில் பூர்ணசந்திரன் இறந்தது கவலை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். பூர்ணசந்திரன் குடும்பத்தினருக்கு இழப்பீடு, அரசு பணி வழங்கி தமிழ்நாடு அரசு ஆதரிக்க வேண்டும். பாஜகவின் மத வெறி அரசியலுக்கு இது முதல் கள பலி. இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறார்களோ என கவலையளிக்கிறது." என்றார்.

'நாங்க குரைக்கிற நாய் கிடையாது' - மீண்டும் அண்ணாமலையை சீண்டிய தவெக அருண்ராஜ்

தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். கூட்டணிக்காக ஒரு குழு அமைக்கப்படும்.அண்ணாமலை தவெகவை தொடர்ந்து ... மேலும் பார்க்க

"கக்கூஸ் கழுவத்தான் கண்ணகி நகர்ல தூக்கி போட்டீங்களா?" - கொந்தளிக்கும் மறுகுடியமர்வு மக்கள்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லையென்று சென்னையிலுள்ள கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஆகிய குடியிருப்புப் பகுதி மக்களைத் திரட்டி சென்னை ... மேலும் பார்க்க

மகா. உள்ளாட்சித் தேர்தல்: 134 நகராட்சிகளை ஆளும் பாஜக கூட்டணி முன்னிலை; உத்தவுக்குப் பெரும் பின்னடைவு

மகாராஷ்டிரா முழுவதும் உள்ள நகராட்சிகளுக்குக் கடந்த 2ம் தேதி தேர்தல் நடந்தன. சில நகராட்சிகளுக்குத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு நேற்று தேர்தல் நடத்தப்பட்டன. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 10 மண... மேலும் பார்க்க

கர்நாடகா: "நானே முதல்வராகத் தொடர்வேன்" - சித்தராமையா விடாப்பிடி; டி.கே. சிவகுமாரின் பதில் என்ன?

மீண்டும் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் இடையே மோதல் போக்கு தொடங்கியுள்ளது.சில மாதங்களுக்கு முன்பு, முதலமைச்சர் நாற்காலிக்காக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்தது. பி... மேலும் பார்க்க

பட்டமளிப்பு விழாவில் பெண்ணின் ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்; 'பணியில் சேரவில்லை' - மீண்டும்‌ சர்ச்சை

இந்த வாரத்தின் தொடக்கத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆயுஷ் மருத்துவப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.அங்கே பட்டம் வாங்க வந்த முஸ்லிம் பெண் ஒருவரின் ஹிஜாப்பைப் பிடித்து இழுக்க முயன்றார். இ... மேலும் பார்க்க

நாமக்கல்: தவெக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் நீக்கம்; பொதுச்செயலாளர் ஆனந்த் அதிரடி; என்ன நடந்தது?

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் ஜே.ஜே.செந்தில்நாதன். தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் கூட்ட... மேலும் பார்க்க