செய்திகள் :

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமிக்கு ரூ.35 லட்சம் கடன்; சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

post image

வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிரமாணப் பத்திரத்தில் இருந்த வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அதன்படி முதல்வர் ரங்கசாமிக்குத் தற்போதைய கையிருப்புத் தொகை ரூ.33,339/-. மேலும் எஸ்.பி.ஐ வங்கிக் கணக்கில் ரூ.49,632/-, ஹெச்.டி.எஃப்.சி வங்கிக் கணக்கில் ரூ.98,241/- இருக்கிறது.

இவற்றுடன் இரண்டு யமஹா பைக்குகளும், ஹோண்டா சிட்டி, கியா கார்னிவல் என இரண்டு கார்களும் இருக்கின்றன. மேலும் தலா 12 கிராமில் ஒரு செயின், ஒரு மோதிரம் என ரூ.21,25,752/- மதிப்புடையவை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

முதல்வர் ரங்கசாமி
முதல்வர் ரங்கசாமி

அதேபோல தட்டாஞ்சாவடி பகுதியில் ரூ.8 கோடி மதிப்பில் 20,000 சதுர அடியில் ஒரு இடமும், ரூ.12 கோடி மதிப்பில் 25,000 மற்றும் 40,000 சதுர அடியில் இரண்டு இடங்களும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

அதில் 2,400 சதுர அடியில் ரூ.28 லட்சம் மதிப்பில் ஒரு கட்டிடம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.27.78 கோடி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல கோகுலகிருஷ்ணன் மற்றும் வேல்முருகன் உள்ளிட்ட இருவரிடம் ரூ.35 லட்சம் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் முதல்வர் ரங்கசாமி.

தேர்தல் விதியை மீறி பரிசுப்பொருள்: வேலூர் மேயருக்கு போலீஸ் சம்மன்; திமுக எம்எல்ஏ-வும் சிக்குகிறாரா?

வேலூர் சத்துவாச்சாரியில், கடந்த 19-ம் தேதி, தேர்தல் நடத்தை விதிகளை மீறி பரிசுப்பொருள் வழங்கியதாக, வேலூர் மாநகராட்சி தி.மு.க மேயர் சுஜாதா உள்ளிட்ட மூன்று பேர் மீது `பி.என்.எஸ் 173 - தேர்தல்கள் தொடர்பான... மேலும் பார்க்க

"நான் கும்பிட்டா முகத்தைத் திருப்பிடுவாங்க மம்தா பானர்ஜி" - கொல்கத்தா ஐஏஎஸ் அதிகாரி முருகன் பேட்டி

கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மத்திய அரசின் தேயிலை வாரியத்தில் டெபுடி சேர் பெர்சனாகப் பணிபுரிந்து வருபவர் சி.முருகன் ஐ.ஏ.எஸ்.சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கத்தில் அரசி... மேலும் பார்க்க

'8 பெண்களின் பகிரமுடியா அந்தரங்க வீடியோக்கள், வாட்ஸ்அப் சாட்கள்' - மதூர் சத்யா சிக்கியது எப்படி?

சிபிஐ கட்சியைச் சேர்ந்தவரும் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு பிரபலமானவருமான மதூர் சத்யாவின் மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகாரில் நேற்று முன்தினம் காவல்துறையினர் அவரைக் கைது செய்திருந்தனர். மதூர்... மேலும் பார்க்க

கேரளம்: "பாஜக - சிபிஎம் இடையே பரஸ்பர உடன்பாடு" - குற்றம்சாட்டும் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன்

கேரள மாநிலத்தில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில் தாமதமாக வேட்பாளர்களை அறிவித்திருந்தது காங்கிரஸ். இன்றும், திங்கள் கிழமையும் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய காங்கிரஸ் வேட்பாளர்களுக்... மேலும் பார்க்க

"CSK-விற்கு ஏன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் விளையாடவில்லை?" - ஸ்டாலினைப் போராடச் சொல்லும் TTV

கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இப்போது அங்கங்கே பயணம், பிரசாரம் என அரசியல் களப் பரபரப்பிற்குச் சொல்லவே வேண்டாம். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டெல்லி பயணம் ... மேலும் பார்க்க

”கூட்டணிக்காக விஜய் வீட்டு வாசலைத் தட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி” - ஓ.பன்னீர்செல்வம் தாக்கு

விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூரில் தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்நடைபெற்றது. அமைச்சர்கள் சாத்தூர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், முன்னாள் முதல்வர்ஓ.பன்னீர்செ... மேலும் பார்க்க