செய்திகள் :

`பெண் பிள்ளையை ஏன் கிரிக்கெட்டுக்கு அனுப்புறீங்க?'- உலக சாதனை படைத்த தீப்தி சர்மாவின் நெகிழ்ச்சி கதை

post image

2026 மகளிர் ஆசிய கோப்பை போட்டியில் தாய்லாந்து அணிக்கு எதிராக 0 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார் தீப்தி சர்மா. இதன்மூலம் சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (171*) வீழ்த்திய வீராங்கனை என்ற உலக சாதனைப் படைத்திருக்கிறார்.

தீப்தி சர்மாவிற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில் அவரது கிரிக்கெட் பயணம் எப்படி தொடங்கியது என்பது குறித்து பார்ப்போம்.

தீப்தி சர்மா தலைநகர் டெல்லியின் ஆக்ராவின் அவத்பூரி பகுதியை சேர்ந்தவர். 8 வயதில் தன் அண்ணன் சுமித் சர்மா கிரிக்கெட் பயிற்சிக்கு சென்றபோது அவருடன் சென்றிருக்கிறார்.

தீப்தி சர்மா
தீப்தி சர்மா

அப்போது ஒரு நாள் பந்து ஒன்று அவர் பக்கம் உருண்டு வந்திருக்கிறது. அப்பந்தை மிக துல்லியமாக திருப்பி வீசியிருக்கிறார். அந்த ஒரு பந்துவீச்சு தான் அவரது வாழ்க்கைப் போக்கையே மாற்றியிருக்கிறது.

"பெண் பிள்ளையை ஏன் கிரிக்கெட் அனுப்புறீங்க, படிக்க வச்சு டாக்டர் , இன்ஜினியர் ஆக்கலாமே" என்று அக்கம்பக்கத்தினர் அவர் அப்பாவிடம் கூறியிருக்கின்றனர். ஆனால், அப்பா பகவான் சர்மா யாரையும் பொருட்படுத்தாமல் மகளுக்கு ஆதரவாக நின்றிருக்கிறார்.

அப்பாவோடு சகோதரர் சுமித் சர்மாவும் தங்கைக்கு ஆதரவாக நின்றிருக்கிறார். சுமித் ஒரு வேக பந்துவீச்சாளராக UP- அணிக்கு விளையாடியவர். 2012-ல் தீப்தியின் தொடர் பயிற்சி குறைவதைப் பார்த்து, தன் வேலையை விட்டுவிட்டு முழுநேரமாக தங்கைக்கு பயிற்சி கொடுக்க முடிவு செய்திருக்கிறார்.

உறவினர்கள் 'படித்த பையன் ஏன் ஒரு பொண்ணு கிரிக்கெட்டுக்காக வேலையை விடணும்' என்று விமர்சித்திருக்கின்றனர். அந்த 2 வருடங்கள் தான் தீப்தியின் முக்கியமான காலகட்டமாக இருந்திருக்கிறது.

ஆரம்பத்தில் மிதவேக பந்து வீச்சாளராக இருந்த தீப்தி சுமித் அறிவுரையை கேட்டு ஆஃப் ஸ்பின்னுக்கு மாறியிருக்கிறார். இதுவே அவருக்கு கேம் சேஞ்சார் ஆனது. 2014, சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்தியாவில் இரண்டாவது சிறந்த பெண் பந்துவீச்சாளராக தீப்தி சர்மா தனது வெற்றிப் பயணத்தை தொடங்குகிறார்.

தீப்தி சர்மா
தீப்தி சர்மா

2016-ல் இலங்கைக்கு எதிராக 6/20 எடுத்து, ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்திய வரலாற்றிலேயே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய மிக இளம் வயது வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார்.

அதன்பிறகு, 2025 ODI உலக கோப்பை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காக்கு எதிராக 58 + 5/39 எடுத்து இந்தியாவின் முதல் மகளிர் உலக கோப்பை வெற்றிக்கு காரணமானார்.

தவிர அவர் தனது கல்வியையும் கைவிடவில்லை, ஆக்ரா கல்லூரியில் தனது பட்டபடிப்பை முடித்தார். அதைதொடர்ந்து, காவல்துறையில் துணைக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்ற தொடங்கினார். இன்று சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (171*) வீழ்த்திய வீராங்கனை என்ற உலக சாதனைப் படைத்து, இளம் வீராங்கனைகளுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார்.

வாழ்த்துகள் தீப்தி.!

`எல்லாம் நல்லாத்தானே போச்சு... ஏமாற்றம்!' – கேப்டன் பதவி பறிப்பு குறித்து சூர்யகுமார் யாதவ் வேனனை

இந்திய டி20 அணியின் கேப்டனாக தொடர்ந்து பயணிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், 2026 டி20 உலகக் கோப்பையை வென்ற சில மாதங்களிலேயே அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பே... மேலும் பார்க்க

TNPL 2026 Final: 'இறுதிப்போட்டியில் இப்படி ஓர் ஆதிக்கமா?' - மதுரையை வீழ்த்தி சாம்பியனான கோவை!

இறுதிப்போட்டி என்றாலே பரபரப்பு இருக்கும் அதுவும் கோப்பையை முடிவு செய்யும் ஆட்டம் என்றால், கடைசி பந்து வரை யார் பக்கம் ஆட்டம் திரும்பும் என்று கணிக்க முடியாது. ஆனால் சேப்பாக்கத்தில் நேற்று நடந்த TNPL 2... மேலும் பார்க்க

TNPL 2206 : திருச்சியை திணறடித்த ஹாட்ரிக் விக்கெட்... சாதனை படைத்த தீபன் லிங்கேஷ்!

தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2026 தொடர் இளம் வீரர்களுக்கு தங்கள் திறமையை நிரூபிக்க சிறந்த மேடையாக மாறியுள்ளது. பேட்ஸ்மேன்கள் சதம், அரைசதம் விளாசி கவனம் ஈர்த்து வரும் நிலையில், பந்துவீச்சில் அரிய சா... மேலும் பார்க்க

IND Vs SL டெஸ்ட்: 250 ஓவர்கள் ஃபீல்டிங்... “வேறு என்ன செய்திருக்க முடியும்?” – சுப்மன் கில் பதில்!

இந்தியா–இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 503/9 டிக்ளேர் செய்ய, இலங்கை முதல் இன்னிங்ஸில் 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஃபாலோ-ஆன் பெற்ற இல... மேலும் பார்க்க

TNPL 2026: முதல் 3 பந்தில் 3 விக்கெட்... சுருண்ட திருச்சி! இறுதிப்போட்டிக்குள் கெத்தாக நுழைந்த கோவை!

ஒரு பக்கம் 183 ரன்கள்... மறுபக்கம் 99 ரன்கள்! அதிலும் திருச்சி அணியின் முதல் மூன்று பேட்டர்களும் சந்தித்த முதல் மூன்று பந்துகளிலேயே அடுத்தடுத்து ஆட்டமிழந்ததுதான் இந்தப் போட்டியின் மிகப்பெரிய திருப்பம்... மேலும் பார்க்க

“கிரிக்கெட் களம்; மோதல் களம் அல்ல!”- ஜெய்ஸ்வால்–அசிதா பெர்னாண்டோ மோதலுக்கு முன்னாள் வீரர்கள் கண்டனம்

இந்தியா–இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ இடையே ஏற்பட்ட மோதல் சர்ச்சையை ஏற்படுத்த... மேலும் பார்க்க