செய்திகள் :

மகளை வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டணை - குற்றம் நிரூபிக்கப்பட்டது எப்படி?

post image

நெல்லை மாவட்டம், வள்ளியூரைச் சேர்ந்த 43 வயதான மரம் வெட்டும் தொழிலாளி. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் முதல் மனைவியைப் பிரிந்து இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வந்த தொழிலாளிக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இதில், மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இரண்டாவது மகளுக்கு 15 வயதாகிறது. இவர், 8-ம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டார். தினமும் காலையில் அச்சிறுமியின் தாய், அருகிலுள்ள தோட்டத்திற்கு வேலைக்குச் சென்று விடுவார். இதனால் சிறுமி, சமைப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட வேலைகளைச் செய்வார். அவரது தந்தை மரம் வெட்டிவிட்டு மதியம் வீட்டிற்கு வந்து சாப்பிடுவது வழக்கம்.

நெல்லை நீதிமன்றம்

இந்த நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி சிறுமியின் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவரது தாயார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்ப்பட்டார். அங்கு பரிசோதித்ததில் சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 2024-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி சிறுமியின் தாயார் கோயிலுக்குச் சென்றிருந்த போது சிறுமியை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.

இந்த சம்பவத்தை வெளியே சொல்லக்கூடாது என தந்தை மிரட்டியதும், பல முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமியின் கருவில் உருவான சிசுவின் டி.என்.ஏ மாதிரியும், தந்தையின் டி.என்.ஏ மாதிரியும் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. 7 மாத ஆய்வுக்குப் பிறகு கடந்த அக்டோபர் 10-ம் தேதி வெளியான முடிவில் சிறுமியின் கர்பத்திற்கு தந்தைதான் காரணம் என்பது தெரிய வந்தது. நெல்லை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த 11 மாதங்களாக நடந்து வந்தது. இந்த நிலையில், நீதிபதி சுரேஷ்குமார் 66 பக்க தீர்ப்பினை வழங்கினார்.

நீதிமன்ற வளாகம்

”இந்த வழக்கில் நீதிமன்றம் குறைந்தபட்ச தண்டனை வழங்க நினைத்தாலும், மனைவியும் பாதிக்கப்பட்ட சிறுமியும் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். சொந்த மகளையே தந்தை வன்கொடுமை செய்தை ஏற்க முடியாது. அதனால், அவருக்கு உச்சபட்ச தண்டனையான தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது” என தீர்ப்பில் கூறியுள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரம்: `நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்த புத்தகத்துக்கு தடை'- உயர் நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தைச் சுட்டிக்காட்டி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம், சென்னை 49-வது புத்தக கண்காட்சியில் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் : ``இரண்டு காரணங்களால் இந்த தீர்ப்பு செல்லாது" - வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

திருப்பரங்குன்றம் மலைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் எனக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.இந்த உத்தரவு திருப்பரங்குன்றத்தில் பெரும் பரபரப்பை ... மேலும் பார்க்க

ஜனநாயகன் சென்சார் : `மறு தணிக்கை; நிர்பந்திக்க முடியாது' - நீதிமன்ற விசாரணையில் நடந்தது என்ன?

அ.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள `ஜனநாயகன்' திரைப்படம் வரும் ஒன்பதாம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், படத்திற்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை எனவு... மேலும் பார்க்க

`அவர்கள் நீதித்துறையின் அடித்தளம்; நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது!' - உச்ச நீதிமன்றம்

குற்றவாளி ஒருவருக்கு ஜாமீன் வழங்கியதில் தவறு செய்த நீதிபதியை, மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் பதவியில் இருந்து நீக்கியது. இதை எதிர்த்து அந்த நீதிபதி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்து இருந்தார். இ... மேலும் பார்க்க

உமர் காலித்: ``விசாரணைக்கு முந்தைய சிறை என்பது தண்டனையல்ல" - மீண்டும் ஜாமீன் மறுத்த நீதிமன்றம்

கடந்த ஐந்து வருடங்களாக சிறையில் உள்ள பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் உமர் காலித் மற்றும் சர்ஜில் இமாமுக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வடகிழக... மேலும் பார்க்க

உன்னாவ் வழக்கு: ``நீதிபதி முன்பே இறந்திருப்பேன்" - குற்றவாளிக்கு ஜாமீன் குறித்து பாதிக்கப்பட்ட பெண்!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் உன்னாப் பகுதியின் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர். 2017-ம் ஆண்டு வேலை வாங்கித் தருவதாக சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தார். இவரை எதிர்த்து சிறுமியின் குடும்பம் காவல் நில... மேலும் பார்க்க