செய்திகள் :

"தனிப்பட்ட முறையில் ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம், ஆனால்.!"- மாணிக்கம் தாகூர் சூசகம்

post image

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று காங்கிரஸில் சிலர் பேசி வந்தனர். மேலும், தவெக தலைவர் விஜய்யை காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேரில் சந்தித்துப் பேசினார்.

மாணிக்கம் தாகூரும் அதிரடி பதிவுகளை பதிவிட்டு வந்தார். இதனால் காங்கிரஸ் - தவெக-வுடன் கூட்டணி வைக்குமோ? என்ற சந்தேகங்கள் எழுந்தன.

இப்படி திமுக - காங்கிரஸ் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவிக்கொண்டே இருந்த நிலையில் சென்னை வந்த காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், "திமுக-வுடன் சேர்ந்து வகுப்புவாதச் சக்திகளை எதிர்ப்போம். திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் உள்ளது.

ராகுல் காந்தி, ஸ்டாலின்
ராகுல் காந்தி, ஸ்டாலின்

கூட்டணி தொடர்பான தனிநபர் கருத்து, காங்கிரஸ் கட்சியின் கருத்து கிடையாது. கட்சியின் அறிவுறுத்தலை மீறிப் பேசினால் காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்கும்" என்று திமுக - காங்கிரஸ் பஞ்சாயத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

இது ஒருபுறம் இருக்க, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை ஓரங்கட்டிய காங்கிரஸ் தலைமை, 30 சட்டசபை தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் ஆனால், 27 சட்டசபை தொகுதிகள், 1 ராஜ்யசபா இடங்கள் மட்டுமே தர முடியும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், திமுகவுடன் 2வது கட்ட பேச்சுவார்த்தையை காங்கிரஸ் இன்று மேற்கொள்கிறது.

இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி தலைமை எடுக்கும் முடிவை அனைவரும் ஏற்போம் என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " தனிப்பட்ட முறையில் ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம். ஆனால் தனிநபர்களை விட கட்சி பெரியது.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

தலைமை முடிவு செய்யும் போது அதனை ஏற்றுக்கொள்வோம். ஏனெனில் ஒற்றுமையே நமது மிகப்பெரிய சக்தி" என்று பதிவிட்டிருக்கிறார். இன்று திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிடும் என்பதை தான் சூசகமாக பதிவிட்டிருக்கிறார் என்று பேசப்படுகிறது.

திமுக-வுக்கு நாகூர் ஹனீபா; எம்.ஜி.ஆருக்கு? - அரசியல் வரலாற்றைப் பேசிய கட்சிப் பாடல்கள்! | சுவடுகள் 8

அரசியல் வரலாற்றைப் பேசிய கட்சிப் பாடல்கள்!நினைவுச் சுவடுகள் 08தேர்தல்கள் என்றாலே சத்தமும் இரைச்சலும்தான். தேர்தலை ஒரு திருவிழாவாக பார்க்கும் தமிழ்நாட்டில், தேர்தல் என்பது ஆட்டமும் பாட்டமும் நிறைந்ததாக... மேலும் பார்க்க

கச்சா எண்ணெய் விவகாரம்: `இன்னும் எவ்வளவு காலம் அமெரிக்காவின் மிரட்டல் தொடரும்?' - காங்கிரஸ் கேள்வி

அதிபர் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்திருந்த நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், ர... மேலும் பார்க்க

ஓபிஎஸ்: `ஆதரவாளர்கள் கொடுத்த ட்விஸ்ட்!' - தேனியை விட்டுவிட்டு மதுரையில் இணைப்பு விழா! பின்னணி என்ன?

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். அதிமுகவின் விசுவாசி, ஜெயலலிதாவின் நம்பிக்கைகுரியவர், மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக இரு... மேலும் பார்க்க

`அடுத்து கியூபாதான்' - ஈரான் போரை முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கவில்லை என கூறும் டொனால்டு ட்ரம்ப்

ஈரானில் அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் போர் தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. ஈரானும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் எப்போது முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆரம்பத்தில் 5 வாரங்க... மேலும் பார்க்க

அதிமுக-விலிருந்து மேலும் ஒரு புது கட்சி! - பெங்களூரு புகழேந்தியின் புரட்சி அதிமுகவின் நோக்கம் என்ன?

பண்ருட்டி ராமச்சந்திரன், சசிகலாவைத் தொடர்ந்து அதிமுகவிலிருந்து மேலும் ஒரு புதிய கட்சியை தொடங்கியுள்ளார் வழக்கறிஞர் வா.புகழேந்தி.புரட்சி அதிமுகதிமுக-விலிருந்து பிரிந்து எம்ஜிஆர், அதிமுகவைத் தொடங்கி ஆட்... மேலும் பார்க்க