செய்திகள் :

மழைக்காலத்தில் வீசும் 'மண் வாசனை' - இதன் பின்னணியில் உள்ள அறிவியல் தெரியுமா?

post image

மழை பெய்யத் தொடங்கும்போது அல்லது மழை வருவதை போன்று இருக்கும்போது ஒரு விதமான வாசனை வருவதை நாம் அனைவரும் அனுபவித்திருப்போம்.

அந்த 'மண் வாசனை' எப்படி உருவாகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? வெறும் மண்ணும் தண்ணீரும் சேரும்போது மட்டும் இந்த வாசனை உருவாவதில்லை, இதற்குப் பின்னால் இருக்கும் அறிவியல் காரணங்கள் இங்கு தெரிந்துக்கொள்ளலாம்.

மழை பெய்யும்போது வரும் இந்த மண் வாசனைக்கு அறிவியலில் 'பெட்ரிகோர்' (Petrichor) என்று பெயர் உண்டு.. 1964ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா விஞ்ஞானிகளான இசபெல் பியர் மற்றும் டிக் தாமஸ் ஆகியோர் இந்த பெயரை உருவாக்கியுள்ளனர். இந்த வாசனைக்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணங்களையும் கண்டறிந்துள்ளனர்.

மழை
மழை

பாறை மற்றும் மண்ணில் தங்கியிருக்கும் ஒருவகை எண்ணெய் போன்ற திரவம், மழையின் போது காற்றில் கலப்பதால்தான் இந்த வாசனை வருகிறது என்று அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதாவது இந்த மண் வாசனைக்கு 'ஜியோஸ்மின்' மற்றும் '2-MIB' எனப்படும் வேதிப்பொருட்கள் இதற்கு மிக முக்கியக் காரணம் என்றும் மண்ணில் வாழும் ஒருவகை பாக்டீரியாக்களே (Streptomyces) இந்த வேதிப்பொருட்களை உற்பத்தி செய்வதாக கண்டறிந்துள்ளனர்.

வெயில் காலத்தில் மண் காய்ந்து போகும்போது, இந்த பாக்டீரியாக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள 'ஸ்போர்ஸ்' எனப்படும் விதைகளை உருவாக்குகின்றனவாம்.

மழைத்துளிகள் மண்ணில் வேகமாக தொடும்போது, இந்த வேதிப்பொருட்கள் மற்றும் பாக்டீரியாக்களின் வாசம் காற்றுடன் கலந்து மேலே எழும்புகிறது. இதுவே நமக்கு மண் வாசனையாகத் தெரிகிறது என்று  பாப்புலர் சயின்ஸ் இதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மனித மூக்கு இந்த 'ஜியோஸ்மின்' வாசனையை மிகத் துல்லியமாக கண்டுபிடிக்கும் திறன் கொண்டது என்றும் நம் முன்னோர்களுக்குத் தண்ணீர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க இந்த வாசனை உதவியிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.​

மனிதர்கள் மட்டுமல்ல, ஒட்டகங்கள் பாலைவனத்தில் நீர்நிலைகளைக் கண்டறியவும், சில பூச்சிகள் முட்டையிடத் தகுந்த இடத்தைத் தேடவும் இந்த வாசனையைப் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை நாட்கள் மண்ணும் தண்ணீரும் சேரும்போது தான் மண் வாசனை வருகிறது என்று தானே நினைத்திருந்தோம்..!

ஜப்பானில் புதிய வகை `நீல சாமுராய்' ஜெல்லிமீன் கண்டுபிடிப்பு - மாறிவரும் கடல் நீரோட்டம் காரணமா?

ஜப்பானின் வடக்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரிய வகை நீல நிற 'சாமுராய்' ஜெல்லிமீன், கடல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 'ஜப்பானின் செண்டாய் வளைகுடா பகுதியில்... மேலும் பார்க்க

`பாட்டு கேட்டால் மாடுகள் அதிகம் பால் கறக்குமா?' - அறிவியல் சொல்லும் உண்மை இதுதான்!

மனிதர்களுக்குத் தான் இசை ரசனை இருக்கும் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் பண்ணைகளில் வளர்க்கப்படும் பசுக்களுக்கும் இசை மீது ஒரு தனி ஈர்ப்பு இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? குறிப்பா... மேலும் பார்க்க

மனிதர்களைப் போல பூச்சிகளுக்கும் மன அழுத்தம் ஏற்படும்; ஆய்வில் வெளியான தகவல்

எறும்புகள், தேனீக்கள், வண்டுகள் என சிறய வகை பூச்சிகளுக்கும் மனிதர்களைப் போலவே வலி, மகிழ்ச்சி மற்றும் மன அழுத்தம் போன்ற உணர்வுகள் இருக்கலாம் என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.பூச்சிகள், உள்ளுணர்வு அட... மேலும் பார்க்க

குரல் இனிது... ஆனால் குணம்? - ராஜதந்திரிகளான குயில்களின் மறுபக்கம்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Amur Falcon: 150 கிராம்தான் எடை; இந்தியா டு சோமாலியா - 5 நாள்களில் 5000 கி.மீ பயணித்த அமூர் பருந்து

பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கிலோமீட்டர் வலசை செல்வதை நாம் அறிவோம். இந்த வலசை நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு சாகசங்கள் நிறைந்தது, சவாலானது, அதீத பொறுமையையும் உழைப்பையும் விடா முயற்சியையும்... மேலும் பார்க்க

சீனா: "இந்த மாத்திரை சாப்பிட்டால் 150 ஆண்டுகள் வாழலாம்" - சீன நிறுவனத்தின் கண்டுபிடிப்பு!

சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் நடந்த ராணுவ அணிவகுப்பில் கலந்துகொண்ட ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ்வதற்கான ஆராய்ச்சிகள் குறித்து பேசியதாக பரபரப்பாக பேசப்... மேலும் பார்க்க