செய்திகள் :

`முதல்வர் ஒரு தரப்பிற்கு ஆதரவளிப்பது என்ன நியாயம்?' - சட்டசபையில் பழனிசாமி vs வேலுமணி தரப்பு!

post image

தவெக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்தது.

தற்போது அதிமுகவில் பழனிசாமி அணி, வேலுமணி அணி என்று இரண்டு அணி உருவாகியுள்ளது.

இந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது...

"அதிமுக பொறுத்த வரை, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களை முன்னிறுத்தியே வாக்குகளைச் சேகரித்தோம்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பணியாற்றி வருகிறேன். எல்லா கட்சிகளைப் போல எங்கள் கட்சியிலும் கருத்து வேறுபாடு உண்டு.

அப்படியிருக்கையில், முதலமைச்சர் ஒரு தரப்பிற்கு ஆதரவளிப்பது எந்த விதத்தில் நியாயம்? இது ஒரு முன்னுதாரணமாக இருக்கக்கூடாது.

தேமுதிக கூறியதுபோல குதிரைப் பேரம் வழிவகுத்திருக்கிறது என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.

47 பேர் இரட்டை இலை சின்னத்தில் இருந்து வாக்குகளைப் பெற்றிருக்கின்றனர்.

தமிழ்நாடு இந்தியாவில் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு அதிமுக இட்ட அடித்தளம் மிக முக்கியமானது.

எங்களுடைய அதிமுகவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 47 சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியை விரும்பியே மக்கள் வாக்களித்துள்ளனர் என்பதை குறிப்பிடுகிறேன்.

எனக்கு கிடைத்த தகவல் படி, ஒரு சில ஆசைவார்த்தைகள் கூறி, அமைச்சர் பதவி தருகிறேன்... வாரிய தலைவர் பதவி தருகிறேன் என்று கூறியதாக கேள்விப்படுகிறேன். இது உண்மையா... பொய்யா என்று சொல்கிறேன்.

நீங்கள் தூய்மையான ஆட்சி தருவேன் என்று கூறியிருக்கிறீர்கள். அதை அப்படியே செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

எதிரி கட்சியாக அல்லாமல்... எதிர்க்கட்சியாக நாங்கள் இருக்கிறோம் என்று கூறுகிறேன்." என்றார்.

தொடர்ந்து சபாநாயகர் எஸ்.பி.வேலுமணி பேச அனுமதித்தார் "அதிமுக சார்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை வரவேற்கிறோம்.

நாங்கள் யாரும் பதவிக்கு ஆசைப்படவில்லை. மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம். அதனால், அதிமுக தவெகவிற்கு ஆதரவளிக்கிறது". என்றார்.

வேலுமணி பேச்சுக்கு எடப்பாடி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

பெரும்பான்மை நிரூபித்த தவெக: "ஆம் இது சிறுபான்மை அரசு தான்!" - முதல்வர் விஜய் பேச்சு

தமிழக வெற்றிக் கழகம் தங்களுடைய பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான 'நம்பிக்கை வாக்கெடுப்பு' இன்று (மே. 13) நடைபெற்றது. இதில் 144 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று முதல்வர் விஜய்யின் தவெக பெரும்பான்மையை நிரூப... மேலும் பார்க்க

"கூவத்தூரையே மிஞ்சுகிறது உங்கள் கூத்து; புஷ்பா படப்பாணியில்.!" - தவெகவை கடுமையாக சாடிய உதயநிதி

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளும் கட்சியாக படியேறியுள்ளது. 59 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக எதிர்க்கட்சியாக பொறுப்... மேலும் பார்க்க

Vijay : '171 பேரில் 144 ஆதரவு வாக்குகள்' நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற தவெக! - அதிமுக ஆதரவு.?

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் பெரும்பாலான தொகுதிகளை வழங்கியிருந்தாலும், பெரும்பான்மையை வழங்கவில்லை. அதனால், தவெக இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நம்பிக்கை... மேலும் பார்க்க

பதவியேற்பு விழாவில் கையெழுத்து போட மறுத்த முதல்வர் ரங்கசாமி! - 120 விநாடிகள் காத்திருந்தது ஏன்?

ஜோதிடர் குறித்துக் கொடுத்த `மேஜிக்’ டைம்..!புதுச்சேரி 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதியிலும், பா.ஜ.க 4 தொகுத... மேலும் பார்க்க

'I will Rethink about it..!' - பிரேமலதாவின் `ராஜகுரு' பேச்சுக்கு விஜய் சொன்ன பதில்!

தமிழக முதலமைச்சர் விஜய்யின்சிறப்பு அரசியல் செயலாளர்என்கிற பதவிக்கு த.வெ.க-வின் செய்தி தொடர்பாளரும், விஜயின் ஆஸ்தான ஜோதிடருமான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் செய்யப்படுவதாக தமிழக அரசின் முதன்ம... மேலும் பார்க்க

முலாயம் சிங் யாதவ் மகன் பிரதீக் யாதவ் 38 வயதில் மர்ம மரணம்! - போலீஸ் விசாரணை

சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் மகன் அகிலேஷ் யாதவ் தற்போது கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். முலாயம் சிங் யாதவின் மற்றொரு மகனான பிரதீக் யாதவ்(38) அரசியலில் ஈடுபடாமல் தொழில் செய்து வந்தா... மேலும் பார்க்க