பதவியேற்பு விழாவில் கையெழுத்து போட மறுத்த முதல்வர் ரங்கசாமி! - 120 விநாடிகள் காத...
நாட்டில் குற்றச் சம்பவங்களின் சதவிகிதம் குறைந்தாலும் சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு!
தேசிய குற்ற ஆவண காப்பக தரவவுகளின் அடிப்படையில் குழந்தைகள் உரிமை அமைப்பான 'க்ரை' (CRY) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டில் ஒட்டுமொத்த குற்றச்சம்பவஙகளின் எண்ணிக்கை 10.8 சதவிகிதம் குறைந்துள்ளது. கடந்த 2020 முதல் 66 லட்சம் குற்றங்கள பதிவான நிலையில் 2024 முதல் இது 58.86 லட்சமாக குறைந்துள்ளது.

இதே காலக்கட்டத்தில் சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் 46 சதவிகிதம் அதிரித்துள்ளன. 2020-ல் சிறார் குற்ற வழக்குகள் 1.28 லட்சமாக இருந்தது. அது 2023-ல் 1.77 லட்சமாகவும், 2024-ல் 1.87 லட்சமாகவும் கூடியுள்ளது.
சிறார்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களின் எண்ணிக்கை 1,238 ஆக பதிவாகியுள்ளது. அதில், சிறார்களை இணையத்தில் ஆபாசமாக சித்தரித்து பகிர்ந்தவர்கள் மீது 1099 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாநில அளவில் சிறார் குற்ற வழக்குகள் எண்ணிக்கையில் சத்தீஸ்கர் -266, ராஜஸ்தான்-174, டெல்லி-151, உ.பி-137, கேரளா-92 வழக்குகள் என முதல் ஐந்து இடஙகளில் இந்த மாநிலங்கள் உள்ளன.
கடந்த 2024 -ல் நாட்டில் பதிவான போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 69,191 ஆகும். அதில், 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுமியரின் எண்ணிக்கை 23,497 ஆகும்.

போக்சோ குற்றங்களில் ஈடுபட்ட நபர்களில் 99.6 சதவிகிதம் பேர் சிறுமியருக்கு முன்னரே அறிமுகமானவர்கள். அவர்களின் குடும்ப நண்பர்கள், அண்டை வீட்டினர், வீட்டுப் பணியாளர்கள் அடங்குவர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
















