செய்திகள் :

மும்பை: வெற்றி பெற்ற ஒரேமாதத்தில் அடியோடு பாஜக-வில் சேர்ந்த 12 காங்கிரஸ் கவுன்சிலர்கள்!

post image

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது படிப்படியாக உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல் கட்டமாக நகராட்சிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மும்பை அருகில் உள்ள அம்பர்நாத் நகராட்சியில் பா.ஜ.க தனித்து போட்டியிட்டது. ஆனால் அக்கட்சியால் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற முடியவில்லை. இதையடுத்து 12 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியுடன் பா.ஜ.க கூட்டணி அமைத்தது. இதற்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க மேலிடத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க வோடு கூட்டணி அமைக்க உள்ளூர் தலைவர்கள் முடிவு செய்தனர்.

இக்கூட்டணிக்கு அம்பர்நாத் விகாஷ் அகாடி என்று பெயர் வைத்தனர். இதையடுத்து கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக கூறி 12 கவுன்சிலர்களையும் கட்சியில் இருந்து காங்கிரஸ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

ரவீந்திர சவான்

எனவே 12 கவுன்சிலர்களையும் தங்களது கட்சிக்கு இழுக்கும் வேலையில் மாநில பா.ஜ.க தலைவர் ரவீந்திர சவான் ஈடுபட்டார். இதில் அனைத்து கவுன்சிலர்களுக்கும் கணிசமான அளவு பணம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்த நிலையில் 12 கவுன்சிலர்களும் மொத்தமாக பா.ஜ.கவில் சேர முடிவு செய்தனர். ஆனால் காங்கிரஸ் கவுன்சிலர்களை பா.ஜ.கவில் சேர்க்கக்கூடாது என்பதுதான் எனது கருத்து என்று பா.ஜ.க மாநில அமைச்சர் அசிஷ் ஷெலார் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து கட்சியில் விவாதிக்கப்படும் என்றும், கொள்கை ரீதியாக மாறுபட்ட கருத்துடையவர்களுடன் கூட்டணி வைப்பது சரியல்ல என்றும், அவசரப்பட்டு காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்களை பா.ஜ.கவில் சேர்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் மாநில பா.ஜ.க தலைவர் ரவீந்திர சவான் தவறான முடிவு எடுத்து இருப்பதாக அவரது பெயரை குறிப்பிடாமல் அசிஷ் ஷெலார் தெரிவித்தார். காங்கிரஸ் கவுன்சிலர்கள் பா.ஜ.கவில் சேரும் விழா ரவீந்திர சவான் தலைமையில் நடந்துள்ளது. ரவீந்திர சவானின் சொந்த ஊரான டோம்பிவலியில் 20 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் அதிகமானோர் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் ஆவர். சிவசேனா(உத்தவ்), மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா வேட்பாளர்களுக்கு பணம் கொடுத்தும், மிரட்டியும் வேட்பு மனுவை வாபஸ் பெற வைத்ததாக பா.ஜ.கவின் ரவீந்திர சவான் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பா.ஜ.கவில் சேர்ந்த கவுன்சிலர்கள் 12 பேரையும் பதவி நீக்கம் செய்ய கோரி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா: தங்கையைக் கடித்து இழுத்துச் சென்ற சிறுத்தைப்புலி; போராடிக் காப்பாற்றிய 11 வயது சிறுவன்!

மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டத்தில் உள்ள ஷிராலே அருகில் இருக்கும் உப்வாலே என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சங்கராம் பாட்டீல். இவருக்கு சிவம் (11) மற்றும் ஸ்வர்வாஞ்சலி (9) ஆகிய இரண்டு குழந்தைகள் ... மேலும் பார்க்க

குஜராத் : காந்தி நகர் சபர்மதி ஆற்றங்கரையோரம் 6 ஏக்கரில் புதிய நகரை உருவாக்கும் நடிகர் அமிதாப்பச்சன்!

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் ஒரு நேரத்தில் கடுமையான கடனில் சிக்கித்தவித்தார். ஆனால் இப்போது கடுமையாக உழைத்து கடனில் இருந்து மீண்டு பல்வேறு விதமான தொழிலில் முதலீடு செய்து வருகிறார். அமிதாப்பச்சன் அதிக... மேலும் பார்க்க

`135 கிலோவில் இருந்து 89 கிலோவாக குறைந்துவிட்டேன்' - அமைச்சர் நிதின் கட்கரி சொல்லும் ரகசியம்!

மத்திய சாலைபோக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி எப்போதும் தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பவர். நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வரும் நிதின... மேலும் பார்க்க

மரணத்தை வென்ற மனிதம்; விற்று தீர்ந்த 50 டன் சர்க்கரைக் கிழங்கு - மனைவி உயிர்காத்த கணவனின் போராட்டம்!

ஒரு தனிமனிதனின் துயரம் எப்படி ஒரு சமூகத்தின் கூட்டு முயற்சியாக மாறி, ஓர் உயிரைக் காப்பாற்றியது என்பதற்கு, சீனாவில் நடந்த இந்த உண்மைச் சம்பவம் ஒரு மிகச்சிறந்த உதாரணம். தன் மனைவியின் உயிரைக் காக்கப் போர... மேலும் பார்க்க

10 பெண் குழந்தைகளுக்குப் பிறகு ஒரு ஆண் குழந்தை; மகள்களின் பெயர்களை தந்தை மறந்து தவித்த வீடியோ வைரல்!

ஹரியானாவில் ஒரு தம்பதிக்குத் தொடர்ச்சியாக 10 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அங்குள்ள ஜிந்த் மாவட்டத்தில் இருக்கும் உஷனா என்ற இடத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் குமார்(38). இவருக்குத் திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகின... மேலும் பார்க்க

Maduro: புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவின் பக்தர்; இந்தியாவுடனான வெனிசுலா அதிபரின் ஆன்மிக தொடர்பு!

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவர் மனைவி சிலியா புளோரஸ் தம்பதியை அமெரிக்க படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தி சிறைபிடித்துச் சென்றுள்ளன. தற்போது இருவரும் அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்... மேலும் பார்க்க